பாண்டியன் ஸ்டோர்ஸில் இருந்து விலகி மற்றொரு நடிகர் – இனி அவருக்கு பதில் இவர் (எத்தன பேர தான் மாத்துவாங்க)

0
1169
- Advertisement -

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மீண்டும் பிரபல நடிகர் மாற்றம் செய்திருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் டிஆர்பியில் முன்னிலையில் வகுத்து வரும் சீரியல் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”. இந்த சீரியல் அண்ணன் தம்பிகளுக்கு இடையேயான பாசக் கதையை மையமாக கொண்டது. இந்த சீரியலில் ஸ்டாலின், சுஜிதா, வெங்கட், ஹேமா ராஜ்குமார், லாவண்யா, குமரன் தங்கராஜன், சரவணன் என பல நடிகர்கள் நடிக்கிறார்கள்.

-விளம்பரம்-

மேலும், இந்த சீரியல் ஆரம்பித்த நாளில் இருந்து இப்போது வரை விறுவிறுப்புடன் சென்று கொண்டு இருக்கிறது. அதனால் இந்த சீரியலுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. மேலும், இந்த தொடர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, கன்னடம், இந்தி என பழமொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. அதோடு தமிழில் கடந்த சில மாதங்களாகவே சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது. சீரியலில் தனியாக இருந்த முல்லையும், கதிரும் சமையல் போட்டியில் சிறப்பாக விளையாடி பத்து லட்சம் ரூபாய் பணத்தை வென்று தங்கள் வீட்டிற்கு வருகிறார்கள்.

- Advertisement -

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்:

இதை அறிந்த மீனாவின் அப்பா கிண்டல் கேலி செய்கிறார். பின் மூர்த்தி குடும்பத்துக்கும் மீனாவின் அப்பா ஜனார்தனுக்கும் இடையே சண்டை ஏற்படுகிறது. இதனால் ஜனார்தன் மூர்த்தி குடும்பத்தை வீட்டை விட்டு வெளியே போக சொல்கிறார். மனமுடைந்து மூர்த்தியின் மொத்த குடும்பமும் வீட்டை விட்டு வெளியே வருகிறது. பின் கதிர் தன்னுடைய வீட்டிற்கு மொத்த குடும்பத்தையும் கூட்டிக் கொண்டு செல்கிறார். வீட்டை கட்டும் வரை கதிர் வீட்டில் இருக்க முடிவு எடுக்கிறார்கள்.

சீரியலின் கதை:

மூர்த்தியின் குடும்பம் தாங்கள் புதிதாக வாங்கிய இடத்தில் வீடு கட்டுவதற்கான வேலையை ஆரம்பிக்கிறார்கள். தற்போது சீரியலில் மூர்த்தியின் குடும்பத்தை பழிவாங்க ஜனார்த்தன் திட்டம் போடுகிறார். இதனால் பாண்டியன் ஸ்டோர்ஸ் கடையை ஒழித்து கட்ட தன்னுடைய நண்பரிடம் ஜனார்த்தன் ஐடியா சொல்கிறார். இதைக்கேட்டு அவர்களும் பாண்டியன் ஸ்டோர்ஸ் கடையின் மீது புகார் அளிக்கிறார்கள். இந்த இடம் விவசாய நிலம்.

-விளம்பரம்-

சீரியலில் நடிகர் மாற்றம்:

கடையை நடத்தக்கூடாது என்று அரசாங்கமும் கூறுகிறது. இதனால் என்ன செய்வது என்று புரியாமல் மூர்த்தியின் குடும்பமே அதிர்ச்சியில் இருக்கிறது. அடுத்து என்ன நடக்கும் என்ற பல அதிரடி திருப்பங்களுடன் சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் சீரியலில் பிரபல நடிகர் மாற்றம் செய்திருக்கும் தகவல் வைரல் ஆகி வருகிறது. அதாவது, இந்த தொடரில் மல்லியின் மகனாக பிரசாந்த் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் வசந்த். தற்போது மல்லி தன்னுடைய மகன் பிரசாந்த்திற்கு திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறார்.

மகேஷ் சுப்ரமணியன் குறித்த தகவல்:

பிரசாந்திற்கும், மீனாவின் தங்கை சுவேதாவிற்கும் திருமணம் செய்ய ஏற்பாடுகள் செய்கிறார்கள். இதனால் அவருடைய கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் இவருக்கு பதிலாக பிரசாந்த் கதாபாத்திரத்தில் மகேஷ் சுப்பிரமணியன் என்பவர் நடிக்க இருக்கிறார். சின்னத்திரை மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் மகேஷ் சுப்ரமணியன். இவர் பல நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று இருக்கிறார். தற்போது இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முத்தழகு என்ற தொடரில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement