பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தின் புது வீடு – Home Tour வீடியோவை வெளியிட்ட தனம்.

0
453
suchitha
- Advertisement -

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் புது வீட்டின் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் டிஆர்பியில் முன்னிலையில் வகுத்து வரும் சீரியல் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”. இந்த சீரியல் அண்ணன் தம்பிகளுக்கு இடையேயான பாசக் கதையை மையமாக கொண்டது. இந்த சீரியலில் ஸ்டாலின், சுஜிதா, வெங்கட், ஹேமா ராஜ்குமார், லாவண்யா, குமரன் தங்கராஜன், சரவணன் என பல நடிகர்கள் நடிக்கிறார்கள்.

-விளம்பரம்-
pandianstores

மேலும், இந்த சீரியல் ஆரம்பித்த நாளில் இருந்து இப்போது வரை விறுவிறுப்புடன் சென்று கொண்டு இருக்கிறது. அதனால் இந்த சீரியலுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரை தெலுங்கு, கன்னடம் என இந்தியாவில் 8 மொழிகளிலும் ஒளிபரப்பாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த அளவிற்கு இந்த சீரியல் பிரபலமாக திகழ்கிறது. இந்த தொடரில் தொடரில் முல்லை என்ற வேடத்தில் முதலில் நடித்து வந்தவர் விஜே சித்ரா.

- Advertisement -

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்:

இவர் தற்கொலை செய்து கொண்டதை அடுத்து அவருக்கு பதிலாக காவ்யா நடித்து இருந்தார். இப்போது தற்போது புதிய முல்லையாக லாவண்யா என்ட்ரி கொடுத்து இருக்கிறார். இவர் சிப்பிக்குள் முத்து தொடரில் கதாநாயகியாக நடித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது சீரியலில் முல்லையும், கதிரும் சமையல் போட்டியில் சிறப்பாக விளையாடி பத்து லட்சம் ரூபாய் பணத்தை வெல்கிறார்கள். பின் அதை மூர்த்தியிடம் கொடுக்கிறார்கள்.

சீரியலின் கதை:

ஆனால், மூர்த்தி எங்களுக்கு பணம் வேண்டாம். நீ வீட்டிற்கு வந்ததே போதும் என்று சொல்கிறார்கள். இந்த உண்மையை வீட்டில் மற்றவர்களுக்கும் தெரிய வைக்க கண்ணன் மீனாவின் அப்பாவை வரவைக்கிறார். அவர் வந்த உடனே தன்னுடைய வேலையை ஆரம்பித்து விடுகிறார். பின் ஒருவரை மாற்றி ஒருவர் சண்டை போட்டு மூர்த்தி மீனாவிடம் உன்னுடைய அப்பா அம்மாவை வெளியே போக சொல் என்று சொல்கிறார். உடனே கோபம் வந்து ஜனார்த்தன் இது என் வீடு, என்னை வெளியே போ சொல்லறதுக்கு நீங்கள் யாரு? நீங்கள் வெளியே போங்கள் என்று சொல்கிறார்.

-விளம்பரம்-

புது வீட்டின் வீடியோ:

இதனால் மனமுடைந்து மூர்த்தியின் மொத்த குடும்பமும் வீட்டை விட்டு வெளியே வருகிறது. கதிர் தன்னுடைய வீட்டிற்கு மொத்த குடும்பத்தையும் கூட்டிக் கொண்டு செல்கிறார். புது வீட்டை கட்டும் வரை கதிர் வீட்டில் இருப்பதாக மூர்த்தி நினைக்கிறார். அடுத்து என்ன நடக்கும் என்று பல எதிர்பார்ப்புகளுடன் சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் புது வீட்டின் வீடியோ ஒன்று வெளியாகியிருக்கிறது.

வைரலாகும் வீடியோ:

அதாவது, சீரியல் தொடங்கி நான்காண்டுகளாக பாண்டியன் ஸ்டோர்ஸ் சூட்டிங் ஒரே வீட்டில் எடுக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த வீட்டை விட்டு பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் வெளியே வந்தவுடன் கதிர் வீட்டில் தங்கி இருக்கிறார்கள். இனிமேல் இந்த வீட்டில் தான் ஷூட்டிங் நடக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தனம் தற்போது அவர்கள் இருக்கும் புது வீட்டை சுற்றி காண்பித்து வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

Advertisement