ஃபர்ஹானா பட சர்ச்சை, விருது விழாவிற்கு கூட செல்லாத ஐஸ்வர்யா ராஜேஷ் – வீட்டிற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு.

0
1699
aishwaryarajesh
- Advertisement -

ஃபர்ஹானா படத்தினால் தான் ஆளுநர் விருது வழங்கிய விழாவில் ஐஸ்வர்யா ராஜேஷ் கலந்து கொள்ளவில்லை என்ற தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டு இருப்பவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் திரைப்பட நடிகை மட்டும் இல்லாமல் நடன கலைஞர், தொகுப்பாளினி என பன்முகம் கொண்டவர். இவர் 2011 ஆம் ஆண்டு வெளியான ‘அவர்களும் இவர்களும்’ என்ற படத்தின் மூலம் தான் தமிழ் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார்.

-விளம்பரம்-

இதனை தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்து இருக்கிறார். அதிலும், கனா படம் இவருக்கு நல்ல பெயர் ஏற்படுத்தி தந்தது. மேலும், இவர் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு சினிமாவிலும் பிஸியான நடிகையாக திகழ்ந்து வருகிறார். சமீப காலமாக இவர் பெண் முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகி இருந்த படம் “டிரைவர் ஜமுனா”. வத்திக்குச்சி படத்தின் இயக்குனர் கிங்ஸ்லின் இயக்கத்தில் 18 ரீல்ஸ் நிறுவனத்தின் எஸ்பி சௌத்ரி இந்த படத்தை தயாரித்திருக்கிறார்.

- Advertisement -

ஐஸ்வர்யா ராஜேஷ் திரைப்பயணம்:

இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் கால் டாக்சி டிரைவராக நடித்து இருந்தார். இந்த படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து ஆர்.ஜே.பாலாஜி நடித்த “ரன் பேபி ரன்” என்ற படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருந்தார். ஆனால், அது ஒரு சிறிய கதாபாத்திரம் தான். அதனை தொடர்ந்து சில வாரங்களுக்கு முன் வெளிவந்த “சொப்பன சுந்தரி” என்ற படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து இருக்கிறார். இப்படத்தை எஸ்.எஸ்.சார்லஸ் இயக்கி இருக்கிறார். இந்த படம் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது.

ஃபர்ஹானா படம்:

தற்போது நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் ஃபர்ஹானா. இந்த படத்தில் தன்னுடைய குழந்தைகளுக்காக மத கட்டுப்பாட்டுகளை எல்லாம் கடந்து வேலைக்கு செல்லும் ஒரு பெண்ணின் வாழ்க்கையை மையமாகக் கொண்ட கதை. இந்த படத்திற்கு எதிர்ப்புகள் வந்தாலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. பெண்கள் முன்னேற்றத்தை மையமாக கொண்டு இந்த படம் உருவாக்கப்பட்டிருப்பதால் பிரபலங்கள் பலரும் இந்த படத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.

-விளம்பரம்-

ஐஸ்வர்யா ராஜேஷ் தாயாருக்கு கொடுக்கும் விருது:

இப்படி ஐஸ்வர்யா ராஜேஷின் ஒவ்வொரு படிக்கும் உறுதுணையாக இருந்தது அவருடைய தாயார் நாகமணி தான். இவர் தன்னுடைய மகளை சுதந்திரமாக செயல்பட வைத்ததனால் தான் தற்போது ஐஸ்வர்யா ராஜேஷ் இந்த நிலைமைக்கு உயர்ந்திருக்கிறார். இதனால் ஐஸ்வர்யா ராஜேஷின் தாயார் நாகமணியை சிறப்பிக்கும் விதமாக ஆளுநர் விருது அறிவித்திருக்கிறார். மேலும் இந்த விருது மகளிர் தினத்தை முன்னிட்டு நேற்று வழங்கி இருக்கிறார்கள். இந்நிலையில் இந்த விழாவிற்கு ஐஸ்வர்யா ராஜேஷ் போகவில்லை என்ற தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

விருது விழாவிற்கு ஐஸ்வர்யா ராஜேஷ் போகாத காரணம்:

அதாவது, ஃபர்ஹானா படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமியர்கள் போராட்டத்தை மேற்கொண்டு இருக்கின்றனர். ஒரு சிலர் ஐஸ்வர்யாவிற்கு மிரட்டலும் விடுத்து இருக்கின்றன. இதனால் சென்னை தியாகராஜா நகரில் உள்ள ஐஸ்வர்யா ராஜேஷ் வீட்டிற்கு போலீஸ் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது. சுழற்சி முறையில் நான்கு காவலர்கள் ஐஸ்வர்யா வீட்டில் பாதுகாப்பிற்கு போடப்பட்டிருக்கிறார்கள். இப்படி ஒரு நிலையில் நேற்று அன்னையர் தினத்தை முன்னிட்டு கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஐஸ்வர்யா ராஜேஷின் தாயார் நாகமணிக்கு விருது வழங்கப்பட்டது. இதனால் தான் இந்த விழாவில் ஐஸ்வர்யா ராஜேஷ் கலந்து கொள்ளவில்லை.

Advertisement