பெரியார் சிந்தனைகளைப் பேசிய ஆல்யா மானஸா சீரியல் – வீடியோவை பகிர்ந்து ரசிகர்கள் வரவேற்ப்பு.

0
477
iniya
- Advertisement -

பொதுவாகவே சிரியல் என்றாலே அதற்கு அதிக வரவேற்பு ரசிகர்களின் மத்தியில் பல காலமாகவே இருந்து வருகிறது. அந்த வகையில் சன் டிவி, ஜீ டிவி, விஜய் டிவி போன்ற தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு அதிக வரவேற்பு இருந்து வருகிறது. குறிப்பாக சீரியல்களில் நடக்கும் நிகழ்வுகள் மக்களை எளிதாக சென்றடைகின்றன. ஆனால் சினிமாவை விட சீரியல்களில் அதிக பிற்போக்கு கருத்துகள், ஆணாதிக்கத்தை செலுத்துவதை ஹீரோயிஷமாக காட்டுவது. பெண்களுக்கு எதிரான கருத்துக்கள் என இருந்து வருகின்றனர்.

-விளம்பரம்-

இந்த நிலையில் தற்போதுதான் பிற்போக்கு கருத்துகளுக்கு எதிராக முற்போக்கு கருத்துக்களை சீரியல்களில் பேச தொடங்கியுள்ளன. அதே போல சினிமாவிலும் தற்போது முற்போதுக்கு கருத்துகள் பரப்பப்படுகின்றது. அந்த வகையில் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபல சீரியலான இனியாவில் நடித்துவரும் நடிகை ஆல்யா மானசா தான் அந்த சம்பவம் செய்துள்ளார்.

- Advertisement -

நடிகை ஆல்யா :

சின்னத்திரை சீரியலின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் ஆல்யா மானசா. இவர் முதலில் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘மானாட மயிலாட’ என்ற நடன நிகழ்ச்சியில் தான் மயிலாட’ பங்கு பெற்று இருந்தார். அதன் பின் விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியலில் செம்பா கதாபாத்திரத்தில் ஆல்யா நடித்து இருந்தார்.

மேலும், இந்த சீரியலில் சின்னையா கதாபாத்திரத்தில் சஞ்சீவ் நடித்திருந்தார். இந்த சீரியலின் மூலம் இவர்கள் இருவரும் மக்கள் மத்தியில் தனெக்கென ஒரு இடத்தை பிடித்து இருக்கிறார்கள். தனெக்கென இந்த சீரியலின் போதே இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். திருமணத்திற்கு பின் இவர்களுக்கு ஒரு அழகான பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்து சிறிய இடைவெளி எடுத்துக் கொண்டார் ஆல்யா.

-விளம்பரம்-

இந்த இடைவெளிக்கு பிறகு தற்போது இனியா சீரியலில் பிரவீனா என்ற கதாபாத்திரத்தின் மூலம் மீண்டும் சின்னத்திரைக்கு திரும்பியுள்ளார். இந்த நிலையில் சமீபத்தில் இனியா சீரியலில் ஒளிபரப்பப்பட்ட கட்சியில் பிரவீனா கோவிலுக்கு போவதை மறந்து விட்டதால் என்ன செய்வதென்று திகைத்து நிற்கிறார். இந்த நிலையில் சாலையின் ஓரத்தில் ஒரு ஆட்டோ நிற்கிறது அதில் பெரியாரின் புகைப்படம் ஒட்டப்பட்டிருந்தது.

பெரியாரின் கருத்து :

இதனை பார்த்த பிரவீனா அங்கு தேங்காய் உடைத்து பெரியாருக்கு பூஜை செய்த பின்னர் சில வசனங்களை கூற தொடங்கினார். அது “ஐயா பெரியவரே பெரியாரே, உங்க புத்தகத்தை எல்லாம் நான் படித்ததில்லை ஆனால் நான் மற்றவர்கள் சொல்லி கேள்வி பட்டிருக்கிறேன். நீங்கள் பெண் அடிமைத்தனத்தை பற்றி அப்போதே பேசிய ஆளாமே. இருந்தாலும் ஒரு ஆணாக இருந்து கொண்டு இப்படி பேச பெரிய மனசு வேண்டும். அதனால் தான் உங்களை எல்லோரும் பெரியார் என்கிறார்கள் போல.

ஒருவேளை நான் உங்கள் புத்தகத்தை படித்திருந்தால் அந்த ஆளுக்கு அடிமையாக இருந்திருக்க மாட்டேன். போனதெல்லாம் போகட்டும் இனியாவது உங்களுடைய புத்தகத்தை படிக்கிறேன். பெண்கள் சமயலறையில் இருந்து வெளியில் வந்து சுதந்திரம் என்றால் என்னவென்று பார்க்கட்டும் என்று கூறினீர்களாமே. அதனை நான் இப்போது ஒரு பெண்ணின் மூலம்தான் உணர்கிறேன் என்று பேசிக்கொண்டிருந்தார்.

பாராட்டும் நெட்டிசங்கள் :

பின்னர் அங்கு வந்த ஆட்டோ உரிமையாளர் `சாமி இல்லை என்று சொன்னவருக்கே சாமி ஆகிட்டீங்களே என்று கேட்க. பிரவீனா சாமி இவருக்கு பிடிக்காமல் இருந்திருக்கலாம் ஆனால் சாமிக்கு இவரை பிடித்திருக்கிறது அதனால் தான் 94 வயதுவரை வாழ்ந்துவிட்டு சென்றிருக்கிறார் என்று கூறினார். இவர் பேசியது இணையத்தில் வைரலாகவே பெரியாரை பற்றி இந்த அதிகமாக சீரியலில் பேசியது இதுவே முதல் முறை என்று முற்போக்காளர்கள் பலரின் வரவேற்ப்பை பெற்று வருகிறது இந்த இனியா சீரியல்.

Advertisement