சித்ரா நினைவாக பாண்டியன் ஸ்டோர்ஸில் இருந்த அந்த ஒரு விஷயமும் இனி இல்லை – கடும் அப்சட்டில் ரசிகர்கள்.

0
152961
- Advertisement -

பிரபல சின்னத்திரை நடிகையான சித்ரா, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ரசிகர்களும் பல்வேறு பிரபலங்களும் சித்ராவின் மரணத்தால் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். விஐய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு தொடர்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவை பெற்றுள்ளது. அந்த வகையில் ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் ரசிகர்கள் மத்தியில் அமோக ஆதரவை பெற்றுள்ளது. பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் எத்தனை ஜோடிகள் நடித்து வந்தாலும் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான ஜோடி என்றால் கதிர்- முல்லை ஜோடிதான். இதில் கதிராக நடிகர் குமரனும், முல்லையாக நடிகை சித்ராவும் நடித்து வந்தனர்.

-விளம்பரம்-

இதில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து முழுமையாக பல இல்லத்தரசிகளின் மனதில் இடம்பிடித்தவர் நடிகை சித்ரா.இப்படி ஒரு நிலையில் நடிகை சித்ரா ஹோட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த விவகாரத்தில் அவரது கணவர் ஹேம்நாத், தற்கொலைக்கு தூண்டியதாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சித்ரா இறந்து விட்டதால்,இனி பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அவருக்கு பதில் முல்லை கதாபத்திரத்தில் யார் நடிக்கப்போகிறார்கள் என்று மிகப்பெரிய கேள்வி எழுந்தது.

இதையும் பாருங்க : ராஷ்மிகா ட்வீட்டிற்கு கமன்ட் செய்த முன்னாள் காதலர் – அசிங்கப்படுத்திய ராஷ்மிகா.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லைக்கு பதிலாக, பாரதி கண்ணம்மா சீரியலில் அறிவுமணி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை காவ்யா புதிய முல்லையாக நடித்து வருகிறார். என்னதான் பாண்டியன் ஸ்டோர்ஸ்ஸில் புதிய முல்லையாக காவியா வந்தாலும் பழைய முறையான சித்ராவை ரசிகர்கள் இண்ணமும் மிஸ் செய்துதான் வருகிறார்கள். முல்லை என்ற கதாபாத்திரம் பற்றி சொன்னதும் ரசிகர்கள் மனதை முதலில் நினைவிற்கு வருவது சித்ரா தான். அதன்பின்னர் நினைவிற்கு வருவது அவருடைய இனிமையான குரல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ்ஸில் தற்போது சித்ரா இல்லை என்றாலும் அவரது குரலாக ஒலித்த டோனியின் குரல் தற்போதும் ரசிகர்கள் மத்தியில் சித்ராவின் நினைவாக இருந்து வருகிறது.

இப்படி ஒரு நிலையில் முல்லை கதாபாத்திரத்திற்கு புதிய குரலை மாற்றி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்து இருக்கிறது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல். இதன் சித்ரா நினைவாக இருந்த அந்தக் குரலும் தற்போது இல்லை என்று ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்து இருக்கிறார்கள்.பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் முல்லை கதாபாத்திரத்திற்கு டப்பிங் கொடுத்து வந்தவர் டப்பிங் கலைஞரான காயத்ரி என்பவர்தான் இவர் முல்லை கதாபாத்திரத்திற்கு மட்டும் அல்லாமல் ராஜா ராணி சீரியலில் நடித்த ஆலியா மானசா சரவணன் மீனாட்சி முத்தழகு கதாபாத்திரம் உள்ளம் கொள்ளை போகுதடா சீரியலில் பிரியா கதாபாத்திரம் என்று பல கதாபாத்திரங்களுக்கு டப்பிங் கொடுத்தவர் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement