இஸ்லாமியர் மீதான தாக்குதல் குறித்து பேசிய சாய் பல்லவி மீது போலீசில் புகார், குவியும் மிரட்டல்கள். குரல் கொடுத்த சிம்பு, தனுஷ் பட நடிகை.

0
507
saipallavi
- Advertisement -

காஷ்மீர் பண்டிட்டுகள் படுகொலையும், இஸ்லாமியர்கள் மீதான தாக்குதலும் வன்முறையே என சுட்டிக்காட்டி பேசிய சாய் பல்லவி மீது ஹைதராபாத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இப்படி ஒரு நிலையில் சாய்பல்லவிக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார் சிம்பு, தனுஷ் பட நடிகை திவ்யா ஸ்பந்தனா. தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகை சாய் பல்லவி. சமீபத்தில் நானி நடிப்பில் இயக்குனர் ராகுல் சன்கிரித்யன் இயக்கத்தில் வெளிவந்த படம் ‘ஷ்யாம் சிங்கா ராய்’. இது மறுபிறவியை மையமாக கொண்டு உருவாகி இருந்த படம். இப்படத்தில் சாய் பல்லவி, கீர்த்தி ஷெட்டி, முரளி ஷர்மா உள்ளிட்ட பலர் நடித்து இருந்தார்கள். இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய பல மொழிகளில் வெளிவந்து மிகப் பெரிய அளவில் ஹிட் கொடுத்திருந்தது.

-விளம்பரம்-

இதனை தொடர்ந்து பல படங்களில் சாய் பல்லவி கமிட்டாகி இருக்கிறார். அந்த வகையில் தற்போது உலக நாயகன் கமலஹாசன் தயாரிப்பில் உருவாகும் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க இருகிறார். அதற்கான அதிகாரப்பூர்வ அறிவுகள் எல்லாம் வெளியாகி இருந்தது. இந்த படத்தை ராஜ்குமார் வெளியாகி இயக்குகிறார். தற்போது சாய்பல்லவி தெலுங்கில் ராணாவுடன் இணைந்து விராட பருவம் படத்தில் நடித்திருக்கிறார். சாய் பல்லவி நடித்த இந்த படம் வரும் 17ஆம் தேதி வெளியாக உள்ளது. இதனை தொடர்ந்து இப்படத்தை விளம்பரப்படுத்தும் பணியில் சாய்பல்லவி மற்றும் படக்குழுவினர் இறங்கி இருக்கின்றனர்.

இதையும் பாருங்க : ஆர் ஜே பாலாஜியின் ‘வீட்ல விஷேசம்’ எப்படி இருக்கிறது – முழு விமர்சனம் இதோ.

- Advertisement -

சாய் பல்லவியின் தைரியமான கருத்து :

சமீபத்தில் சாய்பல்லவி அவர்கள் பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில் அவர், சமீபத்தில் வெளியான காஷ்மீர் பைல்ஸ் திரைப்படத்தில் காஷ்மீர் பண்டிட்கள் கொலை செய்யப்படுவதாக காட்டி இருப்பார்கள்.இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் காஷ்மீரில், காஷ்மீர் பண்டிட்கள் கொல்லப்படுவதும், கொரோனா காலத்தில் மாடுகளை ஏற்றிச் சென்ற இஸ்லாமியர்களை வழிமறித்து அவரை ஜெய் ஸ்ரீராம் என்று சொல்ல சொல்லி தாக்குதல் நடத்திக் கொல்வதும் ஒன்று தான்.

சர்ச்சையில் சிக்கிய சாய் பல்லவி :

இரண்டுமே தவறு தான் என்று கூறியிருந்தார். இப்படி சாய்பல்லவி அளித்திருந்த பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இந்த கருத்துக்கு ஒரு சிலர் ஆதரவாகவும், ஒரு சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதே போல  இந்துத்துவா ஆதரவாளர்கள், பாஜகவினர் உள்ளிட்ட பலர் சாய் பல்லவியின் கருத்துக்களை விமர்சித்து வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் சாய் பல்லவி மீது நடிகை சாய்பல்லவி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி போலீசில் புகார் அளிக்கப்பட்டு இருக்கிறது.

-விளம்பரம்-

சாய் பல்லவி மீது போலீசில் புகார் :

ஹைதராபாத்தில் உள்ள சுல்தான் பஜார் காவல் நிலையத்தில் வலதுசாரி அமைப்பைச் சேர்ந்த அகில் என்பவர் புதன்கிழமை புகார் அளித்ததுள்ளார். அந்த புகாரில், நடிகை சாய் பல்லவி காஷ்மீர் பயங்கரவாதிகளை, பசு காவலர்களுக்கு சமம் என்று ஒப்பிட்டு பேசியது தவறு என்றும் நடிகை மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகாரில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த புகாரின் மீது இதுவரை போலீசார் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யவில்லை.

குரல் கொடுத்த திவ்யா ஸ்பந்தனா :

இருப்பினும் நடிகை சாய் பல்லவிக்கு தொடர்ந்து எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன.இந்த நிலையில் நடிகை சாய் பல்லவிக்கு மிரட்டல் விடுப்பதை நிறுத்த வேண்டும் என்றும் உண்மையை உரக்கச் சொன்ன நடிகை சாய் பல்லவிக்கு எனது பாராட்டுக்கள் என்றும் சிம்புவின் ’குத்து’ தனுஷின் ’பொல்லாதவன்’ உள்பட பல படங்களில் நடித்த நடிகை ரம்யா தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.

Advertisement