அவருக்கு உடல் நலக்குறைவு இப்படி தான் ஆரம்பித்தது – கேப்டனின் தற்போதைய நிலை குறித்து பிரேமலதா உருக்கமான பேட்டி.

0
643
vijayakanth
- Advertisement -

கண்கலங்கிய படி கேப்டன் விஜயகாந்த் உடல்நிலை குறித்து பிரேமலதா அளித்து இருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. கோலிவுட்டில் கேப்டன் என்ற அந்தஸ்துடன் உச்ச நடிகராக திகழ்ந்தவர் விஜயகாந்த். இவர் தன்னுடைய நடிப்புத் திறமை மூலம் திரை உலகில் மட்டும் இல்லாமல் மக்கள் மத்தியிலும் தனெக்கென ஒரு இடத்தைப் பிடித்து இருக்கிறார். மேலும், ரஜினி, கமல், சரத்குமார்,பிரபு போன்ற பல நடிகர்களுக்கு டப் கொடுக்கும் அளவிற்கு தமிழ் சினிமா உலகில் முத்திரை பதித்து இருந்தவர் விஜய்காந்த்.

-விளம்பரம்-

இனிக்கும் இளமை என்ற படத்தின் மூலம் தமிழ் துறைக்கு அறிமுகமானவர் விஜயகாந்த். அதனை தொடர்ந்து இவர் பல வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆகி இருக்கிறார். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்றுத் தந்திருக்கிறது. மேலும், 2015 ஆம் ஆண்டு வெளியான சகாப்தம் என்ற படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் விஜய்காந்த் நடித்திருப்பார். இது தான் ரசிகர்கள் அவரை திரையில் பார்த்த கடைசி படம்.

- Advertisement -

விஜயகாந்த் குடும்பம்:

அதற்குப்பின் அவர் சினிமாவில் இருந்து விலகி இருந்தார். பிறகு விஜய்காந்த் முழு நேர அரசியலில் களமிறங்கி இருந்தார். இதனிடையே நடிகர் விஜயகாந்த் அவர்கள் 1990 ஆம் ஆண்டு பிரேமலதாவை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு விஜய பிரபாகரன் மற்றும் சண்முக பாண்டியன் என இரு மகன்கள் உள்ளனர். இளையவரான சண்முக பாண்டியன் தனது தந்தையின் வழியை பின்பற்றி சினிமாவில் நடித்து வருகிறார். விஜய பிரபாகரன் அவர்கள் தாயார் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் மாமா எல் கே சதீஷ் ஆகியோரை பின்பற்றி தேமுதிக-வில் செயல்பட்டு வருகிறார்.

விஜயகாந்த் உடல்நிலை:

சமீபகாலமாக விஜயகாந்துக்கு உடல் பிரச்சனைகள் அதிகமாக இருந்ததால் அவரால் படங்களில் நடிக்க முடியாமல் போனது. இதனால் அவர் அடிக்கடி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். உடல் நல பிரச்சனை காரணமாக விஜயகாந்த் அவர்கள் சினிமா மற்றும் அரசியல் இரண்டிலும் பெரிதாக தலையிடாமல் தான் இருந்து வருகிறார். தற்போது கட்சியை கூட அவரது குடும்பத்தினர் தான் கவனித்து வருகின்றனர். சமீபத்தில் கூட விஜயகாந்த் தன்னுடைய மனைவியுடன் சேர்ந்து 75 வது சுதந்திர தின விழாவில் தேசிய கொடியை ஏற்றி இருந்தார். நேற்று விஜய்காந்தின் பிறந்தநாள்.

