சில அரிய வகை பூக்கள், மனதினை மகிழ்விக்கவே பிறக்கின்றனவோ? – மகளுடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்த பார்த்திபன்.

0
451
- Advertisement -

தமிழ் சினிமாவில் எத்தனையோ நடிகர் நடிகைகள் திருமணம் செய்துகொண்டுள்ளனர். அந்த வகையில் பார்த்திபன் – சீதா தம்பதியும் ஒருவர். 80களில் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை சீதா. இவர் நடித்த ஆண் பாவம், குரு சிஷ்யன், ராஜாநடை என பல படங்கள் ஹிட் ஆகியுள்ளது. 80 ஸ் காலகட்டத்தில் மிகவும் பிஸியான ஒரு நடிகையாக திகழ்ந்து வந்தவர் நடிகை சீதா, இவருக்கு படங்களில் நேரம் ஒதுக்க முடியாத நிலையால் பல படங்களில் நடிக்கும் வாய்ப்பை கூட இவர் ஒதுக்கி இருக்கிறார். நடிகை சீதாவின் சினிமா வாழ்க்கை பாழாய் போனதற்கு முக்கிய காரணமே இவருடைய திருமண வாழ்க்கை தான்.

-விளம்பரம்-

ஆண் பாவம் படத்திற்கு பின்னர் பார்த்திபன் இயக்கி நடித்த புதிய பாதை படத்தில் நடித்தார் சீதா. அப்போது இவர்கள் இருவருக்கும் காதல் ஏற்பட்டது. ஆனால், சீதாவின் வீட்டில் இவர்கள் காதலை ஏற்றுக்கொள்ளாததால் வீட்டை விட்டு வெறியேறினார். சீதாவிற்கும் நடிகர் பார்த்திபனுக்கும் கடந்த 1989 ஆம் ஆண்டு நண்பர்கள் முன்னிலையில் திருமணம் ஆனது. நடிகை சீதா திருமணத்திற்கு பின் நடிப்பதில் பார்த்திபனுக்கு பிடிக்கவில்லை.

- Advertisement -

10 ஆண்டு பிரேக் :

இதனால் பிசியாக நடித்து வந்த சீதா திருமணத்திற்கு பின் 10 வருடங்கள் சினிமாவை விட்டுவிட்டார். திருமணத்திற்கு பின் இவர்களுக்கு இரண்டு மகள்கள் பிறந்தனர். மேலும், ஒரு மகனை தத்தெடுத்து வளர்ந்தனர். அதன்பின்னர் 10 வருடங்கள் கழித்து கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2001ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர். 10 வருடங்கள் சினிமாவில் பிரேக் எடுத்த சீதா பின் 2002 ஆம் ஆண்டு மீண்டும் நடிக்கத் துவங்கினார்.

இரண்டாம் திருமணம் :

வயதாகி விட்டதால் இவருக்கு சினிமாவில் பெரிதாக வாய்ப்பு கிடைக்கவில்லை. அதனால் சீரியலிலும் நடிக்கத் துவங்கினார் சீதா. இப்படி தனது இரண்டாம் இன்னிங்சை கஷ்டப்பட்டு துவங்கிய சீதா மீண்டும் 2010 ஆம் ஆண்டு சதீஷ் தனது 43 ஆம் வயதில் சீரியல் நடிகர் சதீஷ் சதீசுடம் காதல் மலர்ந்துள்ளது. சில ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்து வந்த இவர்கள் பின்னர் முறைப்படி திருமணம் செய்து கொண்டனர். ஆனால், அந்த திருமணமும் கசந்து போனது.

-விளம்பரம்-

சீதா இரண்டாம் திருமணம் செய்தாலும் பார்த்திபன் இன்று வரை சிங்கிளாக தான் இருந்து வருகிறார். பார்த்திபன் – சீதா தம்பதிக்கு ஒரு மகனும் இரண்டு மகள்களும் இருக்கின்றனர். இதில் இளைய மகள் கீர்த்தனா. ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார், பின்னர் திரைப்பட இயக்கத்தில் ஆர்வம் செலுத்தத் தொடங்கினார். இயக்குநர் மணிரத்னம் மற்றும் தந்தையிடம் பயிற்சி பெற்றவர்.

மூத்த மகள் அபிநயா

கீர்த்தனா லேட்டஸ்ட் புகைப்படம் :

தற்போது பார்த்திபன் இயக்கிவரும் பட வேலைகளில் கவனம் செலுத்தி வருகிறார். மேலும் கீர்தனாவிற்கு கடந்த 2018 ஆம் ஆண்டு தான் திருமணம் நடைபெற்றது. சீதாவை பிரிந்தாலும் தனது பிள்ளைகளை கண்ணும் கருத்துமாக பார்த்துக்கொண்டு வருகிறார் பார்த்திபன். அந்த வகையில் தனது மகளுடன் எடுத்த லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ள பார்த்திபன் ‘சில அரிய வகை பூக்கள், மனதினை மகிழ்விக்கவே பிறக்கின்றனவோ?’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Advertisement