யூடுயூப் வீடியோவால் வந்த வினை, உளறி கொட்டிய ஐஸ்வர்யா – உண்மை தெரிந்தது அதிர்ச்சி அடைந்த மூர்த்தி.

0
983
pandian
- Advertisement -

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் பரபரப்பான உச்சகட்டத்தில் மூர்த்தி உண்மையை அறிந்திருக்கும் எபிசோடு தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் டிஆர்பியில் முன்னிலையில் வகுத்து வரும் சீரியலில் ஒன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்”. இந்த சீரியல் அண்ணன் தம்பிகளுக்கு இடையேயான பாசக் கதையை மையமாக கொண்டது. இந்த சீரியலில் ஸ்டாலின், சுஜிதா, வெங்கட், ஹேமா ராஜ்குமார், லாவண்யா, குமரன் தங்கராஜன், சரவணன் என பல நடிகர்கள் நடிக்கிறார்கள்.

-விளம்பரம்-

அதோடு இந்த சீரியல் ஆரம்பித்த நாளில் இருந்து இப்போது வரை விறுவிறுப்புடன் சென்று கொண்டு இருக்கிறது. தற்போது சீரியலில் தனம் கேன்சர் ட்ராக் தான் சென்று கொண்டு இருக்கிறது. பல பிரச்சனைகளுக்கு பிறகு கண்ணன்-ஐஸ்வர்யா தங்களுடைய வீட்டிற்கே வந்து விடுகிறார்கள். முதலில் முல்லைக்கு பெண் குழந்தை பிறந்து விட்டது. அதற்கு பின் ஐஸ்வர்யாவிற்கு பெண் குழந்தை பிறக்கிறது. இதனிடையே தனத்திற்கு நெஞ்சில் வலி ஏற்படுகிறது. இதனால் தனம்-மீனா மருத்துவமனைக்கு செல்கிறார்கள்.

- Advertisement -

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்:

அப்போது தனத்திற்கு மார்பக புற்றுநோய் இருப்பது தெரிகிறது. இதனால் இருவரும் மனம் உடைந்து விடுகிறார்கள். உண்மையை சொல்ல வேண்டாம் என்று தனம் மீனாவை தடுக்கிறார். ஆனால், தனத்திற்கு இருக்கும் பிரச்சனை முல்லைக்கு தெரிய வருகிறது. இதனால் முல்லையும் மீனாவும் சேர்ந்து தனத்திற்கு ஆபரேஷன் செய்ய திட்டம் போடுகிறார்கள். பிறகு தனத்திற்கு டிராமா செய்து குழந்தை பிறக்க ஏற்பாடு செய்தார்கள். ஆபரேஷன் செய்து நல்ல படியாக தனத்திற்கு பெண் குழந்தை பிறந்திருக்கிறது.

தனத்தின் நிலைமை:

ஆனால், சீக்கிரமாகவே தனத்திற்கு ஆபரேஷன் செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள். இதனால் வீட்டில் பொய் சொல்லி அரசாங்கத் தேர்வு எழுதுவது போல் ட்ராமா செய்து ஆபரேஷன் செய்யலாம் என்று முல்லையும் மீனாவும் திட்டம் போடுகிறார்கள். பின் நல்ல படியாக தனத்திற்கு ஆப்ரேஸன் முடிந்து வீட்டிற்கு வந்து விடுகிறார்கள். இப்படி கடந்து சில வாரங்களாகவே தனம் கேன்சர் இருக்கும் காட்சிகளை ஒளிபரப்பு இருந்தார்கள்.

-விளம்பரம்-

ஐஸ்வர்யா செய்த வேலை:

இந்த நிலையில் ஐஸ்வர்யாவிற்கு உண்மை தெரிய வருகிறது. இதை அவர் வீடியோவாக எடுத்து சோசியல் மீடியாவில் பதிவிடுகிறார். இதை பார்த்த குடும்பத்தில் உள்ள எல்லோருமே யாருக்கு கேன்சர் என்று பயத்தில் வீட்டிற்கு வருகிறார்கள். பின் எல்லோரும் முல்லை, மீனா, தனத்திடம் மாறி மாறி விசாரிக்கிறார்கள். அப்போது முல்லை, மீனா ஏதேதோ சொல்லி சமாளிக்கிறார்கள். உடனே அனைவரும் ஐஸ்வர்யாவை கண்டமேனிக்கு திட்டுகிறார்கள். இதனால் ஆத்திரமடைந்த ஐஸ்வர்யா, இவர்கள் யாரும் உண்மையை சொல்ல மாட்டார்கள்.

உண்மை அறிந்த மூர்த்தி:

தனம் அக்காவிற்கு தான் கேன்சர். அவர் தான் பொய் சொல்கிறார் என்று சொல்கிறார். இதை கேட்டு மூர்த்தி அதிர்ச்சியாகி விடுகிறார். பின் தனத்திடம் கேட்டவுடன் தனமும் உண்மையை ஏற்றுக்கொண்டார். இதனால் மூர்த்தி மயக்கம் அடைந்து கீழே விழுகிறார். இப்படி தனத்திற்கு வந்த கேன்சர் ட்ராக்கை வைத்து தான் இத்தனை நாட்களாக சீரியல் சென்று கொண்டிருக்கின்றது. தற்போது மூர்த்திக்கு உண்மை தெரிந்தவுடன் சீரியலை முடிவுக்கு கொண்டு வருகிறார்களா? இல்லை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்வர்களா? என்பதை வரும் காலங்களில் பார்க்கலாம்.

Advertisement