கேப்டன் மேல என்ன வன்மம்? ஏன் இப்படி பண்றீங்க? ஒரு மனைவியா எனக்கு எப்படி இருக்கும் – கண்ணீருடன் பேசிய பிரேமலதா.

0
480
- Advertisement -

கடந்த சில வாரங்களாகவே சோசியல் மீடியா முழுவதும் விஜயகாந்தின் உடல்நிலை குறித்த செய்தி தான் வைரலாகி வருகிறது. சில ஆண்டுகளாக விஜயகாந்த் உடல் நல பிரச்சனை காரணமாக சினிமா மற்றும் அரசியல் என இரண்டிலும் விலகி சிகிச்சை பெற்று வருகிறார். அதோடு இவர் அடிக்கடி தொடர் சிகிச்சைக்கு சென்று வருகிறார். இப்படி இருக்கும் கடந்த மாதம் விஜயகாந்த் அவர்கள் இருமல், சளி அதிகமாக இருந்ததால் அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டு இருந்தது.

-விளம்பரம்-

இதனால் இவரை நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்திருக்கிறார்கள். பின் விஜயகாந்தின் நுரையீரலில் பிரச்சனை இருப்பதால் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும்,விஜயகாந்தின் உடலில் முன்னேற்றம் ஏற்பட்டது. ஆனால், கடந்த 24 மணி நேரமாக அவருடைய உடல்நிலை சீராக இல்லை. அவருக்கு நுரையலுக்கான சிகிச்சை வழங்கப்பட வேண்டும். இதனால் அவர் 14 நாட்கள் மருத்துவமனையில் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியிருந்தார்கள். இதை அறிந்த விஜயகாந்தின் ரசிகர்களும், தொண்டர்களும் கண்ணீர் மல்க கதறி அழுது இருக்கிறார்கள்.

- Advertisement -

விஜயகாந்த் உடல்நிலை:

அது மட்டும் இல்லாமல் பலருமே கோயில்களில் விஜயகாந்த் உடல் நலம் தேறி மீண்டு வர வேண்டும் என்று பிரார்த்தனைகளையும் அபிஷேகங்களையும் செய்து கொண்டு இருக்கிறார்கள். பின் அவர் உயிருக்கு ஆபத்தான கட்டத்தை தாண்டி இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது. பிரபலங்கள் பலருமே விஜயகாந்தை நேரில் பார்க்க சென்றிருக்கிறார்கள். மேலும், விஜயகாந்த் உடல்நிலை தொடர்பாக பிரேமலதாவும் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அதில் அவர், விஜயகாந்த் நன்றாக இருக்கிறார். கூடிய விரைவில் வீடு திரும்பவார் என்று அவர் உடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பதிவிட்டார்.

சோசியல் மீடியா சர்ச்சை:

இருந்தாலும் விஜயகாந்தின் உடல்நிலை குறித்து தவறான செய்திகள் எல்லாம் வைரலாகி வருகிறது. இந்த நிலையில் இது தொடர்பாக பிரேமலதா செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்திருக்கிறார். அதில் அவர், நீங்கள் யாரும் விஜயகாந்த் உடன் இருப்பதில்லை. நான் மட்டும் தான் அவருடன் இருக்கிறேன். அவர் எப்படி இருக்கிறார் என்பது எனக்கு மட்டும் தான் தெரியும். அவருடைய உடல்நிலை குறித்து நான் தினமும் சொல்லிக் கொண்டு தான் இருக்கிறேன். ஆனாலும், சிலர் தேவையில்லாமல் வதந்திகளை பரப்பி வருகிறார்கள்.

-விளம்பரம்-

பிரேமலதா பேட்டி:

தவறாக ஒரு செய்தியை பரப்புவதற்கு முன்பு யாராக இருந்தாலும் எங்கள் தலைமை கழகத்தை தொடர்பு கொண்டு விஜயகாந்தின் உடல்நிலை குறித்து விளக்கம் கேளுங்கள். அதை விடுத்து தேவையில்லாமல் வதந்திகளை பரப்பாதீர்கள். இதனால் நான் அதிகமாக பாதிக்கப்பட்டேன். கேப்டன் மீது உங்களுக்கு அப்படி என்ன வன்மம் என்று எனக்குப் புரியவில்லை. அவர் நலமாக தான் இருக்கிறார். விரைவிலேயே வீடும் திரும்புவார். இதை நான் பல இடங்களில் சொல்லி இருக்கிறேன். இருந்தாலும், சிலர் திட்டமிட்டு அவரை குறித்து தவறான வதந்திகளை பரப்புகிறார்கள்.

விஜயகாந்த் குறித்து சொன்னது:

நன்றாக இருக்கும் மனிதரைப் பற்றி இப்படி சொல்வது ஒரு மனைவியாக எனக்கும் தொண்டர்களுக்கும் எந்த அளவுக்கு பாதிக்கும் என்பதை கொஞ்சம் நினைத்துப் பாருங்கள். உங்கள் வீட்டில் யாருக்காவது இந்த மாதிரி உடல்நிலை குறைவு ஏற்பட்டிருந்தால் இப்படித்தான் தகவல்களை பரப்புவீர்களா? தயவு செய்து பொய்யான வதந்திகளை பரப்பாதீர்கள். அதேபோல் திருமணமாகாத எங்களுடைய இரு பிள்ளைகளுக்கு திருமணம் நடந்து விட்டதாக சொல்கிறீர்கள். நன்றாக இருக்கும் விஜயகாந்த் குறித்து கேவலமான, மோசமான தகவல்களை பரப்பி வருகிறீர்கள். இதனால்தான் நான் விஜயகாந்துடன் இருக்கும் புகைப்படங்களையும் வெளியிட்டேன். இன்னும் இரண்டு, மூன்று நாட்களில் விஜயகாந்த் வீடு திரும்புவார் என்று கூறியிருக்கிறார்.

Advertisement