இரண்டாம் திருமணம் செய்தாலும் சம்மர் வெக்கேஷனை முதல் மனைவிக்கு பிறந்த மகனுடன் கழித்த பிரபுதேவா.

0
2467
Prabudeva
- Advertisement -

இரண்டாம் திருமணம் செய்தாலும் தனது முதல் மனைவிவிக்கு பிறந்த மகன்களுடன் நேரத்தை செலவழித்து வருகிறார் பிரபுதேவா. தென்னிந்திய சினிமா உலகில் மிகப்பிரபலமான நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் பிரபு தேவா. இவர் திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல் நடன அமைப்பாளர், திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகங்களை கொண்டு இருக்கிறார். இவர் பிரபலமான நடன ஆசிரியர் சுந்தரத்தின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-

பிரபுதேவா 1995 இல் ராம்லதா என்பவரை திருமணம் செய்துகொண்டார்.இவர்களுக்கு விஷால், ரிஷி ராகவேந்திர தேவா ,ஆதித் தேவா என்று 3 மகன்கள் பிறந்தனர். இதில் பிரபுதேவாவின் மூத்த மகனான விஷால் தனது 12 வயதில் 2008 இல் காலமானார். அதன் பின்னர் பிரபுதேவா நடிகை நயன்தாராவின் காதல் மலர்ந்தது. பிரபுதேவா, நயன்தாராவுடனான பிரச்சனையால் தனது மனைவியை விவாகரத்து செய்தார். பின்னர் தனியாக தான் வாழ்ந்து வருகிறார்.

- Advertisement -

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் விக்னேஷ் சிவன் – நயன்தாராவின் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. இதனை தொடர்ந்து இவர்கள் இருவரும் வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தையை பெற்றெடுத்து நயன்தாரா விக்னேஷ் ஷிவனிடம் சந்தோசமாக வாழ்ந்து வருகிறார். ஆனாலும், நயன்தாராவால் வாழ்க்கையை இழந்ததாக என்னும் பிரபுதேவாவின் முதல் மனைவி நயன்தாரா மீது இன்னும் கோபமாக தான் இருக்கிறார்.

சமீபத்தில் கூட பேட்டி ஒன்றில் பங்கேற்ற பிரபுதேவாவின் முதல் மனைவி பேசுகையில் நயன்தாராவை எந்த ஒரு நிகழ்ச்சியில் பார்க்க நேர்ந்தாலும், அவளை சந்திக்க நேர்ந்தாலும் அப்படியே ஓங்கி ஒன்னு பலார்ன்னு கன்னத்தில் அரையலாம் என்று தோன்றுகிறது என்று கோபத்துடன் கூறி இருந்தார். இப்படி ஒரு நிலையில் பிரபு தேவா தனது உறவுக்கார பெண் ஒருவரை திருமணம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியானது.

-விளம்பரம்-

ஆனால், இதுநாள் நாள் வரை பிரபுதேவாவின் இரண்டாம் மனைவியை வெளியில் காட்டவில்லை. இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பிரபுதேவா தன்னுடைய ஐம்பதாவது பிறந்தநாளை கொண்டாடியிருந்தார்.அப்போது பிரபுதேவாவின் இரண்டாவது மனைவி வீடியோ மூலம் தோன்றி அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார். அப்போது பேசிய அவர் உங்களை திருமணம் செய்து 3 ஆண்டுகள் ஆகிவிட்டது.

உங்களுடைய ஒழுக்கம் மற்றும் கடின உழைப்பு என்னை மிகவும் ஆச்சரியப்படுத்தியது. நீங்கள் எப்போதும் என்னை மகிழ்ச்சியாக வைத்துள்ளீர்கள். உங்களை திருமணம் செய்ததை நான் அதிர்ஷ்டமாக கருதுகிறேன். இதற்காக நான் கடவுளுக்கு கடமைப்பட்டிருக்கிறேன். என்னதான் இரண்டாம் திருமணம் செய்தாலும் முதல் மனைவிக்கு பிறந்த குழந்தைகளை கண்ணும் கருத்துமாக பார்த்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் தனது மகனுடம் கோடை விடுமுறையை வெளிநாட்டில் கழித்துள்ளார் பிரபுதேவா.

Advertisement