கோயம்பத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியில் பல பெண்களை பாலியலில் ஈடுபட வைத்து அதனை வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்து வந்த கும்பலை போலீசார் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கைது செய்தனர். இந்த விடயம் தான் தற்போது தமிழகத்தையே உலுக்கி வருகிறது.
இந்த சம்பவத்தில் தொடர்பாக திருநாவுக்கரசு, சதீஷ், சபரிராஜன், வசந்தகுமார் ஆகிய 4 பேரை மட்டுமே போலீசார் கைது செய்தனர். ஆனால், இந்த சம்பவத்தில் தொடர்புடைய இன்னும் சிலர் அரசியல் மற்றும் பண பலத்தால் தப்பித்துவிட்டனர்.
இதையும் பாருங்க : அறிவில்ல, மூதேவி.! திருநாவுக்கரசுவின் அம்மாவை வெளுத்து வாங்கும் அறந்தாங்கி நிஷா.!
இந்த வழக்கு இப்படி இருக்க இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்ட பெண் ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அவற்றில் இதில் அரசியல் தொடர்பு இல்லை என்று பலமுறை அழுத்தி கூறியுள்ளார் இதனால் மக்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளது. தற்போது இந்த ஆடியோவும் சமூக வளைத்தளத்தில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.