‘வீரபாண்டி தேரப்போல பேரெடுத்த சிங்கம் தான்’ – கேப்டன் பாடலை கேட்டதும் மேடையில் கண்ணீர் விட்ட பிரேமலதா

0
458
- Advertisement -

கேப்டன் விஜயகாந்தின் இறப்பு செய்தி ஒட்டுமொத்த தமிழகத்தையும் புரட்டி போட்டது. கடந்த சில ஆண்டுகளாக விஜயகாந்த் உடல் நல குறைவின் காரணமாக சினிமா மற்றும் அரசியல் இரண்டிலும் விலகி சிகிச்சை பெற்று இருந்தார். இப்படி ஒரு நிலையில் நடிகர் விஜயகாந்த் அவர்கள் கடந்த டிசம்பர் மாதம் இறுதியில் சிகிச்சை பலனின்றி காலமானார். விஜயகாந்த் மறைவு அவரின் குடும்பத்தை மட்டும் இல்லாமல் தமிழக மக்களையும் அதிகம் பாதித்து இருக்கிறது.

-விளம்பரம்-

மேலும், அவர் மறைவிற்கு பல்வேறு அரசியல் பிரபலங்களும், திரை பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து இருந்தார்கள் . பின் விஜயகாந்தின் உடலுக்கு அரசு மரியாதை உடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. அதோடு பிரபலங்கள் பலர் விஜயகாந்தின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ள முடியாததால் அவருடைய நினைவிடத்திற்கு வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். தமிழகத்தில் பல இடங்களில் கேப்டன் விஜயகாந்தினுடைய புகழ், நிகழ்ச்சிகளும் கூட்டங்களும் நடந்து கொண்டு தான் இருக்கிறது.

- Advertisement -

விஜயகாந்த் இறப்பு:

அந்த வகையில் தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் நடிகர் விஜயகாந்த்திற்கு நினைவேந்தல் கூட்டம் ஒன்று சென்னை காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இதில் பிரபலங்கள் பலருமே கலந்து கொண்டிருந்தார்கள். அதில் விஜயகாந்த் குறித்து பல விஷயங்கள் பகிரப்பட்டது. இதனை அடுத்து விஜயகாந்த்திற்கு நடிகர்கள் சங்கம், தயாரிப்பாளர்கள் சங்கம், இயக்குனர்கள் சங்கம் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது. இதனை அடுத்து பிரேமலதா அவர்கள் விஜயகாந்தின் இறுதி நிமிடங்களை குறித்து கட்சிக் கூட்டத்தில் பகிர்ந்து இருந்தார்.

கட்சி கூட்டத்தில் பிரேமலதா:

அதில் இனி மக்களுக்காகவும் கட்சித் தொண்டர்களின் நலனுக்காகவும் தான் இருப்பேன் என்றெல்லாம் பிரேமலதா உறுதிமொழி எடுத்திருந்தார். அதோடு விஜயகாந்த் கையில் இருந்த மோதிரத்துடனே உடலும் அடக்கம் செய்யப்பட்டு இருக்கிறது என்று பிரேமலதா கூறி இருந்தார். தற்போது விஜயகாந்தினுடைய நினைவிடத்திற்கு பிரபலங்கள், பொதுமக்கள் என பலருமே அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். இன்னொரு பக்கம் விஜயகாந்த் பெயரில் அன்னதானம் செய்வது குறித்து வேலைகளை பெயரில் அவருடைய மகன்களும் செய்து வருகிறார்கள்.

-விளம்பரம்-

பிரேமலதா டாட்டூ:

அதேபோல் விஜயகாந்த் என்றும் நம்மை விட்டு நீங்காமல் இருக்க அவருடைய நினைவிடத்தை ஒரு கோவில் போல பிரேமலதா விஜயகாந்த் பராமரித்து வருகிறார். பின் விஜயகாந்த் எப்போதும் தன்னுடன் இருக்கும் விதமாக விஜயகாந்த் சிரித்தபடி இருக்கும் புகைப்படத்தை தான் டாட்டூவாக பிரேமலதா போட்டு இருக்கிறார். அந்த புகைப்படம் எல்லாம் இணையத்தில் வைரலானது.

கண்கலங்கி அழுத வீடியோ:

இந்த நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பிரேமலதா விஜயகாந்த் கலந்திருக்கிறார். அப்போது விஜயகாந்த் உடைய ஆடியிலே சேதி சொல்லி ஆவணியில் தேதி சொன்ன பாடலை பாடியதைக் கேட்டு கண்ணீர் மல்க அழுது இருக்கிறார் பிரேமலதா. தற்போது இந்த வீடியோ தான் இணையத்தில் வைரலாக்கப்பட்டு வருகிறது. இதை பார்த்த பலருமே பிரேமலதாவிற்கு ஆறுதல் கூறி வருகிறார்கள்.

Advertisement