தட்டிவிட்டா பத்திக்கும் மிஸ்டர் – கேப்டன் குறித்து அட்வைஸ் செய்த பாண்டியராஜனுக்கு பிரேமலதா காட்டமான பதிலடி.

0
626
- Advertisement -

விஜயகாந்தின் உடல்நிலையை பார்த்து மனம் நொந்து இயக்குனர் சுசீந்திரன் போட்டுள்ள பதிவு வைரலான நிலையில் தற்போது இதற்கு பதிலடி கொடுத்துள்ளார் பிரேமலதா. கோலிவுட்டில் கேப்டன் என்ற அந்தஸ்துடன் உச்ச நடிகராக திகழ்ந்தவர் விஜயகாந்த். இவர் நடிகர் மட்டும் இல்லாமல் அரசியல்வாதியும் ஆவார். இவர் தன்னுடைய நடிப்புத் திறமை மூலம் சினிமா உலகில் மட்டும் இல்லாமல் மக்கள் மத்தியிலும் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்து இருக்கிறார்.

-விளம்பரம்-

கடந்த சில ஆண்டுகளாக இவர் உடல் நல குறைவின் காரணமாக சினிமா மற்றும் அரசியல் என இரண்டிலும் விலகி சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் தேமுதிக கட்சியை அவருடைய மனைவி பிரேமலதா மற்றும் மகன்கள் தான் பார்த்து கொண்டு வருகின்றனர். இப்படி இருக்கும் நிலையில் கடந்த மாதம் விஜயகாந்த் அவர்கள் இருமல், சளி அதிகமாக உள்ளதால் அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டு இருந்தது.

- Advertisement -

விஜயகாந்த் உடல்நிலை:

இதனால் இவரை நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்திருக்கிறார்கள். பின் விஜயகாந்தின் நுரையீரலில் பிரச்சனை இருப்பதால் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு இருந்தது. இதை அறிந்த விஜயகாந்தின் ரசிகர்களும், தொண்டர்களும் கண்ணீர் மல்க கதறி அழுது இருக்கிறார்கள். அது மட்டும் இல்லாமல் பலருமே கோயில்களில் விஜயகாந்த் உடல் நலம் தேறி மீண்டு வர வேண்டும் என்று பிரார்த்தனைகளையும் அபிஷேகங்களையும் செய்து இருந்தார்கள்.

சரிந்து விழ பார்த்த கேப்டன் :

மேலும், கடந்த 11-ம் தேதி விஜயகாந்த் வீடு திரும்பி இருக்கிறார். அவர் பூணமாக குணமடைந்து விட்டதாக அறிவிக்கப்பட்டிருந்தார்கள். இப்படி இருக்கும் நிலையில் தேமுதிக கட்சியின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தின் போது நாற்கலையில் அழைத்து வரப்பட்ட கேப்டனை பார்த்து தொண்டர்கள் கதறி அழுதனர். அதிலும் ஒரு கட்டத்தில் நாற்காலியில் இருந்து அப்படியே சரிந்து விழபார்த்தார். உடனே அருகில் இருந்தவர்கள் அவரை தாங்கி பிடித்தனர்.

-விளம்பரம்-

சுசீந்திரன் உருக்கம் :

இப்படி ஒரு நிலையில் கேப்டனின் இந்த வீடியோவை கண்ட இயக்குனர் சுசீந்திரன் ‘கேப்டன் திரு. விஜய்காந்த் அவர்களுக்கு , இப்பொழுது சரியான ஓய்வு தேவை . அவர் பூரண குணமடையும்வரை அவரை இப்படியெல்லாம் கஷ்ட்டப்படுத்தாதீர்கள் please … பிடித்த ஒரு ‘நல்ல மனிதரை ‘ இப்படி பார்க்க ரொம்பவே கஷ்ட்டமா இருக்கு’ என்று பதிவிட்டு தனது ஆதங்கத்தை தெரிவித்து இருக்கிறார்.

பிரேமலதா பதிலடி :

இப்படி ஒரு நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற பிரேமலதா ‘எதைப் பத்தி வேனா, என்ன வேனால பேசலாம்னு கிடையாது. கட்சிக்காரங்க எல்லாரும் கடும் கோபத்தில் இருக்காங்க. தட்டிவிட்டா பத்திக்கும். மிஸ்டர் பாண்டிராஜிடம் நான் கேட்டுக் கொள்கிறேன். ஏதோ ஒரு பதிவு போடணும் என்பதற்காக பதிவிடாதீர்கள். இது சினிமா கிடையாது, கட்சி. எங்களுக்குத் தெரியும் எப்படி அவரை பாத்துக்கணும் என்று. உங்க அறிவுரைக்கும், இலவச அட்வைஸூக்கும் நன்றி மிஸ்டர் பாண்டியராஜன்’ என்று பதிலடி கொடுத்துள்ளார்.

Advertisement