6 மாசம் என் கூட, பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லைக்கு டார்ச்சர் கொடுத்த இயக்குநர் – அவரே சொன்ன ஷாக்கிங் உண்மை.

0
1058
pandianstores
- Advertisement -

மீடியாவில் நடக்கும் அட்ஜஸ்ட்மெண்ட் குறித்து மனம் திறந்து சிப்பிக்குள் முத்து சீரியல் நடிகை லாவண்யா அளித்து இருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் எல்லாம் மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி குறுகிய காலத்தில் ரசிகர்கள் மத்தியில் தனெக்கென ஒரு இடத்தை பிடித்த சீரியல் சிப்பிக்குள் முத்து. இந்த சீரியல் ஒரு தெலுங்கு சீரியல்லின் ரீமேக் ஆகும்.

-விளம்பரம்-

தனது தங்கை காதல் நிறைவேறுவதற்காக மனநிலை சரியில்லாத அண்ணனை சீரியலின் நாயகி திருமணம் செய்து கொள்கிறார். அதன் பின் கதாநாயகி வாழ்க்கையில் நடக்கும் சுவாரஸ்யமே சீரியலின் கதை. இந்த சீரியல் தொடங்கிய நாளில் இருந்தே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது. சமீபத்தில் தான் சிப்பிக்குள் முத்து சீரியல் முடிவடைந்தது. இந்த தொடரில் கதாநாயகியாக நடித்து மக்கள் மத்தியில் இடம் பிடித்தவர் லாவண்யா. இவர் திருப்பூரை சேர்ந்தவர். இவர் மாடலிங் மூலம் தான் மீடியாவிற்குள் நுழைந்தார். அதனை தொடர்ந்து சிற்பிக்குள் முத்து சீரியலில் கதாநாயகியாக நடித்தார்.

- Advertisement -

சிப்பிக்குள் முத்து சீரியல் நடிகை லாவண்யா:

அது மட்டும் இல்லாமல் தற்போது இவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் சமீபத்தில் லாவண்யா பேட்டி ஒன்று அளித்து இருந்தார். அதில் அவர் அட்ஜஸ்ட்மென்ட் குறித்து கூறியிருந்தது, நான் மீடியாவில் நுழைவதற்கு முன்பு பேங்கில் தான் வேலை செய்து கொண்டிருந்தேன். அது பிடிக்காமல் எனக்கு பிடித்த வேலையை செய்யணும் என்று தான் மீடியாவை தேர்வு செய்தேன். என்னிடம் முதலில் பைக், கார் என்று எதுவும் கிடையாது. ஷூட்டுக்கு போன அந்த இடம் சரியில்லை என்று என் மனதுக்குள் தோன்றியது.

லாவண்யா அளித்த பேட்டி:

அதனால் கேப் டிரைவர் அண்ணா கிட்ட நான் எக்ஸ்ட்ராவா காசு கொடுக்கிறேன் நீங்கள் இருந்து என்னை கூட்டிட்டு போயிடுங்க என்று சொல்லிட்டு தான் அந்த இடத்துக்குள் போனேன். அந்த இடம் ரொம்ப இருட்டாக இருந்தது. அவங்க வேற வேற காஸ்டியூமில் லுக் டெஸ்ட் பண்ணனும் என்று சொல்லி ஏழு காஸ்டியூம் கொண்டுவர சொன்னார்கள். அதனால் நான் உள்ளே ஒரு கார்மென்ட் போட்டே தான் போயிருந்தேன். டிரஸ் மாத்தும்போது கேமரா இருக்கும் என்கிற எண்ணம் எப்பவும் எனக்கு இருக்கும். கார்மெண்ட் போட்டிருந்ததால் தைரியமாக டிரஸ் மாத்தப் போனேன். பின் அவங்க என்கிட்ட என்னோட கான்டெக்ட் வாங்குவதில் மட்டும் தான் குறியாகவே இருந்தார்கள்.

-விளம்பரம்-

அட்ஜ்ஸ்ட்மென்ட் குறித்து லாவண்யா சொன்னது:

அதனால் காண்டாக்ட் எதுவும் கொடுக்காமல் அங்கிருந்து உடனே கிளம்பி போய் விட்டேன். அதே மாதிரி நான் வீட்டில் இருந்து வந்து பணரீதியாக கஷ்டப்படுகிறேன் என்று சிலருக்கு தெரியும். அந்த வகையில் ஒரு காஸ்டிங் இயக்குனர் எனக்கு பழக்கம். அவர், நீ என்னிடம் மட்டும் காண்டாக்ட்டில் 6 மாதம் இருந்தால் நீ வேற லெவலுக்கு போவாய் என்று சொன்னார். அதாவது, ஆறு மாசம் அவன் கூடவே தங்கி இருக்கணும் என்று சொன்னார். அது மட்டும் இல்லாமல் மீடியாவில் 3 நாள் பொண்ணுங்க பேரை சொல்லி அவங்க ஒண்ணுமே இல்லாமல் இருந்தார்கள். இப்ப பாரு வீடு, கார் எப்படி எல்லாம் இருக்கிறார்கள். நீயும் அப்படி இருக்கலாம் என்று சொன்னார்.

பெண்கள் பாதுகாப்பு குறித்து சொன்னது:

ஆனால், நான் அவன் சொல்லுவதற்கு எதுவுமே ரியாக்ட் பண்ண வில்லை. நான் உடனே ரியாக்ட் பண்ணி இருந்தால் இந்த பொண்ணு தப்புன்னு சொல்லிவிடுவான். நான் மீடியாவில் என்ட்ரியான நேரம் என்பதால் அப்போதெல்லாம் அமைதியாக இருந்தேன். பின் அவன் ஒரு சூட்டுக்கு காசு போட்டு விட்டு என்னை வர சொன்னார். ஆனால், அந்த சூட்டுக்கு அவன் வர வேண்டிய அவசியம் இல்லை. இருந்தாலும், அவன் வந்திருந்தான். நான் எப்படி பாதுகாப்பாக வருவோம் என்பதை மட்டும் தான் யோ

Advertisement