ஒதுங்கிய அஜித், சூர்யாவின் காட்சிகளை இயக்காமல் கேப்டன் காட்சிகளை மட்டும் இயக்கிய SAC – தயாரிப்பாளர் போட்டுடைத்த உண்மை.

0
298
- Advertisement -

பெரியண்ணா படத்தில் சூர்யா நடித்த காட்சிகள் குறித்து பேட்டியில் தயாரிப்பாளர் சுப்பையா அளித்திருக்கும் அதிர்ச்சி தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஒரு காலத்தில் தமிழ் சினிமா உலகில் உச்சகட்ட நடிகராக இருந்தவர் விஜயகாந்த். இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் பிளாக்பஸ்டர் கொடுத்திருக்கிறது. போலீஸ் என்றால் விஜயகாந்தின் உருவம் தான் முதலில் நினைவிற்கும் வரும். அந்த அளவிற்கு அந்த கதாபாத்திரத்தில் கனகச்சிதமாக பொருந்தியிருந்தவர்.

-விளம்பரம்-

அதோடு தமிழ் சினிமாவில் தற்போது பிரபலமான நடிகர்களாக இருக்கும் பல நடிகர்களை ஆரம்ப காலத்தில் வளர்த்து விட்டதே விஜயகாந்த் தான். இவர் நடிகர்கள் மட்டும் இல்லாமல் இயக்குனர், தயாரிப்பாளர்கள் என பல பேருக்கு உதவி செய்திருக்கிறார். மேலும், விஜய், சூர்யா போன்ற பல பிரபலங்கள் சினிமா துறையில் நிலைத்து நிற்பதற்கு முக்கிய காரணமே விஜயகாந்த் தான். பெரியண்ணா படத்தின் மூலம் தான் நடிகர் சூர்யா மக்கள் மத்தியில் பிரபலமாக அறியப்பட்டார். அதேபோல் விஜயகாந்த் நடிப்பில் வெளிவந்த செந்தூரப் பாண்டியன் படத்தின் மூலம் தான் விஜய்க்கு தமிழ் சினிமாவில் ஒரு நல்ல பெயர் கிடைத்தது.

- Advertisement -

பெரியண்ணா படம்:

இப்படி இந்த இரண்டு படங்களையும் விஜயின் தந்தையும், இயக்குனருமான எஸ் ஏ சந்திரசேகர் தான் இயக்கினார். இது அனைவரும் அறிந்த ஒன்று. அந்த வகையில் எஸ் ஏ சி இயக்கத்தில் 1999 ஆம் ஆண்டு வெளிவந்த பெரியண்ணா படத்தில் விஜயகாந்த், சூர்யா, மீனா, மனோரமா, மணிவண்ணன் உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது மட்டும் இல்லாமல் வசூலையும் பெற்றுத் தந்திருந்தது.

சூர்யா கதாபாத்திரம்:

இந்த நிலையில் பெரியண்ணா படம் குறித்து பலரும் அறிந்திராத விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், பெரியண்ணா படத்தை தயாரித்தவர் சுப்பையா. இவர் விஜயகாந்திடம் உதவியாளராக இருந்தவர். என்பது படங்களுக்கும் மேல் இவர் உதவியாளராக பணியாற்றி இருந்தார். பின் தன்னுடைய உதவியாளரை சினிமாவில் தயாரிப்பாளராக மாற்றியது விஜயகாந்த் தான். அதோடு பெரியண்ணா படத்தில் சூர்யா நடித்த கதாபாத்திரத்திற்கு முதலில் நடிக்க இருந்தது அஜித் தான். அப்போது அஜித்துக்கு முதுகில் பிரச்சனை இருந்ததால் நடிக்க முடியாமல் போனது.

-விளம்பரம்-

எஸ் ஏ சந்திரசேகர் உடல்நிலை:

அதற்குப் பிறகு தான் நடிகர் சத்யராஜ் மூலம் சூர்யா இந்த படத்தில் நடிக்க வந்தார். இந்த நேரத்தில் தான் சந்திரசேகருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. இது தொடர்பாக ஷோபா, சுப்பையாவிடம் தகவல் தெரிவித்து இருக்கிறார். அதுமட்டுமில்லாமல் படத்தை வேறு ஒரு இயக்குனரை வைத்து எடுங்கள் என்றும் சோபா கூறியிருக்கிறார். ஏற்கனவே படத்தினுடைய பூஜைகள் எல்லாம் முடிந்து படத்தையும் விற்று விட்டார்கள். இப்படி இருக்கும் நிலையில் சந்திரசேகருக்கு உடல்நிலை சரியில்லை என்றும் படம் இயக்க முடியாது என்றும் சொன்னது சுப்பையாவிற்கு பேர் அதிர்ச்சியாக இருந்தது.

சூர்யா நடித்த காட்சிகள்:

இருந்தாலும், பெரியண்ணா படத்தை எஸ்.ஏ சந்திரசேகர் தான் இயக்க வேண்டும் என்று சுப்பையா உறுதியாக இருந்தார். பின் எஸ் ஏ சியை தான் பத்திரமாக பார்த்துக் கொள்வதாகவும் விஜயகாந்த் காட்சிகள் எடுக்க மட்டும் அவர் இருந்தால் போதும் என்றும் சோபாவிடம் கூறியிருக்கிறார். இதற்கு சோபாவும் சம்மதம் சொல்லி எஸ் ஏ சியை படம் எடுக்க அனுமதித்து இருக்கிறார். அதற்குப் பிறகு நடிகர் சூர்யா நடித்த காட்சிகளெல்லாம் எஸ்ஏ சந்திரசேகர் எடுக்கவில்லை. அவருடைய உதவியாளர் தான் எடுத்தார். இதை சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் சுப்பையா கூறியிருக்கிறார்.

Advertisement