நீங்க தான் அடுத்த சிவகார்த்திகேயன், CWC பிரபலத்தை பாராட்டிய பார்த்திபன் (இவரும் ரொம்ப நாளா கஷ்டப்பட்ராரு)

0
383
parthiban
- Advertisement -

விஜய் டிவி என்றாலே அனைவருக்கும் ஞாபகத்திற்கு வருவது ரியாலிட்டி நிகழ்ச்சிகள் தான். அந்த அளவிற்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி நிகழ்ச்சிகள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. விஜய் டிவியில் சூப்பர் சிங்கர், பிக் பாஸ், காமெடி சாம்பியன்ஸ், பிபி ஜோடிகள் என்று பல நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது. அதில் டாப் லிஸ்டில் இருப்பது குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான். இந்த நிகழ்ச்சிக்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது.

-விளம்பரம்-

தற்போது குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சி கோலாகலமாக சென்று கொண்டு இருக்கிறது. முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து இரண்டாம் சீசனுக்கு எக்கச்சக்க வரவேற்பு கிடைத்து இருந்தது. அதற்கு முக்கிய காரணமே இந்த நிகழ்ச்சியில் வரும் கோமாளிகள் தான். மேலும், இதுவரை தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சமையல் நிகழ்ச்சிகளிலேயே இந்த நிகழ்ச்சி தான் டிஆர்பி -யில் முதலிடத்தில் இருக்கிறது.

- Advertisement -

இதையும் பாருங்க : 18 வயதிலேயே எனக்கு அந்த பிரச்சனை இருந்தது – தன் முடி கொட்டிய காரணம் குறித்து ஓப்பனாக கூறிய ரஜினி. அறிய வீடியோ இதோ.

குக்கு வித் கோமாளி 3 :

இந்த நிகழ்ச்சியில் நடுவர்களாக வெங்கடேஷ் பத் மற்றும் தாமு இருக்கிறார்கள். அதேபோல் இந்த நிகழ்ச்சியில் தொகுப்பாளர் ரக்ஷன் தான். மேலும், கொரோனா லாக்டவுனில் மக்களுக்கு இருந்த பிரச்சனைக்கு ஒரு மருந்தாக குக் வித் கோமாளி நிகழ்ச்சி இருந்தது என்றே சொல்லலாம். இந்த நிகழ்ச்சி சமையல் மட்டும் இல்லாமல் பலரையும் சிரிக்க வைக்கும் நிகழ்ச்சியாக இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் மற்றும் கோமாளிகள் மாறினாலும் கடந்த 3 சீசன்களாக மாறாமல் இருப்பது இந்த நிகழ்ச்சியின் நடுவர், தொகுப்பாளர் தான்.

-விளம்பரம்-

சிறப்பு விருந்தினராக வந்த பார்த்திபன் :

தற்போது குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கின்றது. தன்னுடைய படத்தின் புரமோஷனுக்காக குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பார்த்திபன் சென்றிருக்கிறார். தற்போது பார்த்திபன் அவர்கள் இரவில் நிழல் என்ற படத்தில் நடித்து இருக்கிறார். இந்த படம் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டு உள்ளது. இதில் பார்த்திபன், வரலட்சுமி சரத்குமார், ரோபோ சங்கர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்திருக்கிறார்.

பார்த்திபனின் இரவின் நிழல் :

இந்த படத்தை இயக்குவது மட்டுமில்லாமல் பார்த்திபன் நடித்தும் இருக்கிறார். அதுமட்டும் இல்லாமல் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான ‘விக்டோரியா’ என்னும் ஜெர்மானிய திரைப்படம் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டு இருந்தது. அது ஆஸ்கர் விருதின் இறுதி பட்டியல் வரை சென்றிருந்தது. தற்போது பார்த்திபனும் அந்த முயற்சியில் இறங்கி இருக்கிறார். இந்நிலையில் இந்த படத்தின் புரமோஷனுக்காக தான் பார்த்திபனும் நடிகை பிரகிதாவும் நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறார்கள். நிகழ்ச்சியில் படத்தைப் பற்றி பார்த்திபன் சில விஷயங்களை பேசி இருந்தார்.

ரக்ஷனை பாராட்டிய பார்த்திபன் :

அப்போது தொகுப்பாளர் ரக்சன் கூறியது, அந்த படத்தில் ஒரு ஜூனியர் ஆர்ட்டிஸ்டாக கூட சான்ஸ் கிடைக்காதா? என சென்றேன். அப்படி ஒரு படம் அது என்று சொன்னார். அதைக் கேட்ட பார்த்திபன் நீங்கள் தற்போது தனியாக படம் பண்ணுறீங்க என்று கேள்விப்பட்டேன். அடுத்த சிவகார்த்திக் நீங்க தான் எனக் கூறி இருக்கிறார். இப்படி பார்த்திபன் கூறியிருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பரவலாகி வருகிறது. இதற்கு ரசிகர்கள் பலரும் உண்மையாகவே ரக்ஷனுக்கு தகுதி இருக்கிறது என்றெல்லாம் கூறி வருகிறார்கள்.

Advertisement