அந்த விஷயத்தில் ஏற்பட்ட மன உளைச்சலால் தான் இப்படி ஆகிட்டாரு – பிரேமலதா சொன்ன காரணம்.

0
576
- Advertisement -

விஜயகாந்தின் உடல்நிலை இப்படி ஆனது குறித்து பிரேமலதா பேசி இருக்கிறார்.கோலிவுட்டில் கேப்டன் என்ற அந்தஸ்துடன் உச்ச நடிகராக திகழ்ந்தவர் விஜயகாந்த். இவர் நடிகர் மட்டும் இல்லாமல் அரசியல்வாதியும் ஆவார். இவர் தன்னுடைய நடிப்புத் திறமை மூலம் சினிமா உலகில் மட்டும் இல்லாமல் மக்கள் மத்தியிலும் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்து இருக்கிறார். 90 காலகட்டம் தொடங்கி 2k வரை பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தார் விஜயகாந்த்.

-விளம்பரம்-

பின் அவர் சினிமாவில் இருந்து விலகி முழு நேர அரசியலில் களமிறங்கி இருந்தார். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக இவர் உடல் நல குறைவின் காரணமாக சினிமா மற்றும் அரசியல் என இரண்டிலும் விலகி சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் தேமுதிக கட்சியை அவருடைய மனைவி பிரேமலதா மற்றும் மகன்கள் தான் பார்த்து கொண்டு வருகின்றனர். இப்படி இருக்கும் நிலையில் கடந்த மாதம் விஜயகாந்த் அவர்கள் இருமல், சளி அதிகமாக உள்ளதால் அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டு இருந்தது.

- Advertisement -

இதனால் இவரை நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்திருக்கிறார்கள். பின் விஜயகாந்தின் நுரையீரலில் பிரச்சனை இருப்பதால் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு இருந்தது. இதை அறிந்த விஜயகாந்தின் ரசிகர்களும், தொண்டர்களும் கண்ணீர் மல்க கதறி அழுது இருக்கிறார்கள். அது மட்டும் இல்லாமல் பலருமே கோயில்களில் விஜயகாந்த் உடல் நலம் தேறி மீண்டு வர வேண்டும் என்று பிரார்த்தனைகளையும் அபிஷேகங்களையும் செய்து இருந்தார்கள்.

இப்படி ஒரு நிலையில்கடந்த 11-ம் தேதி விஜயகாந்த் வீடு திரும்பி இருக்கிறார். அவர் பூணமாக குணமடைந்து விட்டதாக அறிவிக்கப்பட்டிருந்தார்கள். இப்படி இருக்கும் நிலையில் தேமுதிக கட்சியின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்றது. இந்த கூட்டத்தின் போது நாற்கலையில் அழைத்து வரப்பட்ட கேப்டனை பார்த்து தொண்டர்கள் கதறி அழுதனர். அதிலும் ஒரு கட்டத்தில் நாற்காலியில் இருந்து அப்படியே சரிந்து விழபார்த்தார். உடனே அருகில் இருந்தவர்கள் அவரை தாங்கி பிடித்தனர். இந்த வீடியோவை கண்ட பலரும் கேப்டனின் நிலையை கண்டு கலங்கினர்.

-விளம்பரம்-

இப்படி ஒரு நிலையில் கட்சியின் புதிய பொதுச் செயலாளராக பொறுப்பேற்ற பிரேமலதா சமீபத்தில் கோயம்பேட்டில் உள்ள கட்சியின் தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசி இருந்தால் அப்போது பேசிய அவர் ‘ 2011ம் தேர்தலுக்கு பிறகு பல துரோகங்கள், அதன் பிறகு நடந்தவை விஜயகாந்துக்கு சறுக்கலை ஏற்படுத்தியது, அதனால் ஏற்பட்ட மன உளைச்சலே அவரது உடல் நலக்குறைவுக்கு மிக முக்கிய காரணம் எனவும் கூறினார்.

தன்னை பொதுச்செயலாளராக தேர்ந்தெடுத்த முடிவு என்பது அவசரம் அவசரமாக எடுத்த முடிவு இல்லை எனவும் தெரிவித்தார். விஜயகாந்த்தின் உத்தரவின்படி தொடர்ந்து தேமுதிக பயணிக்கும் எனவும், 100 ஆண்டு கால அனுபவம் 19 ஆண்டுகளில் கிடைத்துள்ளாதாகவும் கூறினார்.விஜயகாந்தை திருமணம் செய்து கொண்ட நாள் முதல் தொண்டர்களுக்கு அண்ணியாக மட்டுமல்லாமல், அன்னையாக இருந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

Advertisement