ஆமா, நான் பெரிய பொண்ணு தான் இப்போ என்ன பிரச்சனை – முதல் முறையாக Trollகளுக்கு பதிலடி கொடுத்த ப்ரீத்தி கிஷோர்

0
2298
Preethi
- Advertisement -

அவசரம் அவசரமாக திருமணம் செய்ததற்கு காரணம் இது தான் என்று பசங்க பட நடிகர் கிஷோர்- ப்ரீத்தி அளித்திருக்கும் பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த 2009ல் வெளியான “பசங்க” திரைப்படம் பெரிய அளவில் ஹிட் அடித்தது. அதோடு நடிகர் விமலும் இந்த படத்தின் மூலம் தான் சினிமாவில் அறிமுகமாகினார். பசங்க படம் முழுக்க முழுக்க குழந்தைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம். இப்படத்தில் அதிகமாக குழந்தைகளுக்கு இடையில் நடக்கும் சண்டைகள் கருத்து வேறுபாடுகள் போன்றவை காட்டப்படும்.

-விளம்பரம்-

இதனை தொடர்ந்து கடந்த 2015ஆம் ஆண்டு பசங்க 2 எடுக்கப்பட்டது. ஆனால், அந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை படக்குழுவிற்கு கொடுக்கவில்லை. மேலும், பசங்க 1 படத்தின் மூலம் அன்புக்கரசு கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் கிஷோர். இப்படத்தை தொடர்ந்து இவர் கோலி சோடா, வஜ்ரம், 6 அத்தியாயம், சகா, ஹவுஸ் ஓனர், உறுதிகொள் போன்ற தமிழ் படங்களிலும், துரோகி,புள்ளி ஆகிய தெலுங்கு படங்களிலும் நடித்து இருக்கிறார்.

- Advertisement -

கிஷோர்- ப்ரீத்தி காதல் :

மேலும், பசங்க படம் வெளியாகி 13 வருடங்கள் கழித்து கடந்த ஆண்டு தான் இப்படத்தில் நடித்திருந்த கிஷோருக்கு தமிழ்நாடு அரசின் விருது வழங்கப்பட்டது. இப்படி ஒரு நிலையில் நடிகர் கிஷோர் சீரியல் நடிகை ப்ரீத்தி குமாரை காதலிப்பதாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். இவர் வேற யாரும் இல்லைங்க, விஜய் டிவியில் ஒளிபரப்பான “ஆபீஸ்” என்ற சீரியலின் மூலம் சின்னதிரைக்கு அறிமுகமானவர் ப்ரீத்தி குமார் .

நடிகை ப்ரீத்தி குமார்-கிஷோர் திருமணம்:

பின் இவர் `லட்சிமி கல்யாணம், வள்ளி, கேளடி கண்மணி, தெய்வம் தந்த வீடு, வானத்தை போல, கோபுரங்கள் சாய்வதில்லை என பல சீரியல்களில் நடித்திருக்கிறார். தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் நினைத்தாலே இனிக்கும் என்ற சீரியலிலும் நடித்து வருகிறார். பின் கிஷோர்- ப்ரீத்தி குமார் இருவரும் கடந்த ஆண்டு தங்களுடைய காதலை இணையத்தில் தெரிவித்து இருந்தார்கள். உடனே, இவர்கள் இருவருக்கும் திருமணம் செய்து கொண்டார்கள்.

-விளம்பரம்-

வயது வித்தியாசம் பற்றி கிஷோர் :

அதோடு கிஷோரை விட ப்ரீத்தி 4 வயது பெரியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து சோசியல் மீடியாவிலும் சர்ச்சை எழுந்து இருந்தார். இந்நிலையில் திருமணம் முடிந்த கையோடு இவர்கள் இருவரும் கணவன்-மனைவியாக செய்தி ஊடகம் ஓன்றுக்கு பேட்டி அளித்து இருக்கிறார்கள். அதில் அவர்கள், எங்கள் இருவருக்கு பிடித்து விட்டது. எங்களுடைய வீட்டிலும் எந்த பிரசனையும் இல்லை அவர்களது வீட்டிலும் எந்த பிரச்னையும் இல்லை. எனவே திருமணம் செய்து கொண்டோம். வயது எங்களுக்கு பிரச்சனையாகவே இல்லை.

திருமணம் குறித்து பிரீத்தி சொன்னது:

இதில் வயது வித்தியாசம் ஒரு விஷயமா? என்று கூறினார். இதனை அடுத்து பிரீத்தி, அதோடு எங்களுடைய திருமணம் அவசர அவசரமாக நடந்து விட்டது. இதனால் எங்களால் நிறைய பேரை அழைக்க முடியவில்லை. என்னுடைய அப்பா நான்காண்டுகளாக உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார். அவர் ஆசையை நிறைவேற்ற தான் நாங்கள் இவ்வளவு சீக்கிரமாக திருமணம் செய்து கொண்டோம். அப்பா மட்டும் நன்றாக இருந்தால் கண்டிப்பாக லேட்டாக தான் நாங்கள் திருமணம் செய்திருப்போம் என்று கூறி இருக்கிறார்.

Advertisement