மக்கள் மத்தியில் அதிமாக பேசப்படும் சீரியல் கதாபாத்திரங்களின் பட்டியல்- யார் no.1 தெரியுமா?

0
188
- Advertisement -

தமிழ் மக்கள் மத்தியில் அதிகமாக விரும்பப்படும் சின்னத்திரை சீரியலின் கதாபாத்திரம் குறித்த பட்டியல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தொலைக்காட்சி தொடங்கிய காலத்தில் இருந்து சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. அதிலும் சமீப காலமாகவே மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் ஒன்றாக சின்னத்திரை திகழ்கின்றது. இதனால் வித்தியாசமான கதைகளத்துடன் புதுப்புது தொடர்களை ஒளிபரப்பி வருகிறார்கள். அந்த வகையில் விஜய் டிவி, சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் எப்போதும் டிஆர்பி யில் முன்னிலையில் இருக்கிறது.

-விளம்பரம்-

சொல்லப்போனால், டிஆர்பி ரேட்டிங்கில் உச்சத்தில் இருப்பதற்காகவே அடிக்கடி புது புது சீரியல்களை விஜய் டிவி, சன் டிவி வெளியிட்டு வருகிறார்கள். மேலும், சீரியலில் நடிக்கும் நடிகைகளும் ரசிகர்கள் மத்தியில் தனி இடத்தை பிடித்து வருகிறார்கள். தற்போது பல சேனல்களில் சீரியல்கள் புதுசு புதுசு வந்தாலும் சன் டிவிக்கு என்றே ஒரு தனி மவுஸ் இருக்கிறது. சமீப காலமாகவே பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து சீரியல்களை ஒளிபரப்பி வருகிறார்கள்.

- Advertisement -

இந்த நிலையில் மும்பையைச் சேர்ந்த ஒர் மேக்ஸ் மீடியா நிறுவனம் சின்னத்திரை நடிகர், நடிகைகள் மற்றும் நிகழ்ச்சிகளை குறித்த விவரங்களை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது இவர்கள் மக்கள் மத்தியில் அதிகமாக வரவேற்கப்படும் கதாபாத்திரங்களை குறித்த பட்டியலை தான் வெளியிட்டு இருக்கிறார்கள். அதில்,

கயல்:

முதலிடத்தை சன் டிவி கயல் சீரியலில் சைத்ரா ரெட்டி நடித்து வரும் கயல் கதாபாத்திரம் தான் பிடித்திருக்கிறது. இந்த சீரியலை பி செல்வம் இயக்குகிறார். தற்போது இளைஞர்களின் பேவரட் நடிகையாக திகழ்ந்து கொண்டிருப்பவர் சைத்ரா ரெட்டி. இவர் யாரடி நீ மோகினி என்ற சீரியல் மூலம் தான் மக்கள் மத்தியில் பிரபலம் ஆனார். அதனை தொடர்ந்து தற்போது கயல் சீரியலில் கதாநாயகியாக கலக்கிக் கொண்டிருக்கிறார். அது மட்டும் இல்லாமல் இவர் படங்களிலும் நடித்து வருகிறார்.

-விளம்பரம்-

பாக்கியலட்சுமி:

இரண்டாவது இடத்தை விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடரின் பாக்கியலட்சுமி கதாபாத்திரம் தான் பிடித்திருக்கிறது. இந்த கதாபாத்திரத்தில் நடிகை சுசித்ரா நடித்து வருகிறார். குடும்பப் பெண்கள் எப்படி எல்லாம் தங்களுடைய குடும்பத்திற்காக போராடுகிறார்கள் என்பதை மையப்படுத்திய கதை. இந்த தொடர் ஒளிபரப்பான நாளில் இருந்து தற்போது வரை விறுவிறுப்பாக தான் சென்று கொண்டிருக்கின்றது. இந்த சீரியலை டேவிட் என்பவர் இயக்குகிறார்.

சிறகடிக்க ஆசை:

மூன்றாவது இடத்தை சிறகடிக்க ஆசை தொடரில் முத்து கதாபாத்திரத்தில் நடிக்கும் வசந்த் தான் பிடித்திருக்கிறார். இந்த சீரியல் மூலம் இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் உருவாகி இருக்கிறது. இந்த தொடரை திருமதி செல்வம் தொடரை இயக்கிய எஸ் குமரன் தான் இயக்குகிறார். டிஆர்பியில் விஜய் டிவியில் இந்த சீரியல் தான் டாப்பில் இருக்கிறது. அடுத்தடுத்து பல டிவிஸ்ட்களுடன் இந்த தொடரை இயக்குனர் கொடுத்து வருகிறார்.

சுந்தரி:

நாலாவது இடத்தில் சுந்தரி தொடரில் வரும் சுந்தரி கதாபாத்திரம் இருக்கிறது. இந்த கதாபாத்திரத்தில் கேப்ரில்லா நடித்து வருகிறார். இவர் டிக் டாக் மூலம் மக்கள் மத்தியில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் ரீல்ஸ் வீடியோ, நடனம் என்று சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கிறார். இதன் மூலம் இவருக்கு நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இவர் சின்ன திரையில் மட்டும் இல்லாமல் வெள்ளி திரையிலும் படங்களில் நடித்து வருகிறார். இருந்தாலும், இவரை சுந்தரி சீரியல் தான் மக்கள் மத்தியில் பிரபலப்படுத்தி இருக்கிறது. இந்த சீரியலை அழகர்சாமி இயக்குகிறார்.

சிங்கப்பெண்ணே:

ஐந்தாவது இடத்தில் சிங்க பெண்ணே தொடரில் வரும் ஆனந்தி கதாபாத்திரம் தான் இருக்கிறது. இந்த கதாபாத்திரத்தில் மனீஷா மகேஷ் நடிக்கிறார். இந்த தொடரை கண்ணான கண்ணே தொடரை இயக்கிய தனுஷ் தான் இயக்குகிறார். குடும்ப சூழ்நிலைக்காக கிராமத்திலிருந்து சென்னைக்கு வந்து கார்மெண்ட்ஸ்சில் வேலைக்கு போகிறார் ஆனந்தி. இவருடன் சில பேர் வேலை செய்கிறார்கள். அங்கு அவர்கள் தைரியமாக எதிர்கொள்ளும் பிரச்சனைகளை மையமாக வைத்து தான் சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.

Advertisement