பிளாஸ்டிக் சர்ஜரி செஞ்சனா? தீயாக பரவிய செய்திக்கு முற்றுப்புள்ளி வைத்த குக் வித் கோமாளி பவித்ரா லட்சுமி

0
128
- Advertisement -

தன்னைப் பற்றிய சர்ச்சைகளுக்கு நடிகை பவித்ரா லட்சுமி கொடுத்திருக்கும் விளக்கம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர் பவித்ரா லட்சுமி. இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி மூலம் தான் மக்கள் மத்தியில் பிரபலமாக அறியப்பட்டார். இந்த நிகழ்ச்சி மூலம் இவருக்கு என்று தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது.

-விளம்பரம்-

இவர் ஆரம்பத்தில் குறும்படம் மூலம் மீடியா துறைக்கு அறிமுகமானார். பின் இவர் மலையாளத்தில் உல்லாசம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மானாட மயிலாட என்ற நடன நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு இருந்தார். பின் இவர் இரட்டை வால் குருவி என்ற சீரியலிலும் நடித்து இருந்தார். அதை தொடர்ந்து இவர் நினைக்கத் தெரிந்த மனமே என்ற சீரியலில் கூட நடித்திருக்கிறார். இருந்தாலும், இவரை மக்கள் மத்தியில் பிரபலம் ஆக்கி இருந்தது குக் வித் கோமாளி நிகழ்ச்சிதான்.

- Advertisement -

பவித்ரா திரைப்பயணம்:

அதன் பின் இவர் மலையாள நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியாகியிருந்த ஓ காதல் கண்மணி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதற்குப்பின் இவர் சதீஷ் ஹீரோவாக நடித்திருந்த நாய் சேகர் என்ற படத்தில் ஹீரோயினியாக நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதனை அடுத்து இவர் மலையாளம், தமிழ் என பிற மொழி படங்களில் நடித்து வருகிறார். கடைசியாக இவர் கடந்த ஆண்டு வெளிவந்த ஜிகிரி தோஸ்த் என்ற படத்தில் நடித்திருந்தார்.

பவித்ரா குறித்த தகவல்:

தற்போது இவர் டைம் என்ன பாஸ் என்ற வெப் சீரிஸில் நடித்து இருக்கிறார். இதைத் தொடர்ந்து இவர் சில படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். சில மாதங்களுக்கு முன் தான் இவரின் அம்மா உடல் நலக்குறைவால் இறந்தார். இது பவித்ராவுக்கு பெரும் இடியாக இருந்தது. அதில் இருந்து மீண்டு இவர் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இதை அடுத்து சில மாதங்களுக்கு முன் அளித்த ஒரு பேட்டியில் பவித்ரா பார்ப்பதற்கு ரொம்ப ஒல்லியாக இருந்தார். இதை பார்த்து தான் நெட்டிசன்கள், எப்படி இவர்களுடைய லிப்ஸ் இவ்வளவு பெருசா ஆச்சி? குக் வித் கோமாளில் இருந்தபோது இப்படி இல்லை.

-விளம்பரம்-

பவித்ரா உருவகேலி:

இவர் தேவையில்லாத சர்ஜரி செய்து உடம்பை கொடுத்து கொண்டார் என்று உருவகேலி செய்து இருந்தார்கள். அதற்கு பவித்ரா, நான் நிறைய வெயிட் குறைத்து இருக்கிறேன். அதனால் தான் என் உடலில் மாற்றம் தெரிகிறது. எளிதாக உண்மை எது என்று தெரியாமல் ஒருவரை பற்றி சொல்லக்கூடாது. நான் சர்ஜரி எல்லாம் செய்யவில்லை என்று சொன்னார். இருந்துமே பவித்ரா, முகத்திற்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்து இருக்கிறார். அதனால் தான் அவருக்கு உடல் அலர்ஜி ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என்று சோசியல் மீடியாவில் செய்திகள் பரவிக் கொண்டிருக்கிறது.

பவித்ரா விளக்கம்:

இந்நிலையில் இது தொடர்பாக விளக்கம் அளித்த பவித்ரா லட்சுமி, நான் பிளாஸ்டிக் சர்ஜரி செய்திருக்கிறேன் என்றெல்லாம் சோசியல் மீடியாவில் வதந்திகள் பரவி வருகிறது. அது முற்றிலும் பொய். நான் உடல்நலம் பாதிக்கப்பட்டு எந்த சிகிச்சையும் செய்யவில்லை. சமூக ஊடகங்களில் இதுபோன்ற வதந்திகளை யாரும் பரப்ப வேண்டாம். உங்களுடைய பொழுதுபோக்கிற்காக என் வாழ்க்கையோடு விளையாடவும் வேண்டாம். எனக்கு என்று ஒரு எதிர்காலம் இருக்கிறது. இது போன்ற வததிகளை பரப்பி அதை நீங்கள் கடினமாக வேண்டாம் என்று கூறி இருக்கிறார்.

Advertisement