பெயர்களில் தொடர்ந்து தவறு செய்யும் ‘பொன்னியின் செல்வன்’ படக்குழு. விமர்சிக்கும் ரசிகர்கள்.

0
709
ponniyinselvan
- Advertisement -

பொன்னியின் செல்வன் படத்தின் போஸ்டர்களில் சில எழுத்துப் பிழை இருப்பது குறித்து ரசிகர்கள் பதிவிடும் கமெண்ட் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. பல ஆண்டு கனவான வரலாற்று சிறப்புமிக்க காவியங்களில் ஒன்றான பொன்னியின் செல்வன் கதை தற்போது திரைப்படமாக உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் மணிரத்னம். இவர் வித்யாசமான கதைகளை இயக்கி உலகிற்கு கொடுப்பதில் கைத்தேர்ந்தவர். அந்த வகையில் இயக்குநர் மணிரத்னத்தின் கனவுப்படம் ஆன ‘பொன்னியின் செல்வன்’ நீண்ட வருடங்களுக்கு பிறகு உருவாகி இருக்கிறது.

-விளம்பரம்-

அமரர் கல்கி எழுதியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ நாவலைப் படமாக்கப் பல பேர் முயற்சி செய்து இருந்தார்கள். ஆனால், அதை மணிரத்னம் சாதித்து காட்டி இருக்கிறார். பொன்னியின் செல்வன் படம் இரண்டு பாகங்களாக திரைக்கு வர இருக்கிறது. அதுமட்டும் இல்லாமல் மணிரத்னத்தின் திரைவாழ்க்கையில் இதுவரை இல்லாத அளவுக்கு மிக பிரம்மாண்டமாக இந்தத் திரைப்படம் தயாராகி இருக்கிறது. மேலும், இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்து இருக்கிறது. இந்த படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்து இருக்கிறார்.

- Advertisement -

பொன்னியின் செல்வன் படம்:

மேலும், இந்த படத்தில் விக்ரம், பிரகாஷ் ராஜ், கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, ஜெயராம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா என சினிமா உலகில் உள்ள முன்னணி நடிகர்களான பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்தை தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியிடவிருக்கிறார்கள். இப்படத்தின் இரண்டு பாகங்களும் 800 கோடி பட்ஜெட் செலவில் தயாராகி உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் ரவிவர்மன் ஒளிப்பதிவாளராகவும், தோட்டாதரணி கலை இயக்குனராகவும், சைடில் டெக்னிகல் ஆகவும் பணியாற்றி இருக்கிறார்கள். தற்போது படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்து விட்டது.

படத்தின் ரிலீஸ் குறித்த தகவல்:

இந்த படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இப்படி மிகப் பெரிய ஜாம்பவான்கள் மொத்தம் இந்த படத்தில் பணியாற்றி இருப்பதால் படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. மேலும், அனைவரும் காத்திருந்த பொன்னியின் செல்வன் டீசர் நாளை மாலை 6 மணிக்கு வெளியாக இருக்கிறது. அந்தந்த மொழியிலுள்ள ஜாம்பவான் நடிகர்களைக் கொண்டு பிரம்மாண்டமாக பொன்னியின் செல்வன் டீஸரை வெளியிட லைகா நிறுவனம் ஏற்பாடு செய்திருக்கிறது.

-விளம்பரம்-

பெயர்களில் பிழை :

மேலும், படத்தில் சுந்தரசோழன் – சரத்குமார், ஆதித்த கரிகாலன்- விக்ரம், வந்தியதேவன் – கார்த்திக், நந்தினி- ஐஸ்வர்யா ராய், குந்தவை- திரிஷா, அருள்மொழி வர்மன் – ஜெயம் ரவி நடிக்கிறார்கள். இன்று ஜெயம் ரவி போஸ்டர் வெளியாகி இருக்கிறது. இந்நிலையில் படத்தின் அறிமுக போஸ்டர்களில் சில எழுத்துப் பிழைகள் இருப்பது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. விக்ரம் போஸ்டரில் ‘ஆதித்த கரிகாலன்’ என்பதற்குப் பதிலாக ‘ஆதித்ய கரிகாலன்’ என்று இருந்தது. அருள்மொழிவர்மன் என்பதற்கு பதிலாக அருண்மொழிவர்மன் என பதிவிட்டிருக்கிறார்.

விமர்சிக்கும் ரசிகர்கள் :

இது குறித்து நெட்டிசன்கள் பலரும் விமர்சனம் தெரிவித்து வருகிறார்கள். மணிரத்னத்திடம் தமிழ் தெரிந்த உதவி இயக்குனர்கள் இல்லையா? பொன்னியின் செல்வன் நாவலை முழுவதுமாக படித்து உதவி இயக்குனர்கள் இல்லையா என்பது தெரியவில்லை? மக்கள் மனதில் ஆழப்பதிந்த ஒரு நாவலைப் படமாக்கி அது பற்றிய அறிமுகங்களை வெளியிடும் போது தவறுகளைப் பார்ப்பது இயக்குனரின் வேலைதானே என்று வருத்தப்படுகிறார்கள். இவ்வளவு கவனக்குறைவாக போஸ்டர்களிலேயே இப்படி தவறு என்றால் படத்தில் என்ன செய்திருப்பார்கள்? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்

Advertisement