ஏசியா நெட் டீவி டிவியில் ஒளிபரப்பப்படும் ஸ்ரீதனம் சீரியல் மூலம் பிரபலம் அடைந்தவர் கவிதா லட்சுமி. அவர் தற்போது அயலத்தே சுந்தரி என்ற தொடரில் நடித்து வருகிறார்.
அவருடைய மகன் வெளிநாட்டில் படித்து வருகிறார். அவருக்கு பணம் கட்ட தன்னிடம் அவ்வளவு வசதி இல்லாததால் தற்போது சாலை ஓர கடையில் தோசை துட்டு விற்று வருகிறார்.பார்ப்பதற்கு சற்று பரிதாபமாக தான் இருந்தது.
இதற்காக பல்வேறு வங்கிகளில் கல்விக் கடன் கேட்டு அழைத்துள்ளார். ஆனால், எந்த ஒரு வங்கியும் செவி மடுக்காததால் தானே ஒரு தொழிலை செய்து தன் மகனுக்கு பணம் அனுப்ப முயற்சித்து தான் இந்த வேலையில் இறங்கியுள்ளார் கவிதா லட்சுமி.





