ஆருத்ரா மோசடி : ஹரீஷின் வாக்குமூலத்தால் சிக்கிய ஆர் கே சுரேஷ் – போலீஸ் அனுப்பிய நோட்டீஸ்.

0
436
RKsuresh
- Advertisement -

ஆருத்ரா கோல்டு நிறுவன மோசடி வழக்கில் நடிகர் ஆர் கே சுரேஷ் வெளிநாடு தப்பி ஓடி இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழில் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான சலீம், விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான தர்மதுரை போன்ற படங்களை தயாரித்தார் ஆர்கே சுரேஷ். இவர் சில படங்களில் நடிக்கவும் செய்திருக்கிறார். இந்த நிலையில் நடிகர் ஆர்.கே. சுரேஷ் அவர்கள் கோல்டு நிறுவன மோசடி வழக்கில் வெளிநாடு தப்பி இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

-விளம்பரம்-

அதாவது, சென்னை அமைந்த கரைப்பகுதியில் ஆருத்ரா கோல்ட் நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனத்தில் முதலீடு செய்பவர்களுக்கு 25 முதல் 30 சதவீதம் வரை கூடுதல் வட்டி தருவதாக நிறுவனம் அறிவித்திருந்தார்கள். இதனை நம்பி லட்சக்கணக்கான மக்கள் முதலீடு செய்திருந்தனர். ஆனால், முதலீடு செய்தவர்களுக்கு பணத்தை அந்த நிறுவனம் திருப்பி கொடுக்கவில்லை. அதோடு இந்த நிறுவனம் பொதுமக்களிடம் இருந்து 2438 கோடி முதலீடாக பெற்றிருக்கிறது.

- Advertisement -

இந்த நிலையில் இந்த நிறுவனம் பண மோசடி செய்ததாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்து இருக்கிறார்கள் பொது மக்கள். இதனை அடுத்து போலீசாரும் இந்த புகாரை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. மேலும், இந்த வழக்கை விசாரிக்க கூடுதல் தனிப்படை போலீசாரும் அமைத்திருக்கிறார்கள். முதல் கட்ட நடவடிக்கையாக அந்த நிறுவனத்தின் சொத்துக்கள் எல்லாம் முடக்கப்பட்டிருக்கிறது. இந்த நிறுவனத்தின் மேலான் இயக்குனர்கள் ராஜசேகர், உஷா ராஜசேகர், மைக்கேல் ராஜேஷ் ஆகியோர் வெளிநாடு தப்பி தலைமறைவாகி இருக்கின்றனர்.

இவர்களை தொடர்ந்து இயக்குனரும், பாரதிய ஜனதா கட்சி நிர்வாகி ஆன ஹரிஷ் மற்றும் மற்றொரு இயக்குனர் மாலதி, ரூசோ ஆகியோரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கடந்த வாரமே கைது செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்து இருக்கிறார்கள். பின் போலீசார் இவர்களிடம் விசாரணை மேற்கொண்ட போது நடிகரும் பாஜக கலை பிரிவு மாநில நிர்வாகியான ஆர் கே சுரேஷ் என்பவருக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்திருக்கின்றது.

-விளம்பரம்-

மேலும் இவர்களது வாக்குமூலத்தின் பெயரில் இது வரையில் 21 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் பிரபல பிரபல இயக்குனரான பாஸ்கர், செந்தில் குமார், நாகராஜ், மோகன் பாபு உள்ளிட்டோரும் இருக்கின்றனர். இவர்கள் மட்டுமல்லாமல் மேனேஜர்கள் ஏஜெண்டுகளாக செயல்பட்டு வந்த ரூசோ, ராஜசேகர், ஐயப்பன் உள்ளிட்டோரும் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். இந்நிலையில் ரூசோவிடம் விசாரணை செய்ததில் நடிகர் ஆர்கே சுரேஷுக்கும் இதில் சம்மதம் இருப்பதாக தெரியவந்துள்ளது.

இந்த விஷயம் காவல்துறைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் ஆர்கே சுரேஷின் செல்போனை தொடர்பு கொள்ள முயற்சி செய்திருக்கின்றனர். ஆனால் சுட்ச் ஆஃப் செய்துவிட்டார் எடுக்கவில்லை. இதனால் விசாரணையை தீவிரப்படுத்திய போலீசாருக்கு ஆர்கே சுரேஷ் துபாய் தப்பி சென்றிருப்பது தெரிய வந்துள்ளது. இதற்கு முன்னர் ஆர்கே சுரேஷ் விசாரணைக்கு ஒத்துழைப்பு தரவில்லை என்றால் அவருக்கு லுக் அவுட் நோட்டீஸ் வழங்க இருந்த போலீசார், தற்போது ஆர்கே சுரேஷை விசாரணைக்கு உட்படுத்தும் நோக்கில் நோட்டீஸை அனுப்பியுள்ளனர். மேலும் கைது செய்யப்பட்ட பாரதிய ஜனதா கட்சி நிர்வாகி ஆன ஹரிஷ் மற்றும் மற்றொரு இயக்குனர் மாலதி, ரூசோ கொடுத்த வாக்கு மூலத்தின் படி நடிகர் மற்றும் தயாரிப்பாளாராகிய ஆர்கே சுரேஷுக்கு இந்த மோசடியில் பங்கு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Advertisement