‘அவர் அதை செய்யக்கூடாது’ – அல்லு அர்ஜுன் மீது காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்டுள்ள புகார்

0
259
- Advertisement -

பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் மீது கொடுக்கப்பட்டிருக்கும் புகார் குறித்த செய்தி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தெலுங்கு சினிமா வட்டாரத்தில் சூப்பர் ஸ்டார் ஆக கலக்கி கொண்டு இருப்பவர் அல்லு அர்ஜுன். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது. அந்த வகையில் , கடந்த 2021 ஆம் ஆண்டு அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியாகி இருந்த படம் புஷ்பா. இந்தப் படத்தை இயக்குனர் சுகுமார் இயக்கியிருந்தார்.

-விளம்பரம்-

மேலும், இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில், சுனில் அனுசியா உட்பட பலர் நடித்திருந்தார்கள். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார். ஆந்திர மாநிலம் வனப்பகுதியில் நடைபெறும் செம்மர கடத்தலை மையமாக வைத்து இந்த படம் உருவாகி இருந்தது. இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது.

- Advertisement -

புஷ்பா 2 :

அதைத்தொடர்ந்து ‘புஷ்பா 2’ திரைப்படம் தற்போது உருவாகி இருக்கிறது. புஷ்பா 2 படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டு இருக்க, ஒரு வழியாக வருகின்ற டிசம்பர் 5ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இந்த இரண்டாம் பாகத்திலும், அல்லு அர்ஜுன் மற்றும் ராஷ்மிகா முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க பகத் பாஸில் வில்லனாக நடித்துள்ளார். மேலும், சுனில், ராவ் ரமேஷ், பிரம்மாஜி மற்றும் ஜெகதீஷ் பிரதாப் போன்ற முக்கிய நடிகர்கள் படத்தில் நடித்துள்ளனர்.

புஷ்பா 2 ப்ரோமோஷன் :

அதோடு புஷ்பா 2 படத்திற்கு, குபா ப்ரோஜெக் ஒளிப்பதிவு செய்ய, தேசிய விருது பெற்ற எடிட்டர் நவீன் நூலி எடிட்டிங் செய்துள்ளார். தற்போது படக்குழு இந்தியா முழுவதும் பிரமோஷன் வேலைகளில் பிஸியாக உள்ளனர். தளபதி விஜய் தனது ரசிகர்களை நண்பா என்று அழைப்பது போல, நடிகர் அல்லு அர்ஜுன் தன் ரசிகர்களை ஆர்மி என அழைத்து வருகிறார். சமீபத்தில் ‘புஷ்பா 2’ திரைப்படத்தின் பிரமோஷன் மும்பையில் நடந்துள்ளது.

-விளம்பரம்-

அல்லு அர்ஜுன் பேசியது:

அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அல்லு அர்ஜுன், ‘ எனக்கென்று ரசிகர்கள் எல்லாம் இல்லை. எனக்காக இருப்பது ஆர்மி. நான் என் ரசிகர்களை நேசிக்கிறேன். என் ரசிகர்கள் என் குடும்பம் போன்றவர்கள். அவர்கள் ஒரு ராணுவத்தைப் போல எனக்காக நின்று, என்னைக் கொண்டாடுகிறார்கள். எப்போதுமே நான் உங்களை பெருமைப்படுத்துவேன். இந்தப் படம் வெற்றி பெறும், அந்த வெற்றியை எனது ரசிகர்களுக்காக சமர்ப்பிக்கிறேன்’ என்று பேசி இருக்கிறார்.

அல்லு அர்ஜுன் மீது புகார்:

இந்நிலையில், தற்போது ஹைதராபாத்தில் உள்ள ஜவஹர் நகர் காவல் நிலையத்தில், ‘The Green Peace Environment and Water Harvesting Foundation’ தலைவர் ஸ்ரீநிவாஸ் கவுட், அல்லு அர்ஜுன் மீது புகார் ஒன்றை பதிவு செய்திருக்கிறார். அதில், ‘கோலிவுட் நடிகர் அல்லு அர்ஜுன் தனது ரசிகர் பட்டாளத்தை அழைக்க ‘ஆர்மி ‘ என்ற வார்த்தையை பயன்படுத்துகிறார். அவர் செய்வது தவறு. ராணுவம் என்பது ஒரு கௌரவமான பதவி. அவர்களை அடையாளப்படுத்தும் அந்த வார்த்தையை, அவர் தனது தனிப்பட்ட ரசிகர்களுக்கான வார்த்தையாக பயன்படுத்தக்கூடாது. அதற்கு பதிலாக அவர் வேறு வார்த்தையைப் பயன்படுத்த வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Advertisement