நடிகருடன் ஒரே அறையில் தங்கி இருந்த வீட்ல விசேஷம் பட நடிகை, செருப்பால் அடித்த முன்னாள் மனைவி. வீடியோ வைரலானதால் பறிபோன வாய்ப்புகள்.

0
535
pavithra
- Advertisement -

பிரபல நடிகருடன் ஹோட்டலில் தங்கி இருந்த போது முன்னாள் மனைவி வந்து செருப்பால் அடித்த வீடியோ வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் தற்போது இந்த விவகாரத்தால் பட வாய்ப்பை இழந்து இருக்கிறார் நடிகை பவித்ரா.தென்னிந்திய சினிமா உலகில் பிரபலமான நடிகையாக திகழ்பவர் பவித்ரா லோகேஷ். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழி படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்திருக்கிறார். இவர் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். சமீபத்தில் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் வெளியான வீட்ல விசேஷம் படத்தில் அபர்ணாவின் அம்மாவாக நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-

இந்த நிலையில் இவர் பிரபல நடிகருக்கு நான்காவது மனைவியாகி இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அதாவது, தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் சகோதரரும், நடிகருமான நரேஷ் என்பவரை தான் நடிகை பவித்ரா லோகேஷ் திருமணம் செய்திருக்கிறார். நரேஷ் அவர்கள் நடிகர் மட்டும் இல்லமால் தயாரிப்பாளரும் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

நடிகருடன் ஒரே அறையில் :

மேலும், பவித்ரா-நரேஷ் இருவரும் நடிகர் சங்க தேர்தலில் இணைந்து பணியாற்றிய போது இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டு காதல் மலர்ந்ததாக கூறப்படுகிறது. தற்போது நடிகர் நரேஷுக்கு 60 வயதாகிறது. இவர் ஏற்கனவே 3 பேரை திருமணம் செய்து ஆளுக்கு ஒரு வீட்டில் வைத்து குடித்தனம் நடத்தி வருகிறார். அதேபோல் தற்போது பவித்ராவுக்கு 43 வயதாகிறது.பவித்ராவும் ஒருவருக்கு இரண்டாவது மனைவியாக இருந்தார். இந்த நிலையில் இருவரும் முறைப்படி விவாகரத்து பெறாமல் திருமணம் செய்துகொள்ளப்போவதாக கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.

செருப்பால் அடித்த முன்னாள் மனைவி :

அதன் காரணமாகவே தங்களின் திருமண அறிவிப்பை ரகசியமாக வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இப்படி ஒரு நிலையில் இவர் மைசூரில் உள்ள ஒரு ஓட்டலில் நடிகர் நரேசுடன் தங்கி இருந்தார். அவர்கள் ஓட்டலில் தங்கியிருப்பது நரேஷின் மூன்றாவது மனைவி ரம்யாவுக்கு தெரியவந்தது. இதை தொடர்ந்து அவர் அங்கு வந்தார். அங்கு பவித்ராவையும், நரேஷையும் பார்த்து சண்டை போட்டார். மேலும், பவித்ராவை செருப்பால் அடிக்க முயன்றார்.

-விளம்பரம்-

பவித்ரா வெளியிட்ட வீடியோ :

அங்கு பாதுகாப்புக்கு வந்த போலீசார் ரம்யாவை தடுத்து நிறுத்தினர். ரம்யாவைப் பார்த்தது விசில் அடித்துவிட்டு பவித்ராவுடன் காரில் கிளம்பி சென்றார் நரேஷ். இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. மேலும், இந்த விவகாரம் கன்னடம் மற்றும் தெலுங்குத் திரையுலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.நரேஷ் ஏற்கெனவே ரம்யாவை விவாகரத்து செய்துவிட்டதாகத் தெரிவித்துள்ள நிலையில், ரம்யா தான் இன்னும் நரேஷின் மனைவிதான் என்று கூறி வருகிறார்.இதனிடையே, பவித்ரா லோகேஷ் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் ரம்யாவின் குற்றச்சாட்டுக்களை நம்ப வேண்டாம் என்று கூறி இருந்தார்.

பறிபோன வாய்ப்புகள் :

மேலும், தானும் நரேஷும் கணவன் மனைவி அல்ல என்றும் தெரிவித்துள்ளார். மேலும், மைசூரு போலீசிடம் புகார் ஒன்றையும் பதிவு செய்துள்ளார். இந்த விவகாரம் நாளுக்கு நாள் பூதாகரமாக வெடித்து வரும் நிலையில், நடிகை பவித்ரா லோகேஷ் நடிக்க இருந்த 2 தெலுங்கு திரைப்படங்களில் இருந்து அவர் நீக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. அதாவது தெலுங்கு பட உலகின் முன்னணி இளம் நடிகர்களின் படங்களில் அம்மா வேடத்திற்கு நடிகை பவித்ரா லோஷகேசை படக்குழுவினர் தேர்வு செய்திருந்ததாகவும், தற்போது அவரை அந்த படங்களில் இருந்து நீக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement