தமிழில் 2000 ஆம் ஆண்டு வெளியான ‘காதல் ரோஜாவே’ என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகையை பூஜா குமார். அமெரிக்காவை சேர்ந்த இவர் தமிழில் சொற்ப படங்களில் நடித்து வாந்தாலும் பல ஹாலிவுட் படங்களில் நடித்து வந்தார்.
நீண்ட இடைவெளிக்கு பின்னர் கமல் நடித்த ‘விஸ்வரூபம் ‘ படத்தின் மூலம் தமிழில் ரீ- என்ட்ரி கொடுத்தார் நடிகை பூஜா குமார். தற்போது மீண்டும் கமலுடன் ‘விஸ்வரூபம் ‘2’ படத்தில் நடித்துள்ளார் பூஜா குமார். சமீப காலமாக இந்த படத்தின் ப்ரோமமோஷனிற்காக பல நிகழ்ச்சிக்கு சென்று வருகின்றனர்.
இந்நிலையில் சமீபத்தில் கமல் மட்டும் பூஜா குமார் இருவரும் ‘ஜீ தமிழ் ‘ தொலைக்காட்சிக்கு சிறப்பு விருந்தினராக சென்றுள்ளனர். அப்போது நடிகை பூஜா குமார் கமலுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
அந்த புகைப்படத்தில் நடிகை பூஜா குமார் புடவை மீது ஆண்கள் அணியும் சட்டையை போன்ற அணிந்திருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள் புடவைக்கு சட்டையா என கிண்டல் செய்தனர். இணையத்தில் வைரலாக பரவி வரும் இந்த புகைப்படத்தில் பூஜா குமார் அணிந்துள்ள உடை ரசிகர்களின் கேலி கிண்டலுக்கு உள்ளாகியுள்ளது.