பாண்டியன் ஸ்டோர்ஸ் இயக்குனர் திடீர் மாற்றம் ? இந்த சீரியல் இயக்குனர் தான் இனி இயக்கப்போறாராம்.

0
962
pandianstores
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வரும் சீரியல் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”. ஒரு சாதாரண குடும்பக் கதையை மையமாகக் கொண்ட தொடர். இந்த சீரியலில் ஸ்டாலின், சுஜிதா, வெங்கட், ஹேமா ராஜ்குமார், சித்ரா, குமரன் தங்கராஜன், சரவணன், விக்ரம் என பல நடிகர்கள் நடிக்கிறார்கள். இந்த சீரியல் அண்ணன் தம்பிகளுக்கு இடையேயான பாசக் கதை. இந்த சீரியல் மக்களிடையே நல்ல வரவேற்பும், பாராட்டும் பெற்று வருகிறது.

-விளம்பரம்-

மேலும், பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரை தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் மொழி மாற்றம் செய்து வருகிறார்கள். தெலுங்கில் வடிநம்மா என்ற பெயரிலும், கன்னடத்தில் வரலக்‌ஷ்மி ஸ்டோர்ஸ் எனவும் இந்தியாவில் 8 மொழிகளிலும் இலங்கையிலும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடர் ஒளிபரப்பாகி வருவதும் குறிப்பிடத்தக்கது. இந்த சீரியலில் பலர் நடித்து வந்தாலும் குமரன் – சித்ரா நடித்து வந்த கதிர் – முல்லை கதாபாத்திரத்தாம் இந்த நிகழ்ச்சிக்கு ஒரு மிகப்பெரிய வெற்றியை பெற்றுத்தந்தது என்று வேண்டும்.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் நடிகை சித்ரா ஹோட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்போது புதிய முல்லையாக காவ்யா நடித்து வருகிறார். ஆனால், சித்ராவிற்கு இருந்த வரவேற்பு இவருக்கு கிடைக்கவில்லை. இப்படி ஒரு நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் பாக்கியலட்சுமி சீரியல் குழு, பாண்டியன் ஸ்டோரேஸில் இணைந்து கொஞ்சம் ஓட்டினார்கள்.

ஆனால், அதுவும் கதைக்கு ஒட்டவில்லை. கடந்த சில சில வாரமாக பாண்டியன் ஸ்டோர்ஸ் TRP யும் சரிந்து வருகிறது. இப்படி ஒரு நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் இயக்குனர் மாற்றப்பட்டுள்ளதாகவும் தற்போது பாக்கியலட்சுமி சீரியல் இயக்குனர் தான் இயக்கப்போகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.

-விளம்பரம்-
Advertisement