இரவு பார்ட்டியில் அதை பார்த்துட்டேன், அத செல்ல கூடாதுன்னு தான் என் மேல திருட்டு பட்டம் போட்டாங்க – பார்வதி நாயரின் பணியாளர் வேதனை.

0
498
parvathy
- Advertisement -

நடிகை பார்வதி நாயர் வீட்டில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருள் திருட்டு போயி இருப்பதாக அவரது வீட்டின் வேலைக்காரர் மீது அவர் புகார் கொடுத்திருந்த நிலையில் தற்போது பார்வதி நாயர் குறித்து பல உண்மைகளை கூறி இருக்கிறார் அவரின் பணியாளர். அல்டிமேட் ஸ்டார் அஜித் நடிப்பில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான என்னை அறிந்தால் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. கௌதம் வாசுதேவ் இயக்கத்தில் உருவாகி இருந்த இந்த படத்தில் அஜித், அருண்விஜய், த்ரிஷா, அனுஷ்கா ஷெட்டி, பார்வதி நாயர் ,விவேக் என்று பல்வேறு நட்சத்திர பட்டாளங்கள் நடித்திருந்தார்கள்.

-விளம்பரம்-

இந்த படத்தின் மூலம் பார்வதி நாயர் தமிழ் ரசிகர்களின் கவனத்தை அதிகமாக பெற்று இருந்தார். அதேபோல இந்த படத்தின் மூலம் தான் அருண் விஜய்க்கு ஒரு மாபெரும் திருப்பு முனையாக அமைந்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. என்னை அறிந்தால் படத்திற்கு முன்பாகவே தமிழில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ‘நிமிர்ந்து நில் ‘ படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவில் கால் பதித்தார் பார்வதி நாயர். இருந்தாலும், இவர் பிரபலமானது என்னவோ என்னை அறிந்தால் படத்தில் தான்.

- Advertisement -

அதன் பின் இவர் உத்தமவில்லன், கோடிட்ட இடங்களை நிரப்புக, நிமிர், வெள்ள ராஜா போன்ற பல்வேறு படங்களில் நடித்து இருக்கிறார். அதன் பின் இவர் உத்தமவில்லன், கோடிட்ட இடங்களை நிரப்புக, நிமிர், வெள்ள ராஜா போன்ற பல்வேறு படங்களில் நடித்து இருக்கிறார். பாபி சிம்ஹா நடிப்பில் வெளிவந்த ஒரு வெப் சீரிஸிலும் பார்வதி நடித்து இருக்கிறார். மேலும், இவர் தமிழ் மொழி மட்டுமல்லாது மலையாளம் மற்றும் கன்னட மொழிகளிலும் நடித்து வருகிறார்.

தற்போது இவர் பாரி கே விஜய் இயக்கத்தில் உருவாகி வரும் ஆலம்பனா என்ற படத்தில் நடித்து வருகிறார்.கடந்த சில தினங்களுக்கு முன்னர் தனது வீட்டின் பணியாளர் மீது பார்வதி நாயர் போலீசில் புகார் அளித்து இருந்த . வீட்டில் இரண்டு வருடமாக வேலை செய்த நபர் ஒருவர் பல லட்சம் ரூபாய் மதிப்புடைய இரண்டு கைக்கடிகாரம், லேப்டாப், செல்போன் போன்ற பொருட்களை திருடி சென்று விட்டார் என்று போலீசில் புகார் அளித்து இருந்தார்.

-விளம்பரம்-

இப்படி ஒரு நிலையில் பார்வதி வீட்டில் வேலை பார்த்த சுபாஷ் சந்திர போஸ் என்பவர்  தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் பார்வதி நாயர் தன் மீது அபாண்டமாக குற்றச்சாட்டை வைத்திருக்கிறார் இரவு நேரங்களில் அவர் சில ஆண் நண்பர்களுடன் வீட்டில் மது அருந்திவிட்டு கோத்தழைப்பதை தான் பார்த்து விட்டதாகவும் இதனால் அவருக்கு கோபம் ஏற்பட்டுவிட்டது.

எங்கே நான் அந்த விஷயத்தை வெளியில் சொல்லி விடுவானோ என்று அன்றைய நாள் முதலை தன்னை அடிக்கடி திட்டியும், அசிங்கமாக பேசி வந்ததாகவும் ஒரு கட்டத்தில் தன்னை துன்புறுத்தி தன் மீது எச்சில் துப்பியதாகவும் கூறி இருக்கிறார்.அதேபோல அடியாட்களை வைத்து தன்னை பார்வதி நாயர் தாக்கியதாகவும் சுபாஷ் சந்திரபோஸ் தன்னுடைய புகாரில் தெரிவித்திருக்கிறார். மேலும், கடந்த 27 ஆம் தேதி காவல் நிலையத்தில் என் மீது புகார் அளிப்பாயா என்று மிரட்டியதாகவும் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி செய்ததாக மீண்டும் தன் மீது அபாண்டமாக பார்வதி நாயர் புகார் அளித்திருக்கிறார் என்றும் சுபாஷ் சந்திரபோஸ் கூறியிருக்கிறார்

Advertisement