இரண்டு படம் ஹிட் கொடுத்ததால் நீ என்ன பெரிய ஆளா? விடுதலை படம் குறித்து பதிவிட்ட பிரதீப்பை திட்டி தீர்க்கும் நெட்டிசன்கள்.

0
970
- Advertisement -

விடுதலை படம் குறித்து இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் பதிவிட்ட டீவ்ட்டை பார்த்து நெட்டிசன்கள் விமர்சித்து வரும் பதிவு சோசியல் மீடியாவில் சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. கோலிவுட்டில் மிகப் பிரபலமான இயக்குனராக வலம் வருபவர் வெற்றிமாறன். இவருடைய படைப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்று இருக்கிறது. அந்த வகையில் தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் விடுதலை. இந்த படத்தில் கதாநாயகனாக சூரி நடித்திருக்கிறார்.

-விளம்பரம்-

விஜய் சேதுபதி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இவர்களுடன் இந்த படத்தில் ஜிவி பிரகாஷின் தங்கை பவானி ஸ்ரீ, சேத்தன், தென்றல் ரகுநாதன் உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய துணைவன் என்ற நாவலை அடிப்படையாக வைத்து இந்த படத்தை இரண்டு பாகங்களாக இயக்குனர் உருவாகியிருக்கிறார். அதில் முதல் பாகம் தான் கடந்த வாரம் வெளியாகியிருக்கிறது. இந்த படத்தை எல்ரெட் குமார் தயாரித்திருக்கிறார்.

- Advertisement -

விடுதலை படம்:

இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசை அமைத்திருக்கிறார். படத்தில் மக்கள் வாழ்ந்து வரும் மலைப்பகுதியில் கனிம வளங்கள் நிறைய கிடைக்கிறது. இந்த கனிம வளங்களை எடுத்துக் கொள்ள தனியார் நிறுவனத்திற்கு அரசாங்கம் அனுமதி கொடுக்கிறது. ஆனால், இந்த கனிம வளங்களை எடுக்கக்கூடாது என்று மக்கள் எதிர்த்து போராடுகின்றனர். இந்த போராட்டத்தின் தலைவனாக விஜய் சேதுபதி இருக்கிறார். பின் போலீஸான சூரி மக்களுக்கு எப்படியெல்லாம் உதவி செய்கிறார்? மக்களின் இந்த போராட்டம் வெற்றி பெற்றதா? இறுதியில் என்ன ஆனது? என்பதே படத்தின் மீதி கதை.

பிரதீப் ரங்கநாதனின் பதிவு:

இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும், இந்த படத்தை குறித்து திரைப்பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை என பலரும் பாராட்டி வருகின்றனர். இந்த நிலையில் இயக்குனர் பிரதீப் ரங்கநாதனும் விடுதலை படம் குறித்து டீவ்ட் ஒன்றை போட்டு இருக்கிறார். அதில் அவர், விடுதலை படம் எக்ஸ்ட்ராடினரி. இயக்குனர் வெற்றிமாறன் மற்றும் அவருடைய குழுவிற்கு வாழ்த்துக்கள் என்று பதிவிட்டு இருந்தார். பிரதீப்பின் இந்த பதிவு சோசியல் மீடியாவில் வைரலானதை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் பயங்கரமாக திட்டி வருகிறார்கள்.

-விளம்பரம்-

பிரதீப் பதிவை விமர்சிக்கும் நெட்டிசன்கள்:

அதில், வெற்றிமாறன் சார் என்று சொல்லுங்க ரங்கநாதான், இரண்டு படம் ஹிட் கொடுத்ததால் நீ என்ன பெரிய ஆளா? அவர் எவ்வளவு பெரிய இயக்குனர். அவரை போய் மரியாதை இல்லாமல் பேசுவதா! என்றெல்லாம் விமர்சித்து கமெண்ட் போட்டு வருகிறார்கள். அதோடு ஏற்கனவே, பிரதீப் 2011 ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியை விமர்சித்து டீவ்ட் போட்டு இருந்தார். அதேபோல் 2014 ஆம் ஆண்டு விஜய்யின் ஜில்லா படத்தை விமர்சித்து பதிவிட்டு இருந்தார். பின் லவ் டுடே படத்தின் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவை குறித்தும் இவர் மோசமாக விமர்சித்து பதிவு போட்டு இருந்தார்.

மன்னிப்பு கேட்ட பிரதீப்:

இதை நெட்டிசன்கள் சோசியல் மீடியாவில் வைரலாக்கி இருந்தார்கள். இந்நிலையில் இது குறித்து பிரதீப் ரங்கநாதன் விளக்கம் அளித்து பதிவு ஒன்றை போட்டு இருந்தார். அதில் அவர், அதிகம் பரவி வரும் பதிவுகள் போட்டோஷாப் செய்யப்பட்டவை. ஒரு வார்த்தையை மாற்றினால் கூட பல விஷயங்கள் மாறும் என்பதால் பேஸ்புக் கணக்கு ரீஆக்டிவேட் செய்யப்பட்டது. விஷயங்களை மாற்ற முயற்சிப்பவர்கள் மீது எனக்கு கோபமில்லை. அதற்கு பதிலாக மக்கள் என்னை எவ்வளவு ஆதரிக்கிறார்கள் என்பதை காட்டியதற்காக அவர்களுக்கு நன்றி. சில பதிவுகள் உண்மையானவை. ஆனால், Cuss Words கொண்டிருக்கும் பதிவுகள் போலியானவை. நான் தவறு செய்து விட்டேன். வயதுக்கேற்ப நாம் அனைவரும் வளர்ந்து கற்றுக் கொள்கிறோம். நான் அதை சரி செய்து முயற்சித்தேன். நான் இன்னும் ஒவ்வொரு நாளும் சிறந்த மனிதனாக மாற முயற்சிக்கிறேன் என்று கூறி இருந்தார்.

Advertisement