சினிமாவில் சாதிப்பது என்பது எல்லாம் சாதாரணமான விஷயம் இல்லை. சினிமாவில் நல்ல இடத்திற்கு வர வேண்டும் என்றால் பல கஷ்டங்களை தண்டி தான் வருகின்றனர். ஒரு சிலர் மட்டுமே உழைப்பை நம்பி இருக்கின்றனர் ஆனால் ஒரு சிலர் சினிமா என்ற போர்வையில் தப்பான பாதையில் பணம் சம்பாதிக்க ஆசைப்பட்டு பின்னர் மாட்டிக்கொள்கின்றனர்.
தெலுங்கு சினிமாவில் துணை நடிகரான பாரி நாகராஜூ நரேந்தர் என்பவர் பல ஆண்டுகளாக ஜூனியர் ஆர்டிஸ்டாக இருந்து வந்தவர்.சில காலங்களாக தெலுங்கு சினிமா தயாரிப்பு கம்பெனியில் பணியாற்றிவந்தாராம். பின்னர் எப்படியோ தெலுங்கு சினிமாவில் ஹீரோவாக மாறிவிட்டாராம்.
சில நாட்களிலேயே நல்ல வசதியாக செட்டில் ஆகிவிட்டாராம் பாரி நாகராஜூ நரேந்தர். சமீபத்தில் இவர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதாக இவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.விசாரணையில் இவர் இதுவரை 16 கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதாக தெரியவந்துள்ளது.
மேலும் இந்த கொள்ளை சம்பவத்தில் இதுவரை இவர் 16 சவரன் தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை திருடியுள்ளார் என்று தெரியவந்துள்ளது. மேலும் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட குற்றத்திற்காக தற்போது இவரை கைது செய்து சிறையில் ஆடைத்துள்ளது ஆந்திரா காவல் துறை.