லவ்வர்ஸ் ஆன பின்னர் சென்ற முதல் Datingன் போது எடுத்த முதல் புகைப்படம் – பிரசன்னா பகிர்ந்த புகைப்படம்.

0
666
sneha
- Advertisement -

காதலுக்கு பின் பிரசன்னா-சினேகா எடுத்துக் கொண்ட முதல் புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் எத்தனையோ நடிகர் நடிகைகள் திருமணம் செய்து கொண்டு ரியல் லைப் தம்பதிகளாக வாழ்ந்து வருகின்றனர். பாக்யராஜ்-பூர்ணிமா, ரஜினி – லதா, அஜித் – ஷாலினி, சூர்யா – ஜோதிகா என்று இப்படி சொல்லிகொண்டே போகலாம். அந்த வகையில் தமிழ் சினிமாவில் குயூட் தம்பதிகளாக திகழ்ந்து வருபவர்கள் சினேகா- பிரசன்னா ஜோடி. தமிழ் சினிமாவில் புன்னகை அரசி என்ற பட்டத்துடன் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வந்தவர் சினேகா.

-விளம்பரம்-

இவர் தமிழ் சினிமாவில் விஜய், அஜித், கமல், சூர்யா, விக்ரம், சிம்பு, தனுஷ் என்று பல டாப் நடிகர்களுடன் சேர்ந்து நடித்து இருக்கிறார். மேலும், இவர் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்று பல மொழிகளில் நடித்து இருக்கிறார். சினேகாவின் சிரிப்பு ஒன்றே போதும் ரசிகர்கள் விழுவதற்கு. அதனாலேயே அவரை ‘புன்னகை அரசி’ என்று தான் அழைப்பார்கள். அந்த அளவிற்கு அவருடைய சிரிப்பும், முகபாவமும் இருக்கும்.

- Advertisement -

சினேகா-பிரசன்னா திரைப்பயணம்:

சினேகா அவர்கள் குடும்ப பாங்கான கதாபாத்திரங்களிலும், அழகான தோற்றத்திற்கும், நடிப்புத் திறனுக்காகவும் தான் ரசிகர்கள் இவரை இன்னும் விரும்புகிறார்கள். தற்போது அவர் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் பணியாற்றி வருகிறார். அதே போல தமிழ் சினிமாவில் சாக்லெட் பாயாக அறிமுகமானவர் நடிகர் பிரசன்னா. பின்னர் தமிழில் மிரட்டலான வில்லன், அற்புதமான நடிகர் என்ற பெயரையும் எடுத்து இருக்கிறார்.

சினேகா-பிரசன்னா திருமணம்:

தற்போது இவர் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். இதனிடையே 2009 ஆம் ஆண்டு சினேகா அவர்கள் பிரசன்னாவுடன் ‘அச்சமுண்டு அச்சமுண்டு’ என்ற படத்தில் இணைந்தார். பின் இவர்களுக்கு இடையே காதல் ஏற்பட்டது. மேலும், இவர்கள் இருவரும் எட்டு வருடங்களாக காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். 2011ம் ஆண்டு தான் பிரசன்னா அவர்கள் தங்களுடைய காதலை ஊடகங்களுக்கு உறுதிப்படுத்தி இருந்தார். அதனைத்தொடர்ந்து 2012 ஆம் ஆண்டு சினேகா-பிரசன்னா இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

-விளம்பரம்-

சினேகா-பிரசன்னா பிள்ளைகள்:

இவர்களுக்கு தற்போது விகான் ஒரு அழகான மகன் மற்றும் ஆத்யந்தா என்ற ஒரு அழகான மகளும் இருக்கிறார்கள். இப்படி கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாக இவர்கள் இருவரும் ஒற்றுமையாக சிறந்த தம்பதிகளாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அதோடு இருவருமே சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கிறார்கள். அதனால் தங்களுடைய குழந்தைகள் உடன் எடுத்துக்கொண்ட புகைப்படம், வீடியோக்களை எல்லாம் சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருகிறார்கள்.

வைரலாகும் சினேகா-பிரசன்னா புகைப்படம்:

அதுமட்டுமில்லாமல் இருவருமே தற்போது படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் நடிகர் பிரசன்னா தனது சமூக வலைத்தள பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருக்கிறார். அது என்னவென்றால், சினேகாவுடன் கொண்ட காதலுக்கு பின் முதல் dating சென்ற போது எடுத்துக் கொண்ட முதல் புகைப்படத்தை தான் பிரசன்னா பகிர்ந்திருக்கிறார். அதுவும் இவர்களின் முதல் Dating நியூ யார்க்கில் தான் நடைபெற்று இருக்கிறது. தற்போது அந்த புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலானதை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் லைக்ஸ்குகளை குவித்து வருகிறார்கள்.

Advertisement