பாண்டியன் ஸ்டோர் சீரியல் ஏன் எங்க கடையை தேர்வு செய்தார்கள் – கடையில் உரிமையாளர் சொன்ன காரணம்.

0
650
pandianstores
- Advertisement -

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் வரும் உண்மையான கடையின் உரிமையாளர் அளித்துள்ள பேட்டி தற்போது வைரலாகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் டிஆர்பியில் முன்னிலையில் வகுத்து வரும் சீரியல் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”. இந்த சீரியல் அண்ணன் தம்பிகளுக்கு இடையேயான பாசக் கதையை மையமாக கொண்டது. இந்த சீரியலில் ஸ்டாலின், சுஜிதா, வெங்கட், ஹேமா ராஜ்குமார், குமரன் தங்கராஜன், சரவணன் என பல நடிகர்கள் நடிக்கிறார்கள்.

-விளம்பரம்-

மேலும், இந்த சீரியல் ஆரம்பித்த நாளில் இருந்து இப்போது வரை விறுவிறுப்புடன் சென்று கொண்டு இருக்கிறது. அதனால் இந்த சீரியலுக்கு என்று ஒரு தனி ரசிகர் சீரியலுக்கு இருக்கிறது. பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரை தெலுங்கு, கன்னடம் என இந்தியாவில் 8 மொழிகளிலும் ஒளிபரப்பாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த அளவிற்கு இந்த சீரியல் பிரபலமாக திகழ்கிறது. இந்த தொடரில் தொடரில் முல்லை என்ற வேடத்தில் முதலில் நடித்து வந்தவர் விஜே சித்ரா.

- Advertisement -

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்:

இவர் தற்கொலை செய்து கொண்டதை அடுத்து அவருக்கு பதிலாக காவ்யா நடித்து இருந்தார். இப்போது தற்போது புதிய முல்லையாக லாவண்யா என்ட்ரி கொடுத்து புதிய இவர் சிப்பிக்குள் முத்து தொடரில் கதாநாயகியாக நடித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போதுதான் வீட்டில் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கும் தருணத்தில் நீ வீட்டிற்கு வந்ததே போதும் என்று சொல்கிறார்கள் மூர்த்தி.

வீட்டு பிரச்னை :

இந்த உண்மையை வீட்டில் மற்றவர்களுக்கும் தெரிய வைக்க கண்ணன் வீட்டில் அப்பாவை வரவைக்கிறார். அவர் வந்த உடனே தன்னுடைய வேலையை ஆரம்பித்து விடுகிறார். பின் ஒருவரை மாற்றி ஒருவர் சண்டை போட்டு மூர்த்தி மீனாவிடம் உன்னுடைய அப்பா அம்மாவை வெளியே போக சொல் என்று சொல்கிறார். உடனே கோபம் வந்து ஜனார்த்தன் இது என் வீடு, என்னை வெளியே போ சொல்லறதுக்கு நீங்கள் யாரு? நீங்கள் வெளியே போங்கள் என்று வீட்டை விட்டு துரத்தி விட்ட ஜனார்த்தனன் இப்போது கடையையும் இழுத்து மூடிவிட்டார்.

-விளம்பரம்-

சூப்பர் மார்கெட்டிற்கு சீல் :

இந்த நிலையில் அவர்களது சூப்பர் மார்க்கெட்டும் விவசாய இடத்தில இருக்கிறது என்று சில் வாய்த்த நிலையில் மீண்டும் தங்களுடைய பழைய கடைக்கே திரும்பி வந்துவிட்டனர். பாண்டியன் ஸ்டோர்ஸில் மிக முக்கியமாக இருந்து வருவதும் இந்த மளிகை கடை தான். இப்படி ஒரு நிலையில் இந்த கடையின் உரிமையாளர் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். இந்த கடை குன்றக்குடியில் இருந்து காரைக்கால் செல்லும் இடத்தில் ஒரு கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது.

கடையின் உண்மையான பெயர்:

அந்த கடையினுடைய உண்மையான பெயர் அன்னை டிபார்ட்மெண்டல் ஸ்டோர் தான். ஆனால், தற்போது அந்த கடையை பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பெயர் வைத்து நடத்தி வருகிறார்கள். இந்த கடை மிகவும் ராசியாக இருப்பதால் ஆரம்பத்தில் இருந்தே இந்த கடையில் சென்டிமெண்டாக ஷூட்டிங் செய்து வருகிறார்களாம். மேலும், இந்த கடையில் உரிமையாளர்கள் கூட பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் ஒரு சில சீனில் நடித்து இருக்கிறார்களாம்.

Advertisement