ஹோம்லி எல்லாம் சீரியல்ல மட்டும் தான், அசரவைக்கும் புதிய முல்லையின் அல்ட்ரா மாடர்ன் லுக்.

0
1639
- Advertisement -

பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லையின் மாடர்ன் புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் டிஆர்பியில் முன்னிலையில் வகுத்து வரும் சீரியல் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”. இந்த சீரியல் அண்ணன் தம்பிகளுக்கு இடையேயான பாசக் கதையை மையமாக கொண்டது. இந்த சீரியலில் ஸ்டாலின், சுஜிதா, வெங்கட், ஹேமா ராஜ்குமார், லாவண்யா, குமரன் தங்கராஜன், சரவணன் என பல நடிகர்கள் நடிக்கிறார்கள்.

-விளம்பரம்-

மேலும், இந்த சீரியல் ஆரம்பித்த நாளில் இருந்து இப்போது வரை விறுவிறுப்புடன் சென்று கொண்டு இருக்கிறது. அதனால் இந்த சீரியலுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. கடந்த சில மாதங்களாகவே சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது. சீரியலில் தனியாக இருந்த முல்லையும், கதிரும் சமையல் போட்டியில் சிறப்பாக விளையாடி பத்து லட்சம் ரூபாய் பணத்தை வென்று தங்கள் வீட்டிற்கு வருகிறார்கள்.

- Advertisement -

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்:

இதை அறிந்த மீனாவின் அப்பா கிண்டல் கேலி செய்கிறார். பின் மூர்த்தி குடும்பத்துக்கும் மீனாவின் அப்பா ஜனார்தனுக்கும் இடையே சண்டை ஏற்படுகிறது. இதனால் ஜனார்தன் மூர்த்தி குடும்பத்தை வீட்டை விட்டு வெளியே போக சொல்கிறார். மனமுடைந்து மூர்த்தியின் மொத்த குடும்பமும் வீட்டை விட்டு வெளியே வருகிறது. பின் கதிர் தன்னுடைய வீட்டிற்கு மொத்த குடும்பத்தையும் கூட்டிக் கொண்டு செல்கிறார். வீட்டை கட்டும் வரை கதிர் வீட்டில் இருக்க முடிவு எடுக்கிறார்கள்.

முல்லை கதாபாத்திரம்:

மூர்த்தியின் குடும்பம் தாங்கள் புதிதாக வாங்கிய இடத்தில் வீடு கட்டுவதற்கான வேலையை ஆரம்பிக்கிறார்கள். தற்போது பல திருப்பங்களுடன் சீரியல் சென்று கொண்டு இருக்கிறது. மேலும், இந்த தொடரில் முல்லை என்ற வேடத்தில் நடித்த பல நடிகர்கள் மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். முதலில் இதில் முல்லையாக நடித்து வந்தவர் விஜே சித்ரா. இவர் தற்கொலை செய்து கொண்டதை அடுத்து அவருக்கு பதிலாக காவ்யா நடித்து வருகிறார்.

-விளம்பரம்-

என்ட்ரி கொடுத்த லாவண்யா :

முல்லை கதாபாத்திரத்தில் காவ்யா செட்டாகி ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கிறார். தற்போது புதிய முல்லையாக லாவண்யா என்ட்ரி கொடுத்து இருக்கிறார். இவர் சிப்பிக்குள் முத்து தொடரில் கதாநாயகியாக நடித்து மக்கள் மத்தியில் இடம் பிடித்தவர் லாவண்யா. இவர் திருப்பூரை சேர்ந்தவர். இவர் மாடலிங் மூலம் தான் மீடியாவிற்குள் நுழைந்தார். அதனை தொடர்ந்து இவர் சிற்பிக்குள் முத்து சீரியலில் கதாநாயகியாக நடித்தார்.

லாவண்யாவின் மாடர்ன் புகைப்படங்கள்:

தற்போது இவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லையாக நடித்து வருகிறார். இந்த சீரியலின் மூலம் இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. இந்நிலையில் நடிகை லாவண்யாவின் புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் படுவாள் ஆகிவிடுகிறது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் குடும்ப குத்து விளக்காக முல்லை கதாபாத்திரத்தில் வரும் லாவண்யா நிஜத்தில் பயங்கர மாடல் இவருடைய மாடன் புகைப்படங்கள் எல்லாம் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி இருக்கிறது இதை பார்த்து ரசிகர்கள் பலரும் இவர்தான் பிள்ளையா என்று ஆச்சரியத்தில் வாயை பிளந்து செயல்படுவதற்கு லைக்ஸ் களைத்து வருகிறார்கள்

Advertisement