ஆறுதல் சொல்ல இவ்வளவு அலப்பறையா? கார் மீது பயணித்த தெலுங்கு உச்ச நடிகர். திட்டி தீர்க்கும் நெட்டிசன்கள்.

0
335
- Advertisement -

காரின் மேல் பயணித்த பவன் கல்யாணை நெட்டிசன்கள் விமர்சித்து வரும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தெலுங்கு சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்பவர் பவன் கல்யாண். இவரை எல்லோரும் ‘பவர் ஸ்டார்ட்’ என்று தான் அழைக்கிறார்கள். இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இவர் தெலுங்கு நடிகரும், அரசியல்வாதியுமான சிரஞ்சீவியின் இளைய தம்பி என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-

மேலும், இவர் திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல் தயாரிப்பாளர், திரைக்கதை ஆசிரியர், இயக்குனர், அரசியல்வாதி என பன்முகங்களை கொண்டு திகழ்கிறார் இவர் 1996 ஆம் ஆண்டு வெளிவந்த தெலுங்கு படத்தின் மூலம் தான் சினிமாவில் அறிமுகம் ஆகி இருந்தார். அதனை தொடர்ந்து இவர் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்திருக்கிறார். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது.

- Advertisement -

பவன் கல்யாண் கட்சி:

மேலும், இவர் கடந்த 2014ல் ஒரு அரசியல் கட்சியை உருவாக்கினார். அதற்கு ஜனசேனா கட்சி என பெயரிட்டார். ஜனசேனா என்றால் மக்கள் ராணுவம் என்று பொருள். பவன் கல்யாண் சினிமா நிகழ்ச்சிகளில், பொது நிகழ்ச்சிகளில் பேசும் வீடியோக்கள் எல்லாம் வைரலாவது வழக்கமான ஒன்று தான். இவர் எப்போதும் ஆக்ரோஷம் நிறைந்த மேடைப்பேச்சுகளால் பார்வையாளர்களை தன் பக்கம் ஈர்த்து வைத்திருக்கிறார். இந்த நிலையில் காரின் மேல் பயணித்திருக்கும் பவன் கல்யாண் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சை ஏற்படுத்தியிருக்கிறது.

-விளம்பரம்-

ஆந்திரா குண்டூரில் நடந்தது:

அதாவது, இவர் ஆந்திராவின் குண்டூரில் உள்ள இப்டாம் எனும் கிராமத்திற்கு சென்றார். இந்த கிராமத்தில் சாலை விரிவாக்க பணிகளில் அரசு ஈடுபட்டதால் வீடுகள் இடிக்கப்பட்டன. இதனால் வீடுகளை இழந்த பொதுமக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூற தனது கட்சி தொண்டர்களுடன் இப்டாம் கிராமத்திற்கு பவன் கல்யாண் சென்று இருக்கிறார். அவரது வருகையை அறிந்த அவருடைய ரசிகர்கள், தொண்டர்கள் இப்டாம் பகுதியில் குவிந்தனர். மேலும், இந்த நிகழ்வுக்கு காவல் துறை அனுமதியும் அளிக்கவில்லை. இதனால் காவல் துறை அனுமதியளிக்காமல் பவன் கல்யாண் காரில் சென்றார்.

காரின் மேல் சாகசம் செய்த பவன்:

அதுவும் அவர் காரின் மேல் அமர்ந்தபடி சென்று இருக்கிறார். அவரது காரை சுற்றி நிறைய ஆதரவாளர்கள் நின்றிருந்தனர். காரின் மேல் கால்களை நீட்டி உட்கார்ந்தபடி சென்று கொண்டிருந்தார். அவரது காரில் அவருடைய கட்சியினர் 10க்கும் மேற்பட்டோர் ஏறி நின்று கொண்டிருந்தனர். அவர்களும் பாதுகாப்பற்ற முறையில் தொங்கிக் கொண்டே நின்றிருந்தனர். காரில் பட வில்லன் போல் மாஸாக பயணித்திருக்கிறார் பவன் கல்யாண். இவரின் காரின் முன் பின் நிறைய கார்களும், பைக்குகளும் சென்று இருக்கிறது.

விமர்சிக்கும் நெட்டிசன்கள்:

இதனை அடுத்து போலீஸ் பாதி வழியில் பவன் கல்யாணின் காரை மடக்கி விசாரித்து இருக்கிறது. இதனால் பவன் கல்யாண் சில கிலோ மீட்டர் தூரம் நடந்தே சென்றிருக்கிறார். அப்போது ஜனசேனா கட்சியினர் போலீஸாருடன் வாக்குவாதத்திலும் கைகலப்பிலும் ஈடுபட்டு இருந்தார்கள். இதையடுத்து பவன் கல்யாண் இப்டாம் கிராமத்திற்கு சென்று ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்தும், மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்தும் பேசி இருந்தார். இந்த வீடியோ தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலானதை தொடர்ந்து நெட்டிசன்கள் பவன் கல்யானை கண்டித்து விமர்சித்து வருகிறார்கள்.

Advertisement