சண்டாள பாவி நான் நடிக்க வரமாட்டேன்னு தானே சொன்னேன் – பரியேறும் பெருமாள் நடிகரை கன்னத்தில் அறைந்துள்ள மாரி செல்வராஜ்

0
1129
Thangaraj
- Advertisement -

படப்பிடிப்பு தளத்திலேயே என்னை மாரி செல்வராஜ் அடித்துவிட்டார் என்று பரியேறும் பெருமாள் நடிகர் அளித்திருக்கும் பேட்டி வீடியோவை தற்போது கமல் ரசிகர்கள் சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங் ஆக்கி வருகிறார்கள். தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனராக திகழ்பவர் மாரி செல்வராஜ். இவர் இயக்குனர் ராமிடம் உதவி இயக்குனராக பணியாற்றினார். அதன் பின் 2018 ஆம் ஆண்டு வெளியான பரியேறும் பெருமாள் என்ற படத்தின் மூலம் இயக்குனராக மாரி செல்வராஜ் தமிழ் சினிமா உலகில் அறிமுகம் ஆனார்.

-விளம்பரம்-

இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல ஆதரவை பெற்றதோடு மட்டும் இல்லாமல் பல்வேறு விருதுகளையும் பெற்றது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான படம் ‘கர்ணன்’. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது. தற்போது உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் மாமன்னன் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார் மாரி செல்வராஜ். இத்திரைப்படத்தில் உதயநிதி ஸ்டாலினிற்கு கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார்.

- Advertisement -

மாமன்னன் படம்:

இவர்களை தொடர்ந்து இந்த படத்தில் வைகை புயல் வடிவேலு , பகத் பாசில், லால் போன்ற பல முன்னணி நடிகர்களும் நடித்து வருகிறார்கள். இந்த படத்தை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. மேலும், இந்த படம் ஜூன் 29ஆம் தேதி இந்த படம் திரையரங்கில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருந்தது. இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசை அமைத்திருக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் ஆடியோ லான்ச் விழா நடைபெற்றது. அதில், மாமன்னன் படக்குழு, கமலஹாசன், வெற்றிமாறன், சிவகார்த்திகேயன், சூரி, வினோத் உட்பட பல பிரபலங்கள் கலந்து கொண்டிருந்தார்கள்.

ஆடியோ லான்ச் விழா:

மேலும், விழாவில் மாரி செல்வராஜ், தேவர்மகன் படத்தை பார்த்து தான் பரியேறும் பெருமாள், கர்ணன் படத்தை இயக்கினேன். கமலஹாசனின் தேவர் மகன் படம் ஜாதி பெருமையை அப்பட்டமாக பேசி இருந்தது. மாமன்னன் உருவாவதற்கும் தேவர் மகன் படம் தான் காரணம். தேவர் மகன் பார்க்கும்போது ஏற்பட்ட வலி, அதிர்வுகள் என எல்லாமே இருக்கிறது. எல்லா இயக்குனர்களும் அந்த படத்தை பார்த்துவிட்டு படம் எடுப்பார்கள். தேவர் மகனில் இருக்கும் இசக்கி தான் மாமன்னன். அந்த இசக்கி மாமன்னனாக மாறினால் எப்படி இருக்கும் என்பது தான் மாமன்னன் படம் என்று கமலஹாசனை வம்பு இழுத்து இருக்கிறார்.

-விளம்பரம்-

கமலஹாசனின் தேவர்மகன் படம் குறித்து சொன்னது:

இப்படி கமலஹாசனின் தேவர்மகன் படத்தை மாரி செல்வராஜ் பேசியது குறித்து கமல் ரசிகர்கள் சோசியல் மீடியாவில் மாரி செல்வராஜூக்கு எதிராக மீம்ஸ்களை தெரிக்க விட்டு வருகிறார்கள். அதோட மாரி செல்வராஜூக்கு ஏற்கனவே கமல் மீது தீராத பகை இருந்திருக்கிறது. அதை இந்த மாமன்னன் படத்தின் ஆடியோ லான்ச் விழாவில் வைத்து தீர்த்து கொண்டீர்கள் என்றும், நீங்க எடுத்தா புரட்சிப்படம் மத்தவங்க எடுத்தா ஜாதிப்படமா ? என்றும் கமலின் ரசிகர்கள் கமண்ட் செய்து வருகின்றனர். இந்தநிலையில் மாரி செல்வராஜ் குறித்து பரியேறும் பெருமாள் பட நடிகர் நெல்லை தங்கராஜ் அளித்து இருக்கும் பழைய பேட்டி வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

நெல்லை தங்கராஜ் அளித்த பேட்டி:

அதில் நெல்லை தங்கராஜ், படத்தில் ஒரு காட்சியில் வசனத்தை மறந்து விட்டேன். சண்டாள பாவி நான் நடிக்க வரமாட்டேன்னு தானே சொன்னேன். என்னை வலுக்கட்டாயமாக கூட்டிட்டு வந்து இப்படி அடித்து கொல்றீங்களே! என்று புலம்பிட்டு இனி நடிக்க முடியாது கிளம்பிடலாம் என்று நினைத்தேன். அப்போது மாரி செல்வராஜ் சார் என்னை அடித்துவிட்டார். நான் நடிக்க மாட்டேன் என்று சொன்னேன் இருந்தும் என்னை கட்டாயப்படுத்தி நடிக்க தூக்கிட்டு வந்தார்கள்.

நடிக்க கூட்டிட்டு வந்து கொலை செய்ய கூப்பிட்டு வந்தீங்களானு கேட்டு அழுதேன். பின் அவர் என் கண்ணீரை துடைத்து நீ ஆடினால் ஊர்ல மட்டும்தான் பேர் வரும். படத்தில் நடித்தால் உலகம் முழுவதும் உனக்கு பேர் வரும் என்று ஏதேதோ சொல்லி என்னை சமாதானப்படுத்தி நடிக்க வைத்தார் என்று கூறியிருந்தார். தற்போது இந்த பழைய வீடியோவை தான் கமல் ரசிகர்கள் சோசியல் மீடியாவில் வைரல் ஆக்கி மாரி செல்வராஜை வறுத்து எடுத்து வருகிறார்கள்.

Advertisement