குட் நியூஸ் சொன்ன முன்னாள் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை – குவியும் வாழ்த்துக்கள்.

0
541
vaishali
- Advertisement -

சின்னத்திரை சீரியல் நடிகை வைஷாலி தன் கணவரோடு மாலை கழுத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவிட்டு குட் நியூஸ் சொல்லி இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் ஒன்றாக விளங்குவது சின்னத்திரை சீரியல்கள். சேனலில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் மட்டுமில்லாமல் அதில் நடிக்கும் நடிகர்களும் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து விடுகிறார்கள்.

-விளம்பரம்-

அந்த வகையில் சின்னத்திரை சீரியலின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாக திகழ்ந்து கொண்டிருப்பவர் வைஷாலி. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான மாப்பிளை என்ற சீரியல் மூலமாக தான் சின்னத்திரையில் நாயகியாக அடி எடுத்து வைத்திருந்தார். முதல் சீரியலிலேயே இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் கூட்டம் உருவானது. அதற்குப்பின் ராஜா ராணி சீசன் 1 சீரியலில் சஞ்சீவியின் தங்கையாக வைஷாலி நடித்திருந்தார்.

- Advertisement -

வைஷாலி குறித்த தகவல்:

அதன் பின் இவருக்கு சினிமாவில் பட வாய்ப்புகள் கிடைத்தது. இதனால் இவர் படங்களில் சிறு வேடங்களில் நடித்துக் கொண்டிருந்தார். குறிப்பாக, சீமராஜா படத்தில் சமந்தாவின் தோழியாக வைஷாலி நடித்து இருந்தார். அதற்கு பிறகு பட வாய்ப்புகள் குறைந்த உடனே வைஷாலி மீண்டும் சின்னத்திரை பக்கம் வந்து விட்டார். மேலும், விஜய் டிவியில் ஒளிபரப்பாகி டிஆர்பியில் முன்னிலை வகுத்து வரும் தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ்.

வைஷாலி நடிக்கும் சீரியல்:

இந்த சீரியலில் ஆரம்பத்தில் கண்ணனுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் வைஷாலி தான் நடித்திருந்தார். என்ன காரணம்? என்று தெரியவில்லை இவர் திடீரென்று சீரியலில் இருந்து விலகி விட்டார். பின் ஜீ தமிழ் ஒளிபரப்பான கோகுலத்தில் சீதை, நம்ம வீட்டு பொண்ணு போன்ற பல சீரியல்களில் இவர் நடித்திருந்தார். தற்போது இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முத்தழகு என்ற தொடரில் வில்லியாக நடித்து வருகிறார்.

-விளம்பரம்-

வைஷாலி-தேவ் :

இந்த தொடர் ஆரம்பித்த நாளிலிருந்து தற்போது வரை விறுவிறுப்புடனும், திருப்பங்களுடனும் சென்று கொண்டிருக்கின்றது. இதற்கிடையில் இவர் தேவ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இப்படி இவர் பிஸியாக நடித்துக் கொண்டிருந்தாலும் எப்போதுமே சோசியல் மீடியாவிலும் படு ஆக்டிவாக இருக்கிறார். தான் அடிக்கடி எடுக்கும் புகைப்படம், தன் கணவரோடு சேர்ந்து செய்யும் ரில்ஸ் வீடியோ என அனைத்துமே சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருகிறார்.

வைஷாலி சொன்ன குட் நியூஸ்:

இந்த நிலையில் வைஷாலி அவர்கள் தன்னுடைய கணவருடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து ஒரு மகிழ்ச்சியான செய்தியை குறிப்பிட்டு இருக்கிறார். அந்தப் புகைப்படத்தில் வைஷாலி- தேவ் இருவரும் மாலை கழுத்துமாக இருக்கிறார்கள். இவர்கள் புதிதாக ஜிம் ஒன்றை தொடங்கி இருக்கிறார்கள். அந்த திறப்பு விழாவின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை தான் இவர்கள் சோசியல் மீடியாவில் பகிர்ந்து இருக்கிறார்கள். இதை பார்த்து ரசிகர்கள் பலருமே வைஷாலிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement