பிரபுதேவாவிற்கு இரண்டாம் திருமணமா ? அதுவும் பெண் இவரா ?

0
2356
- Advertisement -

நடிகரும் இயக்குனருமான பிரபுதேவா தென்னிந்திய சினிமா உலகில் மிகப்பிரபலமான நடிகர்களில் ஒருவர் பிரபு தேவா. இவர் திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல் நடன அமைப்பாளர், திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகங்களை கொண்டவர். இவர் பிரபலமான நடன ஆசிரியர் சுந்தரத்தின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. பிரபு தேவாவின் நடன திறமைக்காக இவரை இந்தியாவின் மைக்கல் ஜாக்சன் என்றும் அழைக்கிறார்கள். இவர் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடனம் ஆடி உள்ளார்.அதே போல தமிழில் போக்கிரி, இந்தியில் வான்டெட் போன்ற வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார்.

-விளம்பரம்-

பிரபுதேவா 1995 இல் ராம்லதா என்பவரை திருமணம் செய்துகொண்டார்.இவர்களுக்கு விஷால், ரிஷி ராகவேந்திர தேவா ,ஆதி த் தேவா என்று 3 மகன்கள் பிறந்தனர். இதில் பிரபுதேவாவின் மூத்த மகனான விஷால் தனது 12 வயதில் 2008 இல் காலமானார். அதன் பின்னர் பிரபுதேவா நடிகை நயன்தாராவின் காதல் மலர்ந்தது. பிரபுதேவா, நயன்தாராவுடனான பிரச்சனையால் தனது மனைவியை விவாகரத்து செய்தார். பின்னர் தனியாக தான் வாழ்ந்து வருகிறார். ஆனால், நயன்தாரா விக்னேஷ் ஷிவானிடம் சந்தோசமாக வாழ்ந்து வருகிறார்.

- Advertisement -

சமீபத்தில் கூட பேட்டி ஒன்றில் பங்கேற்ற பிரபுதேவாவின் முதல் மனைவி பேசுகையில் நயன்தாராவை எந்த ஒரு நிகழ்ச்சியில் பார்க்க நேர்ந்தாலும், அவளை சந்திக்க நேர்ந்தாலும் அப்படியே ஓங்கி ஒன்னு பலார்ன்னு கன்னத்தில் அரையலாம் என்று தோன்றுகிறது. நயன்தாராவால் தான் என்னுடைய பதினைந்து வருட சந்தோஷமான திருமண வாழ்க்கை முடிவடைந்தது. நான் நயன்தாராவை என்றென்றும் மன்னிக்க மாட்டேன்.இந்த மாதிரி பெண்களெல்லாம் கைது செய்ய சொல்ல வேண்டும் என்று கோபத்துடன் கூறி இருந்தார்.

இப்படி ஒரு நிலையில் பிரபுதேவா, இரண்டாம் திருமணம் செய்துகொள்ள இருப்பதாக தகவல்கள் வைரலாக பரவி வருகிறது. தனது உறவுக்கார பெண் ஒருவரை அவர் திருமணம் செய்ய உள்ளதாகவும், அவர் மருத்துவர் என்றும் கூறப்படுகின்றது. ஆனால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. இருப்பினும் இந்த தகவல் கோலிவுட் வட்டாரத்தில் படு வைரலாக பரவி வருகிறது.

-விளம்பரம்-

Advertisement