பாலா படத்தில் நாயகியாக நடிக்க இருந்துள்ள சூப்பர் சிங்கர் பிரகதி – கைவிடப்பட்ட காரணம் என்ன? அவரே சொன்ன உண்மை.

0
223
- Advertisement -

இயக்குனர் பாலா படத்தில் நடிக்காமல் போனதற்கான காரணம் குறித்து பாடகி பிரகதி அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் பல ஆண்டுகளாக பிரபலமாக சென்று கொண்டிருக்கும் நிகழ்ச்சியில் ஒன்று சூப்பர் சிங்கர். இந்த நிகழ்ச்சியை சீனியர், ஜூனியர் என்று மாறி மாறி ஒளிபரப்பி வருகிறார்கள். இந்த இரண்டு சீசனிலும் மாறி கலந்து கொண்டு பிரபலமடைந்தவர் பிரகதி.

-விளம்பரம்-

இவர் 1997 ஆம் ஆண்டு சிங்கப்பூரில் பிறந்தவர். இவர் இந்திய கிரிக்கெட் வீரர் அபினவ் முகுந்தின் உறவினர் என்பதும் குறிப்படத்தக்கது. இவர் அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா நகரில் வளர்ந்தார். அங்கே பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பாடி இருக்கிறார். அதன் பின் இவர் கடந்த 2012ம் ஆண்டு ஒளிபரப்பான ஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியில் இவர் இரண்டாம் பரிசையும் பெற்றார்.

- Advertisement -

பாடகி பிரகதி குறித்த தகவல்:

இவருக்கு சிறுவயது முதலே இசை மீது ஆர்வம் இருந்ததால் சிறு வயது முதலே சங்கீதத்தை முறையாக கற்று வந்தார். மேலும், பாடகி பிரகதி 2010 ஆம் ஆண்டு ஜெயா தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஒரு ஜூனியர் பாடல் நிகழ்ச்சியில் பங்குபெற்று முதல் பரிசை வென்றார். அதன் பின் இவர் விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பாடி இருந்தார். இதன் மூலம் கிடைத்த பிரபலத்தினால் இவருக்கு சினிமாவில் பாடும் வாய்ப்பும் கிடைத்தது.

பாடகி பிரகதி பேட்டி:

இவர் தமிழில் நிறைய பாடல்களை பாடி இருக்கிறார். அதன் பின் இவர் இயக்குனர் பாலா இயக்கத்தில் முன்னணி கதாநாயகியாக நடிக்க இருந்தது. ஆனால் அந்த படத்தை பற்றிய அறிவிப்பு அப்படியே நின்றுபோனது. இருப்பினும் பிரகதி தொடர்ந்து சினிமாவில் பாடி வருகிறார். இந்நிலையில் இது தொடர்பாக சமீபத்தில் அளித்த பேட்டியில் பிரகதி, எனக்கு ஒரு நல்ல வழிகாட்டியாக பாலா சார் இருந்தார். என்னை பார்த்தவுடன் அவர், உன்னிடம் நடிப்பதற்கான தகுதியும், உடல்வாக்கம் இருக்கிறது. நீ நடிப்பதாக இருந்தால் என்னுடைய படத்தில் தான் முதலில் நடிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

-விளம்பரம்-

பாலா பட வாய்ப்பு:

அதற்கு பிறகு தான் நான் பாலா சார் படத்தில் நடிக்க கமிட்டானேன். அந்த படம் தாரை தப்பட்டை கிடையாது. அந்த படம் வேறு ஒன்று. சில காரணங்களால் அந்த படம் கை கூட வில்லை. அது மட்டும் இல்லாமல் அந்த படத்தினுடைய காட்சிகள் எல்லாம் எடுத்து முடித்த பிறகு எனக்கு பாடுவதற்கும் நிறைய வாய்ப்புகள் வந்தது, நடிப்பதற்கும் வாய்ப்புகள் வந்தது. பாடுவதென்றால் எனக்கு பயம் கிடையாது. தன்னம்பிக்கையோடு பாடுவேன். ஆனால், நடிப்பதில் எனக்கு கொஞ்சம் தயக்கம் இருந்தது.

பட வாய்ப்பு குறித்து சொன்னது:

இவர்கள் எந்த நம்பிக்கையில் என்னை கூப்பிடுகிறார்கள் என்பது எனக்கு சந்தேகமாக இருந்தது. பாலா சார் படத்தில் நான் நடிக்க இருக்கிறேன் என்று அறிவிப்பு வந்த பிறகு தான் அந்த வாய்ப்புகளும் வந்தது. ஆனால் அந்த படம் கைவிடப்பட்டது. அதற்கான காரணம் என்னவென்று எனக்கு தெரியவில்லை. அதற்குப் பின் நான் நடிப்பிலும் கொஞ்சம் கவனம் செலுத்த ஆரம்பித்தேன். நான் மீண்டும் வெளிநாட்டிற்கு சென்று படிக்கப் போனேன். அந்த சமயத்தில் தான் ஹாலிவுட்டில் இருந்து எனக்கு இரண்டு, மூன்று ஆபர்கள் வந்தது. அதற்கு பின் நான் நடிப்பு கற்று சில சீரியல்களிலும் நடித்தேன். இப்போது நான் ஒரு பெரிய படத்தில் கமிட்டாகி இருக்கிறேன் என்று கூறியிருந்தார்.

Advertisement