முடிவுக்கு வந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் – புகைப்படத்தை பதிவிட்டு உறுதி செய்த மீனா.

0
2423
- Advertisement -

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் கடைசி நாள் ஷூட்டிங் குறித்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் டிஆர்பியில் முன்னிலையில் வகுத்து வரும் சீரியல் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”. இந்த சீரியல் அண்ணன் தம்பிகளுக்கு இடையேயான பாசக் கதையை மையமாக கொண்டது. இந்த சீரியலில் ஸ்டாலின், சுஜிதா, வெங்கட், ஹேமா ராஜ்குமார், லாவண்யா, குமரன் தங்கராஜன், சரவணன், தீபிகா என பல நடிகர்கள் நடிக்கிறார்கள்.

-விளம்பரம்-
pandianstores

அதோடு இந்த சீரியல் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக ஒளிபரப்பாகி வருகிறது. மேலும், இந்த சீரியல் ஆரம்பித்த நாளில் இருந்து இப்போது வரை விறுவிறுப்புடன் சென்று இருந்து இருக்கிறது. தற்போது சீரியலில் தனம், முல்லை, ஐஸ்வர்யா ஆகிய மூவருக்கும் குழந்தை பிறந்து விடுகிறது. அது மட்டும் இல்லாமல் அனைவரும் எதிர்பார்த்த படி பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தின் புதிய வீட்டின் புகு மனை விழாவும் சமீபத்தில் தான் நடந்தது.

- Advertisement -

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்:

எல்லோருமே தங்களுடைய பெரிய வீட்டில் செட்டில் ஆகிவிட்டார்கள். தற்போது சீரியல் மீனாவின் அப்பாவை அவருடைய இரண்டாவது மாப்பிளை பிரசாந்த் கொலை செய்துவிட்டு அந்த பலியை கதிர், ஜீவா மீது போட்டு விடுகிறார். மீனாவும் அதை நம்பி தன்னுடைய அம்மா வீட்டிற்கு வந்து விடுகிறார். பின் ஒரு கட்டத்தில் பிரசாந்த் தான் இந்த கொலையை செய்கிறார் என்ற உண்மை மீனாவிற்கு தெரிய வருகிறது. இந்த உண்மையை மூர்த்தி குடும்பத்திடம் சொல்கிறார்.

இதை கேட்டு அனைவரும் அதிர்ச்சி அடைந்து பிரசாந்தை கையும் களவுமாக பிடிக்க வேண்டும் என்று திட்டம் போடுகிறார்கள். பின் அனைவரும் நினைத்தபடி பிரசாந்த் உண்மையை சொல்கிறார். இதை ஐஸ்வர்யா மொபைலில் ரெக்கார்ட் செய்து கொள்கிறார். ஆனால், அவரிடம் இருந்து தப்பி சென்று விடுகிறார். இன்னொரு பக்கம் ஜனார்த்தன் கண்விழித்து நடந்த உண்மையெல்லாம் சொல்கிறார்.

-விளம்பரம்-

போலீஸ் அந்த ஆதாரத்தை கோர்ட்டில் ஆஜர் செய்கிறது. இதனை அடுத்து போலீஸ் கதிர்- ஜீவாவை விடுதலை செய்கிறார்கள். இனி பிரசாந்த் கைது செய்யப்படுவாரா? பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் சேருமா? மீனா தன்னுடைய வீட்டிற்கு திரும்பி வருவாரா? என்ற பல அதிரடித்திருப்பங்களுடன் சீரியல் சென்று இருக்கிறது. இந்த நிலையில் கடைசி நாள் ஷூட்டிங் புகைப்படம் தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Hema

சில வாரங்களாகவே பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் முடிவடைய இருப்பதாக சோசியல் மீடியாவில் தகவல் வந்தாகி விட்டது. சூட்டிங் முடிவடைந்து மொத்த குழுவினரும் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படம்தான் வைரலாகி இருக்கிறது. அதில் ஜனார்த்தனன் கூட தலையில் கட்டு போட்டு இருப்பது போல காண்பிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், சரவணன் விக்ரம் தான் இல்லை. அவர் தற்போது பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார். சீரியல் முடிவடைவது ரசிகர்கள் கொஞ்சம் வருத்தமாக தான் இருப்பதாக கூறி வருகிறார்கள்.

Advertisement