செம்பருத்தி, பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் எல்லாம் இன்னும் இத்தனை நாள் தான்.

0
30649
- Advertisement -

கடந்த இரண்டு மாதங்களாக உலகையே உலுக்கி கொண்டு இருக்கும் விஷயம் இந்த கொரோனா வைரஸ். சீனாவின் ஹுபெய் மாகாணத்தின் தலைநகரான வுஹான் நகரில் தான் இந்த கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்தது. தற்போது உலகம் முழுவதும் உள்ள பல நாடுகளில் இந்த கரோனா வைரஸ் தொற்று பரவி உள்ளது. தற்போது சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலி, ஈரான், தென் கொரியா ஆகிய பல நாடுகளில் கடுமையாக இந்த கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இங்கு நாளுக்கு நாள் உயிரிழப்புகள் அதிகரித்து கொண்டே வருகிறது.

-விளம்பரம்-

மக்கள் ஓரிடத்தில் கூடுவதை மிகவும் தவிர்த்துக் கொண்டு வருகின்றார்கள். இதனால் உலகம் முழுவதும் உள்ள மக்கள் அனைவரும் வீட்டிலேயே தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று அரசாங்கம் அறிவித்து உள்ளது. இந்தியாவின் பல மாநிலங்களிலும் இந்த கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு உள்ளது. அனைத்து சினிமா தியேட்டர்கள், மால்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை மூட உத்தரவிட்டு உள்ளார்கள்.

- Advertisement -
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்

லீவு தானே டிவி தான் இருக்கே என்று சந்தோஷத்தில் இருக்கும் நிலையில் தற்போது ஒரு புதிய தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த சில நாட்களுக்கு மட்டும் தான் தொலைக்காட்சியில் சீரியல்கள், நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகும் என்று வெளியாகியுள்ளது. சமீபகாலமாகவே சீரியல்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன. அதிலும் ஒவ்வொரு சேனலும் தங்களுடைய டிஆர்பி ரேடிங்காக வித்தியாசமான கதைக்களத்துடன் சீரியல்களை ஒளிபரப்பி வருகிறார்கள்.

-விளம்பரம்-

இந்நிலையில் இந்த கொரோனா வைரஸினால் சீரியல் ஷூட்டிங் எல்லாம் நிறுத்தப்பட்டு உள்ளது. இது குறித்து ஜீ தமிழ் நிறுவனம் கூறியது, எல்லாருடைய ஆல்டைம் பேவரிட் சீரியலாக செம்பருத்தி, யாரடி நீ மோகினி என சீரியலில் தொடங்கி ரியாலிட்டி ஷோக்கள் வரை எல்லாத்தையும் உடைய ஷூட்டிங்கும் நாளை முதல் நிறுத்தப்பட உள்ளது. இது எத்தனை நாளைக்கு லீவு அறிவித்து உள்ளார்கள் என்று இன்னும் தெரியவில்லை. இப்போது கைவசம் உள்ள எபிசோடுகளை மட்டும் ஒளிபரப்ப உள்ளார்கள். அதுவும் மூன்று நாட்களுக்கு மட்டும் தான் ஒளிபரப்பாகும். அதற்கு பிறகு ஏற்கனவே ஒளிபரப்பான எபிசோடுகளை மறுப்பு ஒளிபரப்பு செய்யப்படும் அல்லது அதே நேரத்தில் படங்களை ஒளிபரப்பப்படும் என்று சொல்லப்படுகிறது என்றார்கள் ஜீ தமிழ் தரப்பினர்.

Image result for Sembaruthi Serial

அதற்கு பிறகு விஜய் டிவி கூறியது, பாண்டியன் ஸ்டோர் முதலான பல சூப்பர் ஹிட் சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. எபிசோடுகள் இன்னும் இரண்டு வாரங்களுக்கு ஒளிபரப்பாகும். அதற்குள் இந்த நிலைமை எல்லாம் சரியாகிவிடும் என்று நம்பப்படுகிறதது. இது குறித்து சீரியல் தயாரிப்பாளர் ஒருவரிடம் கேட்டபோது அவர் கூறியது, ஒவ்வொரு சமயத்திலும் ஐபிஎல் கிரிக்கெட் வந்து தான் சீரியல் டிஆர்பி ரேட்டிங்கை குறைக்கும்.

அதை சரிகட்ட சீரியலில் பல ட்விஸ்ட்களை வைத்து சமாளிப்பார்கள் இயக்குனர்கள். இந்த வருடம் கிரிக்கெட்டை முந்திக் கொண்டது இந்த கொரோனா வைரஸ். உலகமே ஒரு வித கலவரத்தோடு பீதியில் இருக்கும் போது நாங்க மட்டும் என்ன விதிவிலக்கா?? சினிமாவிலே சூட்டிங் நிறுத்தப்பட்டு இருக்கும் போது எங்களால் மட்டும் எப்படி எடுக்க முடியும். ஒரு வாரத்திற்குள் இந்த நிலைமை சரியாகும் என்று நாங்கள் அனைவரும் நம்புகிறோம். ஒருவேளை அதற்குள் சரியாக வில்லை என்றால் டிவி சேனல் பெரிய நஷ்டத்தை சந்திக்கும் என்று தோன்றுகிறது என்று கூறினார். இப்படி ஒவ்வொரு சேனலும் தங்களுடைய கருத்துக்களை கூறினார்கள்.

செம்பருத்தி

இந்த வைரஸ் தாக்கிய நபரை குணப்படுத்த இன்னும் மருந்து கண்டுபிடிக்கவில்லை என்பதால் மக்கள் அனைவரும் கவலையில் உள்ளார்கள். தற்போதைக்கு இருக்கும் ஒரே மருந்து அனைவரும் முன்னெச்சரிக்கையுடன் இருப்பது மட்டும் தான். கொரோனா வைரஸ் தாக்குதலால் மக்களின் இயல்பு வாழ்க்கை பல்வேறு நாடுகளில் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது.

Advertisement