-விளம்பரம்-

பிரேமலதா விஜயகாந்த் அளித்த பேட்டி:

இதனை அடுத்து ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை என பலரும் நடிகர் விஜயகாந்துக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி இருந்தார்கள். இந்நிலையில் சமீபத்தில் பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் தனியார் டிவி ஒன்றுக்கு பேட்டி அளித்திருந்தார். அதில் அவர் விஜயகாந்த் குறித்து கூறியிருந்தது, அவருடைய உடல் நிலையை பார்த்து தொண்டர்கள் அழுவதாக சொல்கிறார்கள். அது உண்மைதான். எல்லோருக்குமே அந்த கவலை இருக்கு. அவரை மாதிரி ஒரு ஆக்டிவான நபர் யாருமே இல்லை. அவரது இடத்தை நிரப்ப இன்னும் யாரும் வரவில்லை. ஆனால், அவர் வெளியே வந்து தன் தொண்டர்களை சந்திக்க வேண்டும் என்று தான் விரும்பினார்.

விஜயகாந்த் குறித்து சொன்னது:

அதனால்தான் அழைத்து வந்தோம். ஆனால், நடப்பதிலும் பேசுவதிலும் குறைபாடு இருக்கிறது. தற்போது அவருக்கு 70 வயது ஆகிவிட்டது. எல்லா வகையான சிகிச்சையும் தரப்பட்டுள்ளது. இப்போதும் சிகிச்சை நடந்து கொண்டு தான் இருக்கிறது. இப்போது அவர் நன்றாகவே இருக்கிறார். விஜயகாந்த் பொருத்தவரை தொண்டர்களுக்கான தலைவர். எத்தனை வருடமானாலும் அப்படித்தான் இருப்பார். இவர் தேர்தல் பிரச்சாரங்களுக்கு செல்லும் போதும், பொதுக்கூட்டங்களில் கலந்து கொள்ளும்போதும் மக்கள் இவரை பார்க்கும் போதெல்லாம் அடையும் உற்சாகத்தை சொல்ல முடியாது.

தொண்டர்களை பார்க்கணும் என்று அவர்தான் விரும்பினார்

இப்போ மறுபடியும் தொண்டர்களை சந்தித்து இருக்கிறார்.அதை தவறு என்கிறீர்களா? தொண்டர்களை பார்க்கணும் என்று அவர்தான் விரும்பினார். ஆனால், பலரும் ஏன் அவரை கூட்டிட்டு வந்தீர்கள்? என்று கேட்கிறார்கள். சில பேர் கேப்டனை எங்க கண்ணிலேயே காட்டுவதில்லை என்கிறார்கள். வெளியில் அழைத்து வந்தாலும் குறை, அழைத்து வராவிட்டாலும் குறை சொல்கிறார்கள். மேலும்,தொண்டர்களிடம் என்னை அழைத்துச் செல்லுங்கள் என்று விஜயகாந்த் சொன்னதால் தான் பாதுகாப்பாக வந்தோம். ஆனால், அதை மீடியாக்களில் நெகட்டிவாக சொல்கிறார்கள்.

vijayakanth

அழாமல் பதில் சொல்ல முடியுமா :

கேப்டன் விரும்புவதை தான் நாங்கள் செய்கிறோம். இந்த முறை 75வது சுதந்திர தினம். அது மட்டும் இல்லாமல் விஜயகாந்த் தேசபக்தி மிக்கவர். அதனால் தான் 116 அடி உயரத்தில் தேசியக்கொடி அன்று ஏற்றினோம். இதை வேறு கட்சியினர் கூட யாரும் செய்யவில்லை. தேசியக்கொடி ஏற்றிவிட்டு ஆனந்த கண்ணீர் வடித்தார். அதையும் தவறாக தான் மீடியாவில் எழுதியிருந்தார்கள். அவருடைய பிறந்தநாள் அன்றும் தொண்டர்களை சந்தித்ததில் அவருக்கு நிறைய மகிழ்ச்சி. வீட்டிற்கு சென்ற பிறகும் கூட அவர் அதைப்பற்றி தான் எங்களிடம் பேசிக்கொண்டிருந்தார். அவருடைய உடல்நிலை குறித்து பலரும் கேள்வி கேட்கிறார்கள். என்னால் அழாமல் பதில் சொல்ல முடியுமா என்று தெரியாது என்று கண் கலங்கியபடி கூறியிருந்தார்.

Advertisement