நாற்காலியில் இருந்து சரிந்து விழுந்த கேப்டன் – தாங்கி பிடித்த பிரேமலதா. கலங்க வைக்கும் வீடியோ இதோ

0
210
- Advertisement -

விஜயகாந்த் வீடு திரும்பிய சில நாட்களிலேயே தேமுதிக கட்சியில் பிரேமலதாவிற்கு வழங்கப்பட்டிருக்கும் முக்கிய பதவி குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கோலிவுட்டில் கேப்டன் என்ற அந்தஸ்துடன் உச்ச நடிகராக திகழ்ந்தவர் விஜயகாந்த். இவர் நடிகர் மட்டும் இல்லாமல் அரசியல்வாதியும் ஆவார். இவர் தன்னுடைய நடிப்புத் திறமை மூலம் சினிமா உலகில் மட்டும் இல்லாமல் மக்கள் மத்தியிலும் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்து இருக்கிறார்.

-விளம்பரம்-

80 தொடங்கி 2k வரை பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தார் விஜயகாந்த். பின் அவர் சினிமாவில் இருந்து விலகி முழு நேர அரசியலில் களமிறங்கி இருந்தார். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக இவர் உடல் நல குறைவின் காரணமாக சினிமா மற்றும் அரசியல் என இரண்டிலும் விலகி சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் தேமுதிக கட்சியை அவருடைய மனைவி பிரேமலதா மற்றும் மகன்கள் தான் பார்த்து கொண்டு வருகின்றனர். இப்படி இருக்கும் நிலையில் கடந்த மாதம் விஜயகாந்த் அவர்கள் இருமல், சளி அதிகமாக உள்ளதால் அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டு இருந்தது.

- Advertisement -

விஜயகாந்த் உடல்நிலை:

இதனால் இவரை நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்திருக்கிறார்கள். பின் விஜயகாந்தின் நுரையீரலில் பிரச்சனை இருப்பதால் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு இருந்தது. இதை அறிந்த விஜயகாந்தின் ரசிகர்களும், தொண்டர்களும் கண்ணீர் மல்க கதறி அழுது இருக்கிறார்கள். அது மட்டும் இல்லாமல் பலருமே கோயில்களில் விஜயகாந்த் உடல் நலம் தேறி மீண்டு வர வேண்டும் என்று பிரார்த்தனைகளையும் அபிஷேகங்களையும் செய்து இருந்தார்கள்.

பிரேமலதா பேட்டி:

கடந்த சில வாரமாகவே சோசியல் மீடியா முழுவதும் விஜயகாந்த் உடல்நிலை குறித்த செய்தி தான் வைரலாகி வருகிறது. அதில் விஜயகாந்த் உடல்நிலை குறித்து மோசமான வதந்திகள் பரவி இருந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த பிரேமலதா செய்தியாளர்களை சந்தித்து விஜயகாந்த் உடல்நிலை குறித்து பேட்டி அளித்து இருந்தார். பின் விஜயகாந்த் உயிருக்கு ஆபத்தான கட்டத்தை தாண்டி இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது. பிரபலங்கள் பலருமே விஜயகாந்தை நேரில் பார்க்க சென்று இருந்தார்கள்.

-விளம்பரம்-

பிரேமலதா பதவி:

மேலும், கடந்த 11-ம் தேதி விஜயகாந்த் வீடு திரும்பி இருக்கிறார். அவர் பூணமாக குணமடைந்து விட்டதாக அறிவிக்கப்பட்டிருந்தார்கள். இப்படி இருக்கும் நிலையில் தேமுதிக கட்சியின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றிருக்கிறது. இந்த கூட்டம் திருவேற்காட்டில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் பொருளாளராக இருக்கும் பிரேமலதாவிற்கு தற்போது தேமுதிக கட்சியின் பொதுச் செயலாளராக நியமனம் செய்திருக்கிறார்கள்.

விஜயகாந்த் வீடியோ:

இந்த தீர்மானம் நிறைவேறிய உடனே விஜயகாந்த் காலில் விழுந்து பிரேமலதா ஆசி பெற்று இருக்கிறார். பின் விஜயகாந்த் சேரில் இருந்து சரிந்து கீழே விழப் பார்க்கிறார். உடனே நிர்வாகிகளும், பிரேமலதாவும் அவரை பிடித்து கொள்கிறார்கள். அவரால் பேலன்ஸ் செய்து கூட உட்கார முடியவில்லை. அந்த அளவிற்கு அவருடைய உடல்நிலை மோசமாக தான் இருக்கிறது. கண் கலங்க வைக்கும் இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement