உத்திர பிரதேசத்தின் மீரட்டில் இந்து மகா சபையின் தேசிய துணைத்தலைவர் நடிகர் கமல்ஹாசனின் படங்களை புறக்கணியுங்கள், அவரை சுட்டுக்கொள்ளுங்கள் எனப் பேசியுள்ளார்.
கடந்த சில நாட்களாக, கமல்ஹாசன் ஒரு வார இதழுக்கு எழுதிய அந்த இந்துத்துவா பற்றிய கட்டூரைதான் சர்ச்சையையும் கண்டனத்தையும் ஏற்ப்படுத்தி வருகிறது.
வலதுசாரிகளின் (இந்துத்துவம்) கூட்டத்திலும் தீவிரவாதம் இருக்கிறது, “எங்கே எங்கள் கூட்டத்தில் ஒரு தீவிரவாதியைக் காட்டுங்கள்” என்று கூற முடியாத அளவிற்கு அங்கேயும் தீவிரவாதம் வளர்ந்திருக்கிறது, என அந்த கட்டூரையில் எழுதியுள்ளார் கமல்.
இதனால், பல்வேறு இந்துத்துவ அமைப்புகளிடம் இருந்து எதிர்ப்புகள் கிளம்பியுள்ளனர். நேற்று பாரதிய ஜனதா கட்சியின் ‘பொருக்கி புகழ் சுப்ரமணியசாமி கமலை ‘மூளை இல்லாதவர், அவன் ஒரு பைத்தியம்’ என கடுமையாக விமர்சித்தார்.
தற்போது இந்து மகா சபையின் தேசிய துணைத்தலைவர் பண்டிட் அசோக் சர்மா, கமல்ஹாசனை சுட்டுக் கொள்ளவேண்டும். இந்துக்களிலிலும் தீவிரவாதம் இருக்கிறது என்று கூறிய அவரது படத்தை நாம் அனைவரும் புறக்கணிபோம்.
நாம் மட்டுமல்ல, அவரது குடும்பத்தினர் அனைவரது படத்தினையும் இந்துக்கள் அனைவரும் புறக்கணிக்கவேண்டும் என வெறுப்புணர்வு வரும் வகையில் கமஹாசனை தாக்கியுள்ளார்.