ஊழியர்கள் நகைகளை திருடிவிட்டதாக பொய் புகார் அளித்தாரா விஜய் யேசுதாஸ் ? போலீஸ் விசாரணையில் திடீர் திருப்பம்.

0
2395
- Advertisement -

பாடகர் விஜய் ஏசுதாஸ் வீட்டில் நகை திருட்டு நடந்திருக்கும் சம்பவம் குறித்த போலீஸ் விசாரணை தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பிரபலமான பாடகராக திகழ்பவர் விஜய் யேசுதாஸ். இவர் பாடகர் ஜேசுதாஸ் உடைய மகன் ஆவர். இவர் கேரள மாநிலத்தை சேர்ந்தவர். விஜய் யேசுதாஸ் பாடகர் மட்டும் இல்லாமல் நடிகராகவும் திகழ்ந்து கொண்டிருக்கிறார்.

-விளம்பரம்-

அந்த வகையில் சமீபத்தில் மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த பொன்னியின் செல்வன் 2 படத்திலும் சிறு கதாபாத்திரத்தில் விஜய் யேசுதாஸ் நடித்திருந்தார். ஆனால், அவர் நடித்த காட்சி வெளிவரவில்லை என்று சமீபத்தில் பேட்டி கூட அளித்திருந்தார். இந்த நிலையில் இவருடைய வீட்டில் திருட்டு நடந்திருக்கும் சம்பவம் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தற்போது விஜய் ஏசுதாஸ் அவர்கள் சென்னை ஆழ்வார்பேட்டையில் மூன்றாவது தெருவில் வசித்து வருகிறார்.

- Advertisement -

விஜய் யேசுதாஸ் வீட்டில் திருட்டு:

இவருடைய மனைவியின் பெயர் தர்ஷனா. இவருக்கு குழந்தைகளும் இருக்கிறது. கடந்த பிப்ரவரி 18ஆம் தேதி விஜய் ஏசுதாஸின் வீட்டில் லாக்கரில் இருந்த 60 சவரன், தங்கம் வைர நகைகளை திருடி இருக்கிறார்கள். வேலைக்காளர்கள் மேனகா, பெருமாள் ஆகியோர் மீது சந்தேகம் இருப்பதாக அபிராமபுரம் போலீசில் தர்சனா புகார் அளித்திருக்கிறார். தர்ஷனா அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி இருக்கிறது.

போலீசில் புகார்:

அப்போது விஜய் யேசுதாஸ் வீடு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள சிசிடி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து இருக்கிறார்கள். அதில் ஆந்திராவைச் சேர்ந்த விஜயலட்சுமி, மேனகா உள்ளிட்ட 11 பேரிடம் விசாரித்து இருக்கிறார்கள். இவர்களுக்கு லாக்கரின் கதவு எண் குறித்தும் தெரியவில்லை. அதோடு லாக்கர் உடைக்கப்படவில்லை. பிறகு எப்படி நகை திருட்டு நடந்து இருக்கிறது என்று போலீஸிற்கு சந்தேகம் எழுந்தது. அதோடு லாக்கரின் கதவு எண் விஜய் ஏசுதாஸ், தர்ஷனா ஆகியோருக்கு மட்டுமே தெரியும்.

-விளம்பரம்-

போலீஸ் விசாரணை:

இதைப் பற்றி விசாரிக்க இருவரும் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று இருவரிடம் போலீசார் பலமுறை தகவல் அனுப்பிருந்தார்கள். ஆனால், விஜய் ஏசுதாஸ் துபாயில் இருக்கிறார். இதனால் தர்ஷனாவும் விசாரணைக்கு ஆஜராகவில்லை. இன்னொரு பக்கம் கணவன்- மனைவி இருவருக்கும் பிரச்சனை இருந்து வருவதாக கூறப்படுகிறது. அது மட்டும் இல்லாமல் இது பொய் புகாராக இருக்கலாம் என்றும் போலீசுக்கு சந்தேகம் எழுந்து இருக்கின்றது.

போலீசின் சந்தேகம்:

குடும்பப் பிரச்சனை காரணமாக இருவரும் நகை திருடு போனதாக நாடகம் ஆடுகின்றார்களா? இல்லை உறுப்பினர்கள் எவரேனும் நகையை திருடி வைத்திருக்கிறார்களா? போன்ற பல கோணங்களில் போலீசார் விசாரித்து இருக்கின்றது. இதற்கு விஜய் ஏசுதாஸ், தர்ஷனா ஆகியோர் ஒத்துழைத்தால் மட்டும் தான் இந்த வழக்கில் உண்மை தெரிய வேண்டும் என்று போலீஸ் தெரிவித்திருக்கிறார்கள்.

Advertisement