மகளின் இரண்டாம் திருமணத்தை உறுதி செய்த பிரபு – பத்திரிக்கை கொடுக்கும் வேலை மும்மரம்.

0
299
- Advertisement -

தனது மகளின் திருமணத்தை உறுதி செய்யும் விதமாக நடிகர் பிரபு முதல்வருக்கு நேரில் சென்று பத்திரிகை வைத்துள்ள புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் பிரபு. இவர் வேற யாரும் இல்லைங்க நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மகன் தான். சிவாஜிக்கு ஒரு மகன் மற்றும் மகன் இருக்கிறார். இவரது மகன் விக்ரம் பிரபு தமிழ் சினிமாவில் பிரபலமான ஒரு நடிகராக திகழ்ந்து வருகிறார். ஆனால், இவரது மகளை பற்றி பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

-விளம்பரம்-

ஐஸ்வர்யா பிகாம் டிகிரியை(B.Com) எத்திராஜ் கல்லூரியில் படித்து இருக்கிறார். கடந்த 2009 ஆம் ஆண்டு நடிகர் பிரபுவின் மகள் ஐஸ்வர்யாவுக்கு, குணால் என்பவருடன் திருமணம் நிச்சயதார்த்தம் நடை பெற்றது. நடிகர் பிரபுவின் தங்கை தேன்மொழி மகன் தான் குணால். குணால் அவர்கள் யூகேவில் சாஃப்ட்வேர் என்ஜினியராக பணிபுரிந்து வருகிறார். இவர்களுடைய திருமணம் சென்னையில் உள்ள சிவாஜியின் வீட்டில் சிறப்பாக நடை பெற்றது.

- Advertisement -

இந்த திருமணத்தில் ஜெயலலிதா உட்பட பல சினிமா மற்றும் அரசியல் பிரபலங்கள் கலந்துகொண்டனர். சிவாஜி குடும்பத்தில் சொந்தத்தில் திருமணம் செய்வது வழக்கமான ஒரு விஷயமாக தான் இருந்து வந்துள்ளது. அந்த வகையில் சொந்தம் விட்டுப்போகிவிடக்கூடாது என்பதற்காக தான் பிரபு தனது மகளை தனது தங்கை தேன்மொழியின் மகனான குணாலுக்கு திருமணம் செய்து கொடுத்தார்.

ஆனால், இவர்கள் திருமண பந்தம் குடும்பத்தில் ஏற்பட்ட சில பிரச்சனை காரணமாக முறிந்தது. இந்நிலையில் விவாகரத்துக்கு பின் மீண்டும் சென்னை திரும்பிய பிரபுவின் மகள் ஐஸ்வர்யா கேக் தயாரித்து விற்பனை செய்யும் தொழில் செய்து வந்திருக்கிறார். இவர் மெல்ட்ஸ் டெசர்ட் (meltz.dessertz) என்ற நிறுவனத்தை தொடங்கிஇருந்தார். ஆர்டரின் பேரில் கேக் தயாரித்து வாடிக்கையாளர்களுக்கு வழங்கிவந்தார்.

-விளம்பரம்-

இப்படி ஒரு நிலையில் தான் ஐஸ்வர்யாவிற்கு இரண்டாம் திருமணம் நடைபெற இருக்கிறது. மேலும், ஐஸ்வர்யா AAA, மார்க் ஆண்டனி போன்ற படங்களை இயக்கிய ஆத்விக் ரவிச்சந்திரனை தான் திருமணம் செய்ய இருப்பதாகவும் நம்பகரமான தகவல்கள் வெளியாகி இருந்தது. தற்போது பிரபுவின் மற்றும் ஆதிக் ரவிச்சந்திரன் குடும்பமும் திருமண வேளைகளில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள்.

ஆனால், இந்த திருணம் குறித்து பிரபு குடும்பத்தினரோ இய்குனார் ஆத்விக்கோ எந்த ஒரு தகவலையும் கூறாமல் இருந்து வந்தனர். அதனை உறுதி செய்யும் விதமாக தங்களது மகளின் திருமணத்திற்கான அழைப்பிதழை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து அவரிடம் கொடுத்துள்ளனர். அப்போது பிரபுவின் மனைவி மற்றும் அவரின் மகன் விக்ரம் பிரபு ஆகியோர் உடன் இருக்கின்றனர்.

Advertisement