முல்லை கேரக்டர் இப்படி பண்ணலாமா ? புதிய முல்லையின் போட்டோ ஷூட்டால் அப்சட் ஆன ரசிகர்கள்.

0
2294
kavya
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வரும் சீரியல் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”. ஒரு சாதாரண குடும்பக் கதையை மையமாகக் கொண்ட தொடர். இந்த சீரியலில் ஸ்டாலின், சுஜிதா, வெங்கட், ஹேமா ராஜ்குமார்,காவ்யா , குமரன் தங்கராஜன், சரவணன், விக்ரம் என பல நடிகர்கள் நடிக்கிறார்கள். இந்த சீரியல் அண்ணன் தம்பிகளுக்கு இடையேயான பாசக் கதை. இந்த சீரியல் மக்களிடையே நல்ல வரவேற்பும், பாராட்டும் பெற்று வருகிறது.

-விளம்பரம்-

மேலும், பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரை தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் மொழி மாற்றம் செய்து வருகிறார்கள். தெலுங்கில் வடிநம்மா என்ற பெயரிலும், கன்னடத்தில் வரலக்‌ஷ்மி ஸ்டோர்ஸ் எனவும் இந்தியாவில் 8 மொழிகளிலும் இலங்கையிலும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடர் ஒளிபரப்பாகி வருவதும் குறிப்பிடத்தக்கது. இந்த சீரியலில் பலர் நடித்து வந்தாலும் குமரன் – சித்ரா நடித்து வந்த கதிர் – முல்லை கதாபாத்திரத்தாம் இந்த நிகழ்ச்சிக்கு ஒரு மிகப்பெரிய வெற்றியை பெற்றுத்தந்தது என்று வேண்டும்.

இதையும் பாருங்க : இப்போ என்ன போய் ‘Wrestling’ல பேர் கொடுக்க போற – 44 வயது சீரியல் நடிகையின் பிட்னஸ் வீடியோவை கேலி செய்த நபர்.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் நடிகை சித்ரா ஹோட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த விவகாரத்தில் அவரது கணவர் ஹேம்நாத், தற்கொலைக்கு தூண்டியதாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த சீரியலில் புதிய முல்லையாக பாரதி கண்ணம்மா சீரியலில் அறிவுமணி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை காவ்யா நடித்து வருகிறார்.

என்னதான் புதிய முல்லையாக இவர் நடித்து வந்தாலும் சித்ராவிற்கு கிடைத்த வரவேற்பு இவருக்கு கிடைக்கவில்லை. சமீபத்தில் கூட காவ்யா, முல்லை கதாபாத்திரத்துக்கு தனக்கு ஆதரவு தெரிவிக்குமாறு கேட்டிருந்தார். மேலும், அடிக்கடி இவர் சித்ராவை போல போட்டோ ஷூட் நடத்தி வருவதும் வழக்கம். அந்த வகையில் சமீபத்தில் இவர் நடத்திய போட்டோ ஷூட்டை பார்த்து ரசிகர்கள் கொஞ்சம் அப்சட் அடைந்துள்ளனர்.

-விளம்பரம்-
Advertisement