தமிழ் சினிமாவில் பிரபல நடிகையும் நாட்டுப்புற பாடகியுமான பரவை முனியம்மா கடந்த சில காலமாக உடல் நலக்குறைவால் அவதி பட்டு வருகிறார். இவர் மதுரை மாவட்டத்தில் உள்ள பரவை என்னும் ஊரை சேர்ந்தவர். அதனால் தான் இவரை ‘பரவை முனியம்மா’ என்றுஅழைக்கப்பட்டார். விக்ரம் நடிப்பில் வெளியான ‘தூள்’ படத்தில் ‘மதுரை வீரன் தானே’ என்ற பாடல் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானவர் நடிகை பரவை முனியம்மா. தூள் படத்திற்கு பின்னர் காதல் சடுகுடு, பூ தேவதையைக் கண்டேன் என்று 25 திரைப்படங்களுக்கு மேல் நடிகையாகவும் நடித்துள்ளார்.
அதுமட்டுமல்லாமல் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கிராமத்து சமையல் என்ற சமையல் நிகழ்ச்சியையும் நாட்டுப்புற பாடலை பாடிக்கொண்டே கிராமத்து உணவுகளை சமைத்து இவர் தொகுத்து வழங்கிய அந்த நிகழ்ச்சி மிகவும் பிரபலம் நாட்டுப்புறப் பாடல்களுக்கு மிகவும் பெயர் பெற்ற பறவைமுனியம்மா வெளிநாடுகளில் கூட சென்று பல்வேறு கலை நிகழ்ச்சிகளில் நாட்டுப்புற பாடல்களை பாடி இருக்கிறார்.
இதையும் பாருங்க : ஆழ்வார் பேட்டை ஆண்டவருக்காக கொள்கையை தளர்த்தினாரா அல்டிமேட் ஸ்டார்.
இப்படி தள்ளாத வயதிலும் உழைத்த பறவை முனியம்மா இறுதியாக சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான மான் கராத்தே படத்தில் ராயபுரம் பீட்டரு என்ற பாடலில் துவண்டு இருந்தாள் மேலும் அந்தப் பாடலில் ஒரு சில வரிகளையும் பாடி இருந்தார். பரவை முனியம்மா. அந்த படத்திற்கு பின்னர் இவரை வேறு எந்த படத்திலும் காண முடியவில்லை. மான் கராத்தே படத்திற்கு பின்னர் பறவை முனியம்மாவிற்கு பட வாய்ப்புகள் குறைந்ததால் மதுரை பரவையில் தனது மூளைவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளி மகனுடன் தனியாக வசித்தார்.
ஒரு கட்டத்தில் வயது முதிர்வால் உடல்நலகுறைவு உடல் நலமும்மோசமானது. இதனால் வீட்டிலேயே முடங்கினார் பரவை முனியம்மா. இதை அறிந்த மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, ‘பரவை’ முனியம்மாவை நேரில் அழைத்து அவருக்கு ரூ.6 லட்சம் வைப்பு நிதி வழங்கி மாதந்தோறும் ரூ. 6000 ஆயிரம் வட்டியாக வருவாய் கிடைக்க ஏற்பாடு செய்தார். ஆனால், அந்த பணமும் அவரது வைத்திய செலவிற்கே சரியாக போனது. பறவை முனியம்மாவில் நிலையை அறிந்த சிவகார்த்திகேயன் நேரில் சந்தித்து கொஞ்சம் பணமும் கொடுத்து உதவினார்.
அவருக்கு பின்னர் எந்த ஒரு நடிகரும் பறவை முனியம்மாவை நேரில் சென்று சந்திக்கவில்லை. கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் தான் பறவை முனியம்மாவின் நிலையை அறிந்த பட்டதாரி பட நடிகர் அபி சரவணன் நேரில் சென்றுஅ வரை விசாரித்ததோடு சிகிச்சைக்கு கொஞ்சம் பண உதவியும் செய்துள்ளார். சமீபத்தில் பரவை முனியம்மாவின் நிலை மீண்டும் மோசமானது இதனால் அவரை மதுரையில் உள்ள வேலம்மாள் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மேலும், பரவை முனியம்மாவின் மருத்துவச் செலவையும் அந்த மருத்துவமனையை ஏற்றுக்கொண்டது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் பரவை முனியம்மா இறந்து விட்டதாக ஒரு பொய்யான செய்தி வெளியாகி இருந்தது.
ஆனால், வீடியோ ஒன்றை வெளியிட்ட நடிகர் அபிசரவணன், பரவை முனியம்மா நலமாக இருக்கிறார் என்றும், அவரது உடல் நலம் தேறி வருவதாகவும் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் பரவை முனியம்மா குணமடைந்து மீண்டும் வீடு திரும்பியுள்ளார். வீடு திரும்பிய பரவை முனியம்மாவை நேரில் சந்தித்து நடிகர் அபி சரவணன் புகைப்படம் எடுத்துக்கொண்டு அதனை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். தொடர்ந்து பரவை முனியம்மாவுக்கு பக்கபலமாக இருந்து வரும் நடிகர் அபி சரவணன் அவர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது