ஆதித்த கரிகாலன் முதல் மணிமேகலை வரை – பொன்னியின் செல்வன் கதாபாத்திரங்கள் குறித்து ஒரு Intro.

0
598
ponniyin
- Advertisement -

பொன்னியின் செல்வன் கதாபாத்திரங்களை குறித்த சுவாரசியமான தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. தமிழ் சினிமாவில் மிக பிரபலமான இயக்குனராக திகழ்பவர் மணிரத்தினம். இவருடைய படைப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் பொன்னியின் செல்வன். நான்கு ஆண்டுகள் கடுமையான சவால்களை எதிர்கொண்டு, அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து இருக்கும் பொன்னியின் செல்வன் படம் வெளியாக இன்னும் சில நாட்களே இருக்கிறது. மணிரத்னத்தின் திரைவாழ்க்கையில் இதுவரை இல்லாத அளவுக்கு மிக பிரம்மாண்டமாக இந்த படம் தயாராகி இருக்கிறது.

-விளம்பரம்-
ponniyinselvan

மேலும், பொன்னியின் செல்வன் படம் இரண்டு பாகங்களாக திரைக்கு வர இருக்கிறது. இந்த படத்தில் விக்ரம், பிரகாஷ் ராஜ், பார்த்திபன், கார்த்தி, ரவி, விக்ரம் பிரபு, ஜெயராம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ரகுமான், கிஷோர், அஸ்வின், நிழல்கள் ரவி, ரியாஸ்கான், லால், மோகன் ராமன், பாலாஜி சக்திவேல் என சினிமா உலகில் உள்ள பல முன்னணி நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்து இருக்கிறார். இந்த படத்தை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் வெளியிட இருக்கிறார்கள்.

- Advertisement -

பொன்னியின் செல்வன் படம்:

இந்த படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். அதோடு படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தற்போது ஒவ்வொரு மாநிலத்திலும் படத்தை விளம்பரம் செய்யும் பணியில் படக்குழு ஈடுபட்டு வருகின்றனர். அதுமட்டும் இல்லாமல் இந்த படத்தின் டிக்கெட் புக்கிங் உலகம் முழுவதும் துவங்கியிருக்கிறது. தமிழ் சினிமாவில் இதுவரை காணாத அளவிற்கு பொன்னியின் செல்வன் படத்திற்கு டிக்கெட் புக் செய்யப்பட்டிருக்கிறது. அதற்கு காரணம் பொன்னியின் செல்வன் கதையில் வரும் கதாபாத்திரங்கள் தான்.

இந்நிலையில் பொன்னியின் செல்வன் கதையில் வரும் கதாபாத்திரங்களை குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

-விளம்பரம்-

ஆதித்த கரிகாலன்:

சோழ தேசத்தின் முடிக்குரிய இளவரசன்
சுந்தர சோழரின் மூத்த மகன்
தனது 12ஆம் வயதிலேயே போர் புரிந்தார்
இராஷ்டிரகூடர்களை விரட்டி காஞ்சியில் சோழக்கொடியை நாட்டியவர்
தனது பெற்றோர்களுகாக காஞ்சியில் பொன்மாளிகை கட்டி அழகு பார்த்தவர்
வீரபாண்டியனின் தலையை கொண்ட கோப்பரகேசரி
நந்தினியுடனான காதல் தோல்வியால் வெறிபிடித்து போரிட்டார்
வீரத்தின் அடையாலம், ஈடு இணையற்ற மாவீரன்

வல்லவராயன் வந்தியத்தேவன்:

கதையின் நாயகன்
அதித்த கரிகாலரின் நண்பன்
சாமர்த்தியசாலி
சிறந்த போர்வீரன்
ஆதித்த கரிகாலரின் ஒற்றனாகாவும் பணியாற்றுவர்
பெண்களிடம் மனதை பறிகொடுக்கும் மன்மதன்
குந்தவையின் மனம் கவர்ந்த மனாலன்

பொன்னியின் செல்வன் – அருண்மொழி:

வர்மன் சுந்தர சோழரின் இளைய மகன்
பொன்னியின் செல்வன் எனும் நாமத்திற்கு சொந்தக்காரர்
சோழ தேசத்து மக்களின் செல்லபிள்ளை
யானைகளை கையாளுவதில் சிறந்தவர்
அக்கா குந்தவையின் சொல்லுக்கு மரியாதை கொடுப்பவர்
கலை, இலக்கியன், கட்டடக்கலை ஆகியவற்றில் ஆர்வம் கொண்டவர்
சோழ மக்களுகாக இருதி மூச்சு வரை வாழ்ந்தவர்
சிறந்த போர்வீரன்

நந்தினி:

அர்ச்சகர் வீட்டில் வளர்ந்தவள்
இவளுடைய அழகுக்கு மயங்காத ஆண்களே இல்லை
சோழர்களுக்கு எதிரான சதிகள் அனைத்துக்கும் மூளையாக செயர்படுபவள்
பெரிய பழுவேட்டரையரின் மனைவி
ஆதித்த கரிகாலரின் முன்னாள் காதலி
சூழ்நிலையால் வஞ்சிக்கப்பட்டவள்
மந்தாகினியின் மகள் என கூறப்படுபவள்

குந்தவை:

சுந்தர சோழரின் மகள்
அரசியல் ஞானம் மிகுந்தவர்
சோழர்களின் அரச குடும்பத்திலேயே புத்திகூர்மை மிக்கவர்
சிற்றரசர்கள் முதல் பேரரசர்கள் வரை அனைவரும் இவர்மீது அதீத மரியாதை கொண்டுள்ளார்கள்
பேரழகி
இராஜ இராஜ சோழன் ஆண்ட காலத்தில் அவருக்கு அரசுபுரிய சிறந்த ஆலோசனைகளை வழங்கியவர்
மக்களுக்காக பல இலவச மருத்துவமனைகளை கட்டினார்

ஆழ்வார்க்கடியான் நம்பி:

இவர் இயர்பெயர் திருமலை
சோழதேசத்து முதன் மந்திரியான அநிருந்தரின் சீடர்
திறமையான உளவாளி
தீவிர விஷ்ணு பக்தர்
சிவபக்தர்களுடன் வம்பிழுப்பார்
வந்தியத்தேவை பின் தொடருபவர்
நந்தியின் அண்ணன்
சாமர்த்தியசாலி

பூங்குழலி:

கோடிக்கரையை சேர்ந்தவள்
கலங்கரை விளக்க காவலர் தியாகவிடங்கரின் மகள்
சமுத்திரகுமாரி என்ற பட்டப்பெயருக்கு சொந்தகாரி
படகு வலிப்பதில் மிகுந்த திறமைசாலி
தனிமை விரும்பி
உடல் வலிமையும் மன வலிமையும் கொண்டவள்
புத்திசாளி
எவருக்கும் அடிபணியாதவள்
அருண்மொழி வர்மன் மீது ஒருதலை காதல் கொண்டவள்

பெரிய பழுவேட்டரையர்:

பழுவர் சிற்றரசை ஆள்பவர்
சோழ அரசின் தானதிகாரி
போரில் 64 விழுப்புணகள் பெற்றவர்
முதியவர் என்றாலும் உடற்பலத்தில் வீரர்
முதியவர் பழுவேட்டரைவரான இவர் நந்தினியை மணந்து மாயவலையில் சிக்கினார்

சின்ன பழுவேட்டரையர்:

பெரிய பழுவேட்டரையரின் தம்பி
தஞ்சை கோட்டையின் காவலர்
கண்டிப்பு மிக்கவர்
மதுராந்தகனின் மாமனார்
நந்தினியை வெறுப்பவர்
சோழ தேசத்தின் மீது மீகுந்த பற்று கொண்டவர்

மனிமேகலை:

சிற்றரசர் செங்கண்ணர் சம்புவரையரின் மகள்
வந்தியத்தேவனை நேசித்தாள்
நந்தினியை நம்பி ஏமார்ந்தவள்
கந்தன்மாறனின் தங்கை
வந்தியத்தேவனை பல முறை காப்பாற்றியவள்
கதையின் இருதியில் வந்தியத்தேவன் மடியில் உயிர் பிரிந்தாள்
தியாக சிகரம் ஆனவள்

Advertisement