திரிஷா சொன்ன அந்த ஒரு வார்த்தை கெட்ட வார்த்தை என நினைத்து விக்ரம் கொடுத்த ரியாக்ஷன்.

0
371
- Advertisement -

திரிஷா சொன்ன அந்த ஒத்த வார்த்தையை கெட்ட வார்த்தை என்று நினைத்து விக்ரம் கொடுத்திருக்கும் ரியாக்சன் தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. 70 ஆண்டு கனவான வரலாற்று சிறப்புமிக்க காவியங்களில் ஒன்றான அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் கதையை திரைப்படமாக இயக்குநர் மணிரத்னம் இயக்கி இருக்கிறார். இந்த கதையை பல பேர் முயற்சி செய்து இருந்தார்கள். ஆனால், அதை மணிரத்னம் தான் சாதித்து காட்டி இருக்கிறார். பொன்னியின் செல்வன் படம் இரண்டு பாகங்களாக உருவாகி இருக்கிறது.

-விளம்பரம்-

அதுமட்டும் இல்லாமல் மணிரத்னத்தின் திரை வாழ்க்கையில் இதுவரை இல்லாத அளவுக்கு மிக பிரம்மாண்டமாக இந்த திரைப்படம் தயாராகி இருக்கிறது. இந்த படத்தில் விக்ரம், பிரகாஷ் ராஜ், பார்த்திபன், கார்த்தி, ரவி, விக்ரம் பிரபு, ஜெயராம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ரகுமான், கிஷோர், அஸ்வின், நிழல்கள் ரவி, ரகுமான், லால், மோகன் ராமன், பாலாஜி சக்திவேல் என சினிமா உலகில் உள்ள பல முன்னணி நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்து இருக்கிறார்.

- Advertisement -

பொன்னியின் செல்வன் படம்:

இந்த படத்தில் ரவிவர்மன் ஒளிப்பதிவாளராகவும், தோட்டாதரணி கலை இயக்குனராகவும் பணியாற்றி இருக்கிறார்கள். அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து இருந்த பொன்னியின் செல்வன் படம் சில தினங்களுக்கு முன் தான் பிரம்மாண்டமாக வெளியாகி இருக்கிறது. மேலும், தமிழ் ரசிகர்கள் மட்டும் இல்லாமல் உலக சினிமா ரசிகர்களும் பொன்னியின் செல்வன் படத்தை கொண்டாடி வருகின்றனர். படம் வெளியாகி ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை என அனைவரும் மத்தியிலும் நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது.

படத்தின் வசூல்:

அதோடு படம் வெளியாகி மூன்று நாள் முடிவில் 200 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்திருக்கிறது.
விக்ரம், வலிமை போன்ற படங்களின் மூன்று நாள் வசூலை காட்டிலும் பொன்னியின் செல்வன் படம் மிகப்பெரிய அளவில் வசூல் செய்திருக்கிறது. இனிவரும் நாட்களில் இந்த படத்தின் வசூல் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் திரிஷா சொன்ன அந்த ஒத்த வார்த்தையை நினைத்து விக்ரம் கொடுத்திருக்கும் ரியாக்சன் தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

-விளம்பரம்-

கபில் சர்மாவின் நிகழ்ச்சி:

அதாவது, இந்த படத்தின் பிரமோஷனுக்காக படக் குழுவினர் ஒவ்வொரு மாநிலத்திலும் பேட்டி அளித்து இருந்தார்கள். அந்த வகையில் வட இந்தியாவுக்கும் பொன்னியின் செல்வன் படகு குழுவினர் சென்றிருந்தார்கள். அங்கு மிகப் பிரபலமான கபில் சர்மாவின் நிகழ்ச்சியில் பொன்னியின் செல்வன் படக்குழுவினரான விக்ரம், திரிஷா, கார்த்திக், ஜெயம் ரவி, சோபிதா ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். அங்கு படம் குறித்து பல சுவாரஸ்யமான விஷயங்களை பட குழு பகிர்ந்து கொண்டிருந்தனர்.

திரிஷா சொன்ன வார்த்தைக்கு விக்ரம் ரியாக்ஷன்:

மேலும், சில விளையாட்டுகளையும் பட குழு விளையாடினார்கள். அப்போது நிகழ்ச்சியில் காதில் ஹெட்போனை மாட்டிக் கொண்டு ஒருவர் சொல்வதைக் கேட்டு அப்படியே மற்றவரிடம் சொல்ல வேண்டும். அந்த நிகழ்ச்சியில் ஹிந்தியில் சில வார்த்தைகளை சொல்லியிருந்தார்கள். அப்போது திரிஷா அவர்கள் ‘குத்தா’ என்ற வார்த்தையை சொல்கிறார். அதை கெட்ட வார்த்தை என நினைத்துக் கொண்டு விக்ரம் கொடுத்திருக்கும் ரியாக்ஷன் தான் தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

Advertisement