இரண்டாவது திருமணத்தை பற்றி வெளிப்படையாக சொன்ன பாவனி- வைரலாகும் வீடியோ

0
519
pavni
- Advertisement -

தன்னுடைய திருமணம் குறித்து பிக் பாஸ் பாவனி கூறிய தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தனெக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை சேர்த்து வைத்து இருப்பவர் பாவனி ரெட்டி. சின்னத்திரையில் மிக பிரபலமான நடிகையாக உள்ளவர் பாவனி ரெட்டி. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த சின்ன தம்பி என்ற சீரியலில் கதாநாயகியாக நடித்து இருந்தார். இந்த சீரியல் மூலம் இவருக்கு மக்கள் மத்தியில் பிரபலம் கிடைத்தது. ஆனால், இவர் இந்த சீரியலில் நடிப்பதற்கு முன்னர் ‘ரெட்டை வால் குருவி’ மற்றும் ‘தவணை முறை வாழ்க்கை’ போன்ற பல சீரியல்களில் நடித்து இருக்கிறார்.

-விளம்பரம்-

அதோடு வஜ்ரம் என்ற தமிழ் படத்திலும் இவர் நடித்துள்ளார். மேலும், இவர் தமிழ் மொழி மட்டும் இல்லாமல் தெலுங்கு மொழி சீரியல்களிலும், படங்களிலும் நடித்து இருக்கிறார். இதனிடையே பாவனி கடந்த 2016 ஆம் ஆண்டு பிரதீப் என்ற நடிகரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால், ப்ரதீப் தற்கொலை செய்து கொண்டார். அதன் பின் சிறிது காலம் பாவனி மீடியாவில் இருந்து விலகி இருந்தார். தற்போது இவர் தெலுங்கு சீரியல்களில் நடித்து வருகிறார்.

- Advertisement -

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பாவனி:

சமீபத்தில் முடிவடைந்த தமிழ் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் பாவனி கலந்து இருந்தார். மேலும், பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கிய ஆரம்பத்திலிருந்தே பாவனி பல பிரச்சினைகளில் சிக்கி இருந்தார். அது மட்டுமில்லாமல் 11 முறை நாமினேஷனில் பாவனி வந்தார். இருந்தும் அவரை நாமினேஷனில் காப்பாற்றி இறுதி சுற்றுக்கு மக்கள் அனுப்பி வைத்துள்ளார்கள். அதோடு பிக் பாஸ் சீசன் 5 இறுதி போட்டியாளர்களாக பவானி, பிரியங்கா, ராஜு, நிரூப், அமீர் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.

பாவனி சம்பளம்:

மேலும், எல்லோரும் எதிர்பார்த்த மாதிரி ராஜு பிக் பாஸ் சீசன் 5ன் டைட்டில் பட்டத்தை தட்டி சென்றார். பின் இரண்டாவது இடத்தை பிரியங்கா, மூன்றாம் இடத்தை பவானி பிடித்து உள்ளார்கள். அதுமட்டும் இல்லாமல் பவானி ரெட்டிக்கு ஒரு வாரத்திற்கு – 1.25 லட்சம் என்று பேசப்பட்டது. இவர் மொத்தம் 105 நாட்கள் வீட்டில் இருந்தார். ஆகவே மொத்தமாக 18.75 லட்சம் சம்பளமாக பெற்றார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் பாவனி தன் திருமணம் குறித்து கூறி இருக்கிறார்.

-விளம்பரம்-

பாவனி தன் கணவர் பற்றி கூறியது:

பிக் பாஸ் நிகழ்ச்சியின் போது கடந்து வந்த பாதை என்ற டாஸ்கில் தன் காதல் கணவரையும், அவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தையும் கூறியிருந்தார். இது அவருக்கு மட்டுமல்லாமல் பலருக்கும் அதிர்ச்சியாக இருந்தது. அதற்கு பிறகு தனக்கு ஏற்பட்ட காதல் தோல்விகளையும் கூறி இருந்தார். பின் பிக் பாஸ் வீட்டில் அபிநய்- பாவனி இருவக்கும் இடையே ஏற்பட்ட உறவு பயங்கர சர்ச்சையானது. அதேபோல் அமீர், பாவனியை காதலிப்பதாக பிக்பாஸ் வீட்டில் கூறியிருந்தார்.

பாவனி பதிவிட்ட பதிவு:

ஆனால், அந்த காதலை ஏற்றுக் கொள்ளாமல் பவானி தவிர்த்திருந்தார். இது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று. இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பவானி ரசிகர்களுடன் சோசியல் மீடியாவில் உரையாடி இருக்கிறார். அப்போது ரசிகர் திருமணம் குறித்து கேட்டதற்கு பவானி கூறியிருப்பது, என் வாழ்க்கையில் இனி திருமணம் என்பது இல்லை. என்னுடைய முழு கவனமும் இனி சினிமா, நடிப்பு என்பதில் தான் இருக்க போகிறது என்று கூறியிருக்கிறார். இவரின் பதிவு தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement